Bharathidasan Biography in Tamil: “தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர். தமிழ் இலக்கண, இலக்கியங்களை முறையாக கற்று, தமிழ் கவிதைகளில் புரட்சி செய்தவர். கவிஞர், தமிழாசிரியர், அரசியல்வாதி, திரைக்கதாசிரியர், எழுத்தாளர் என பல்துறைகளில் சிறந்து விளங்கியவர். தமிழ் மொழிக்கு இவர் ஆற்றிய பங்கு, அதன் மூலம் தமிழின் இனிமையை மக்களிடம் கொண்டு சென்றவர். இந்த புகழுக்கு சொந்தக்காரர் புதுச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலரான பாவேந்தர் பாரதிதாசன்.
நாம் இந்த பதிவில் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி முழுமையாக பார்க்க உள்ளோம். அவர் தமிழ் மொழிக்கு ஆற்றி தொண்டு, அரசியலில் அவருடைய பயணம் போன்றவற்றை (Bharathidasan vazhkai varalaru in Tamil) பார்க்க உள்ளோம்.
பிறப்பு | ஏப்ரல் 29, 1891 |
பிறந்த ஊர் | புதுவை (புதுச்சேரி) |
பெற்றோர் | கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் |
திருமணம் | 1920-ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார். |
இறப்பு | ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி, 1964-ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். |
புரட்சிக்கவி பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில் கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் சுப்புரத்தினம். இவரின் தந்தை அவ்வூரில் மிகப்பெரிய வணிகராக இருந்தார். இவர் தனது தந்தையின் பெயரின் முதல் பாதியை இணைத்து பின்நாளில் இவர் “கனகசுப்புரத்தினம்” என்று (Bharathidasan Life History In Tamil) அழைக்கப்பட்டார்.
பாரதிதாசனின் சிறுவயதில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இருந்ததால், இவர் சிறு வயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் இவருக்கு தமிழ் மொழி மீது அதீத பற்று இருந்தன் காரணமாக இவர் தமிழ் மொழியினை முறையாக கற்க ஆரம்பித்தார். இவர் சிறுவயதிலேயே தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியங்கள் மற்றும் சைவ சித்தாத்தங்களை முறையாக கற்று தேர்ந்தார். சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார். அதன் பின்னர் இவர் கல்லூரி படிப்பில் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு கல்வி கற்றக ஆரம்பித்தார்.இவர் இளங்கலை தமிழில் பல்கலைக்கழத்தில் முதல் மாணவராக தேர்ச்சிப்பெற்றார். தமிழ் மொழியில் இத்தகைய புலமை அவருக்கு இருந்ததால் 1919 காரைக்காலில் உள்ள அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக பதவியேற்றார்.
பாரதிதாசன் தமிழாசிரியராக பணியாற்றி கொண்டிருக்கும் போதே 1920 -ஆம் ஆண்டு பழநி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதற்கு பிறகு 3 பெண் குழந்தைகள் பிறந்தன. மகன் பெயர் மன்னர்மன்னன், பெண் குழந்தைகள் பெயர்கள், சரஸ்வதி, வசந்தா, ரமணி.
பாரதிதாசன் அவர் நண்பர் திருமணவிழாவிற்கு சென்றபோது, ஒரு பாடல் ஒன்றை அங்கு பாடினார். அந்த திருமணவிழாவிற்கு பாரதியாரும் வந்திருந்தது பாரதிதாசனுக்கு தெரியாது. பாரதிதாசன் பாடிய பாடல் மிகவும் பாரதியாருக்கு பிடித்துவிட்டது. பிறகு பாரதியார் அவரை சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தார். பாராட்டுகள் கிடைத்தது மட்டுமல்லாமல் அவருடன் நட்பும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாரதியார் தான் நடத்தி வந்த “சுதேசிமித்ரன்” என்னும் இதழில் பாரதிதாசன் எழுதிய பாடலை வெளியிட்டுள்ளார். இதன் பின்னர் கனகசுப்புரத்தினம் என்னும் அவர் பெயரை பாரதிதாசன் (About Bharathidasan in tamil) என்று மாற்றிக்கொண்டார்.
வ.எண் | நூலின் பெயர் | வகை |
1 | அகத்தியன்விட்ட புதுக்கரடி | காவியம் |
2 | சத்திமுத்தப்புலவர் | நாடகம் |
3 | இன்பக்கடல் | நாடகம் |
4 | அமிழ்து எது? | கவிதை |
5 | அமைதி | நாடகம் |
6 | அழகின் சிரிப்பு | கவிதை |
7 | இசையமுது (முதலாம் தொகுதி) | இசைப்பாடல் |
8 | இசையமுது (இரண்டாம் தொகுதி) | இசைப்பாடல் |
9 | இந்தி எதிர்ப்புப் பாடல்கள் | இசைப்பாடல் |
10 | இரணியன் அல்லது இணையற்ற வீரன் | நாடகம் |
11 | இருண்டவீடு | காவியம் |
12 | இலக்கியக் கோலங்கள் | குறிப்புகள் |
13 | இளைஞர் இலக்கியம் | கவிதை |
14 | உலகம் உன் உயிர் | கவிதை |
15 | உலகுக்கோர் ஐந்தொழுக்கம் | கட்டுரைகள் |
16 | எதிர்பாராத முத்தம் | கவிதை |
17 | எது இசை? | சொற்பொழிவும் பாடல்களும் |
18 | ஏழைகள் சிரிக்கிறார்கள் | சிறுகதைகள் |
19 | ஏற்றப் பாட்டு | இசைப்பாடல் |
20 | ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது | இசைப்பாடல் |
21 | கடற்மேற் குமிழிகள் | காவியம் |
22 | கண்ணகி புரட்சிக் காப்பியம் | காவியம் |
23 | கதர் இராட்டினப்பாட்டு | இசைப்பாடல் |
24 | கவிஞர் பேசுகிறார் | சொற்பொழிவு |
25 | கழைக்கூத்தியின் காதல் | நாடகம் |
26 | கற்கண்டு | நாடகம் |
27 | காதலா? கடமையா? | காவியம் |
28 | காதல் நினைவுகள் | கவிதை |
29 | காதல் பாடல்கள் | கவிதை |
30 | குடும்பவிளக்கு – முதல் பகுதி | காவியம் |
31 | குடும்ப விளக்கு – 2ஆம் பகுதி | காவியம் |
32 | குடும்ப விளக்கு – 3ஆம் பகுதி | காவியம் |
33 | குடும்ப விளக்கு – 4ஆம் பகுதி | காவியம் |
34 | குடும்ப விளக்கு – 5ஆம் பகுதி | காவியம் |
35 | குமரகுருபரர் | நாடகம் |
36 | குயில் பாடல்கள் | கவிதை |
37 | குறிஞ்சித்திட்டு | காவியம் |
38 | கேட்டலும் கிளத்தலும் | கேள்வி-பதில் |
39 | கோயில் இருகோணங்கள் | நாடகம் |
40 | சஞ்சீவி பர்வதத்தின் சாரல் | காவியம் |
41 | சிரிக்கும் சிந்தனைகள் | துணுக்குகள் |
42 | சிறுவர் சிறுமியர் தேசியகீதம் | கவிதை |
43 | சுயமரியாதைச் சுடர் | பாட்டு |
44 | செளமியன் | நாடகம் |
45 | சேரதாண்டவம் | நாடகம் |
46 | தமிழச்சியின் கத்தி | காவியம் |
47 | தமிழியக்கம் | கவிதை |
48 | தமிழுக்கு அமிழ்தென்று பேர் | கவிதை |
49 | தலைமலை கண்ட தேவர் | நாடகம் |
50 | தாயின் மேல் ஆணை | கவிதை |
51 | தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு | பாட்டு |
52 | திராவிடர் திருப்பாடல் | கவிதை |
53 | திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் | கவிதை |
54 | தேனருவி | இசைப்பாடல் |
55 | தொண்டர் வழிநடைப் பாட்டு | பாட்டு |
56 | நல்லதீர்ப்பு | நாடகம் |
57 | நாள் மலர்கள் | கவிதை |
58 | படித்த பெண்கள் | நாடகம் |
59 | பன்மணித்திரள் | கவிதை |
60 | பாட்டுக்கு இலக்கணம் | இலக்கணம் |
61 | பாண்டியன் பரிசு | காவியம் |
62 | பாரதிதாசன் ஆத்திசூடி | கவிதை |
63 | பாரதிதாசன் கதைகள் | சிறுகதை |
64 | பாரதிதாசனின் கடிதங்கள் | கடிதங்கள் |
65 | பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி) | கவிதை |
66 | பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி) | கவிதை |
67 | பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி) | கவிதை |
68 | பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி) | கவிதை |
69 | பாரதிதாசன் நாடகங்கள் | கவிதை |
70 | பாரதிதாசனின் புதிய நாடகங்கள் | நாடகங்கள் |
71 | பாரதிதாசனின் புதினங்கள் | புதினம் |
72 | பாரதிதாசன் பேசுகிறார் | சொற்பொழிவு |
73 | பாரதிதாசன் திருக்குறள் உரை | உரை |
74 | பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ் | திரைக்கதை |
75 | பிசிராந்தையார் | நாடகம் |
76 | புகழ்மலர்கள் | கவிதை |
77 | புரட்சிக் கவி | கவிதை |
78 | பொங்கல் வாழ்த்துக் குவியல் | கவிதை |
79 | மணிமேகலை வெண்பா | கவிதை |
80 | மயிலம் சுப்பிரமணியர் துதியமுது | இசைப் பாடல் |
81 | யிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம் | கவிதை |
82 | மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு | இசைப்பாடல் |
83 | மானுடம் போற்று | கட்டுரைகள் |
84 | முல்லைக்காடு | கவிதை |
85 | வந்தவர் மொழியா? | இலக்கணம் |
86 | வேங்கையே எழுக | கவிதை |
பாரதிதாசன் தமிழ் தொண்டிற்கு மட்டுமல்லாமல், அரசியலிலும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிணார். இதன் காரணமாக 1954 ஆம் ஆண்டு புதுவை சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி கண்டார். பாரதிதாசனுக்கு பெரியாரின் கொள்கைகள் மீது மிகுந்த பற்று இருந்தது. இதன் காரணமாக அவர் அவரின் கடவுள் மறுப்பு கொள்கைகளை ஆதரித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் கடவுள் மறுப்பு கொள்கைகளை அவர் கவிதைகளின் மூலம் வெளிப்படுத்தி வந்தார்.
மீண்டும் பாரதிதாசன் 1960 ஆம் ஆண்டு புதுவை சட்டமன்ற தேர்தலில் நின்றார். ஆனால் அந்தாண்டு அவர் தோல்வியை தழுவினார்.
பாரதிதாசன் அரசியலில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்து வந்தார். அவர் மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வந்தார். இதனை கண்ட அறிஞர் அண்ணா பாரதிதாசனை பாராட்டி புரட்சிக்கவி என்னும் அடைமொழியை கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.25,000 சன்மானமும் கொடுத்தார்.
மேலும் படிக்க: Kamarajar History in Tamil..! காமராஜர் வாழ்க்கை வரலாறு..! |
காலவரிசை | விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் |
1946 | இவர் எழுதிய அமைதி மற்றும் ஊமை என்ற நாடகத்திற்காக தங்கக்கிளி பரிசு கொடுக்கப்பட்டது. |
1946 | புரட்சிக்கவி என்னும் பட்டம் அறிஞர் அண்ணா வழங்கியுள்ளார். |
1970 | பிசிராந்தையார் நாடகத்திற்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. |
1990 | இவருடைய படைப்புகள் தமிழக அரசினால் உடைமையாக்கப்பட்டன. |
2001 | சென்னை தபால் துறை இவரது நினைனவாக ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது. |
தமிழக அரசு ஆண்டுதோறும் ஒரு தமிழக் கவிஞருக்கு பாரதிதாசன் என்னும் விருதை வழங்கி வருகிறது. | |
இவரது பெயரில் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழம் இடம்பெற்றுள்ளது. (Bharathidasan University) |
1937-ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் அவரது இறுதிநாள் வரை திரைத்துறைக்குக் கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு என பல்வேறு கோணங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார். திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார்.
தமிழுக்காக தனது பங்களிப்பை கொடுத்த பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964ஆம் ஆண்டில் இயற்கை (Bharathidasan History) எய்தினார்.
புரட்சி கவிஞர்’ என்ற பட்டத்தை பெரியாரும் ‘புரட்சிக்கவி’ என்ற பட்டத்தை அறிஞர் அண்ணாவும் வழங்கினார்கள்.
பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
பாவேந்தர்’ என்னும் பட்டம் தமிழ் மக்கள் இவர்மீது கொண்ட அன்பால், இயல்பாகவே மக்களால் வழங்கப்பட்டது.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…