நாளை தைப்பூசம், நாளை மறுநாள் (26.01.2024) குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு தொடர் 4 நாட்கள் விடுமுறை காரணமாக மக்கள் அனைவரும் அவர்களின் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்கள் செல்வார்கள். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் மற்றும் பௌர்ணமியும் ஒன்றாக சேர்ந்து வரும் நாள் தான் தைப்பூசமாக கொண்டப்படுகிறது. இந்த திருநாள் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கூறப்படுகிறது. இந்த வருடம் தைப்பூசம் ஆனது நாளை கொண்டாடப்பட உள்ளது இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தைப்பூசத்தை தொடர்ந்து நாளை மறுநாள் குடியரசு தினம் அதன் பிறகு சனி மற்றும் ஞாயிறு தொடர் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக முருகன் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில்களுக்கும் சுற்றுலா இடங்களுக்கும் செல்வார்கள். இதனால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் 580 சிறப்பு பேருந்துகளை (thaipusam special buses 2024) இயக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் இன்றும், நாளையும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் கோவை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆக மொத்தம் தமிழக்தில் 580 சிறப்புப் (thaipusam sirappu perunthu 2024) பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் விடுமுறைகள் முடிந்து வரும் ஞாயிற்க்கிழமை மக்கள் சென்னை மற்றும் பெங்களூர் திரும்புவதற்காக பயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க்: Thaipusam 2024: தைப்பூசம் பற்றிய சிறப்பு தகவல்கள்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…