மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் தனது 82 வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் மாரடைப்பால் மேல்மருவத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அக்டோபர் 19 உயிரிழந்துவிட்டார்.
ஆன்மீக சீர்த்திருத்தவாதி, ஆன்மீக சொற்பொழிவாளர். பக்தர்களால் அன்போடு “அம்மா” என்று அழைக்கப்பெற்றவர் பங்காரு அடிகளார். அவரது இறப்பு செய்தி இலட்சக்கணக்கான பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பங்காரு அடிகளார் 2019- ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ பட்டம் பெற்றார். ஆரம்பக்காலத்தில் ஆசிரியராக பணிபுரிந்தார். மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களை தொடங்கினார். அது மட்டுமல்லாமல் பல்வேறு சமூக சேவைகளை செய்துவந்தார்.
கருவறையில் பெண்களும் வழிபடலாம் என்று ஆன்மீகத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆரம்பகாலத்தில் ஒரு கொட்டகை அமைத்து அதில் அம்மனை வைத்து வழிபட்டு வந்தநிலையில் காலம் செல்ல செல்ல பக்கதர்களால் நம்பிக்கையும், கூட்டமும் அதிகரித்தது.
அவர் மறைவையொட்டி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இன்று மதுராங்கம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேல்வருத்தூரில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் உள்ளனர். முக்கிய பிரமுகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பங்காரு அடிகளாரின் உடலுக்கு இன்று காலை 9 மணியளவில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். முதல்வர் அவர்கள் நேற்று அறிவித்த இரங்கல் செய்தியில் பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…