உலகளவில் அதிக பல செய்தி பரிமாற்று செயலிகள் இருந்தாலும் அதிக அளவிலான பயனர்களால் பயன்படுத்தப்படும் ஒரு செய்தி பரிமாற்ற செயலி தான் வாட்ஸ்அப். இந்த செயலியின் மூலமாக மக்கள் ஆடியோ கால், வீடியோ கால், இணைய வாயிலாக குரூப்கள் மூலம் செய்திகள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல தகவல்களை பரிமாறிக்கொள்ளகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம் இந்த செயலி பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருப்பதும் நம்முடைய தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதும் தான். இந்த செயலியில் பின்பற்றப்படும் முக்கிய அம்சம் தான் நாம் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மற்றொருவர் பார்க்க கூடாது என்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் (End to End Encryption) வசதி.
இந்த வசதியை எதிர்க்கும் வகையில் அண்மையில் மத்திய அரசு ஒரு புதிய தொழில்நுட்ப சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மத்திய தொழில்நுட்ப பிரிவு சட்டம் 2021-ன் படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி போலி செய்திகளையும் மற்றும் தகவல்களை நாட்டின் பாதுகாப்புக்காக கண்டறிய வேண்டும் என்றும், மேலும் செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால் இதனை வாட்ஸ்அப் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் செயலிகள் தரப்பில் வழக்கு (WhatsApp Recent Case) தொடரப்பட்டது. WhatsApp தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறுகையில், தொழில்நுட்ப நிறுவனங்களிடம் எந்தவித ஆலோசனையும் இன்றி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் மேலும் இது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயம் என்றும் கூறினார்.
தொடர்ந்து வாதிட்ட அவர் மத்திய தொழில்நுட்ப பிரிவு சட்டம் 2021-ன் பிரிவு 14,19, 21 ஆகியவை தனிமனித உரிமைக்கு எதிரானவை என்று கூறினார். மேலும் இந்த சட்டத்தின் படி எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் (End to End Encryption) வசதியை மத்திய அரசு நீக்க கூறினால் அது தனிமனித பாதுகாப்புக்கு எதிராக இருக்கும் என்று கூறினார். மேலும் இவ்வாறு நடைபெற்றால் நாங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்படும் (WhatsApp Warning) என்றும் அவர் கூறியுள்ளார். இந்த WhatsApp Case வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மட்டமின்றி உலக அளவில் பார்த்தாலும் சிக்கன் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் அசைவம் தான் இந்த சிக்கன். நாம் இதுவரை சிக்கனை வைத்து பல விதமான ரெசிபிகள் செய்து இருப்போம். அனைத்து ரெசிபிகளும் சுவைமிக்கதாக தான் இருக்கும். சிக்கனை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் அது நன்றாக தான் இருக்கும். இதன் காரணமாக தான் அனைவருக்கும் சிக்கன் மிகவும் பிடித்த அசைவமாக உள்ளது. இப்போது நாம் அந்த சிக்கனை வைத்து சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி (How to Make Chicken Ghee Roast in Tamil)
தேவையான பொருட்கள் (Chicken Ghee Roast Ingredients)
சிக்கனை ஊறவைப்பதற்கு
சிக்கன் – 1/2 கிலோ
எலுமிச்சை பழச்சாறு –1/2 பழம்
கெட்டி தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
மசாலா அரைக்க
வர மிளகாய் – 5-6
வரமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
மிளகு – 1/2 ஸ்பூன்
வெந்தயம் – சிறிதளவு
பூண்டு – 5 பல்
ஊறவைத்த புளி – சிறிதளவு
சிக்கன் நெய் ரோஸ்ட் செய்ய
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
ஊறவைத்த சிக்கன் – அரை கிலோ
வெல்லம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பில்லை – தேவையான அளவு
சிக்கன் நெய் ரோஸ்ட் செய்முறை (Chicken Ghee Roast Recipe in Tamil)
சிக்கனை ஊறவைத்தல்
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சிக்கன், எலுமிச்சை பழச்சாறு, தயிர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசைந்து, அதை ஒரு மணி நேரம் வரை நன்றாக ஊறவைக்க வேண்டும்.
மசாலா அரைக்க
ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் எண்ணெய் சேர்க்காமல் வர மிளகாய், வரமல்லி, மிளகு, சோம்பு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வாசனை வரும் வரை நன்றாக வறுக்கவேண்டும். மிதமான தீயில் வறுக்க வேண்டும். இப்போது அவற்றை நன்றாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு பூண்டு, ஊறவைத்த புளி ஆகியவற்றை சேர்த்து அதோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக விழுதாக அரைக்கவேண்டும்.
சிக்கன் நெய் ரோஸ்ட்
முதலில் ஒரு அகலமான கடாயை எடுத்துக்கொள்ளவும். அதில் தேவையான அளவி நெய் சேர்த்து அதில் நாம் ஒரு மணி நேரம் ஊறவைத்த சிக்கனை சேர்க்க வேண்டும். இதனை 10 நிமிடம் வரை நன்றாக வறுக்க வேண்டும்.
இப்போது சிக்கனில் தண்ணீர் விட்டு இருக்கும். அதிலிருந்து சிக்கன் துண்டுகளை எடுத்து தனியே வைக்கவேண்டும்.
இப்போது அந்த கடாயில் உள்ள மசாலா நீரை கொதிக்கவிடவேண்டும். அந்த நீர் நன்றாக கொதித்த பிறகு அதில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
பின்னர் இதில் சிறிதளவு வெல்லம் சேர்க்க வேண்டும். அதன் பிறக நெய் சேர்த்து 5 வரை நிமிடம் கொதிக்கவிடவேண்டும்.
இப்போது மசாலாவில் இருந்து நெய் பிரிய தொடங்கியதும், நாம் எடுத்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாவில் ஈரம் வற்றும் வரை 20 நிமிடம் கிளற வேண்டும். இப்போது இதில் கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.
நாம் இப்பதிவில் அனைவரும் விரும்பி உண்ணும் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி என்பது குறித்து பார்த்துள்ளோம்.
நாவில் எச்சில் ஊறும் சுவையில் Chicken Ghee Roast... சுலபமான முறையில் செய்வது எப்படி..!
சிக்கனை வைத்து சிக்கன் நெய் ரோஸ்ட் (Chicken Ghee Roast) செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
கல்லூரி படத்தில் நடித்த ஷோபனாவை தான் தற்போது வரை அனைவரும் பிடிச்சிருக்கு என்று சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் (Tamanna’s opinion about Kalloori film) தெரிவித்திருந்தார். கல்லூரி படம் தற்போது வரை அனைவருக்கும் பிடித்த படமாக தான் உள்ளது. கிராமத்து சூழலை மிக அழகாக எடுத்துரைக்கும் படமாக, ஒரு கல்லூரியில் நடக்கும் நினைவுகளை அழகாக வெளிப்படுத்தும் திரைப்படம் தான் கல்லூரி படம்.
இந்த திரைப்படம் 2007 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படத்தின் நினைவுகளை நடிகை தமன்னா பகிர்ந்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா, அகில், ஹேமா, மாயாரெட்டி, அருண்குமார், அலெக்ஸ், பரணி, பாலமுருகன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.
நடிகை தமன்னா, ஷோபனா என்ற அமைதியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். கிராமத்தில் நண்பர்களின் கூட்டத்தில் சேரும் ஒரு நகரத்து பெண்ணாக பெங்களூரில் இருந்து வந்த ஷோபனா என்ற கதாபாத்திரத்தை அவர் ஏற்று நடித்திருப்பார். அதில் மிகவும் அழகாகவும், அமைதியான பெண்ணாகவும், தனது சிறப்பான நடிப்பை ஏற்று நடித்திருப்பார்.
சமீபத்தில் நடிந்த நேர்காணலில் தமன்னா (kalloori movie tamanna) தன்னுடைய திரைப்பயணத்தில் சிறப்பாக அமைந்த ஒரு கதாபாத்திரம் ஒன்று தான் கல்லூரியில் ஷோபனா என்ற கதாபாத்திரம். அந்த படத்தில் நான் நடிக்கும் போது 17 வயது தான் ஆனது. அந்த படத்தில் எந்த மேக்ப் இல்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண பெண்ணாக அதில் நடித்திருப்பேன். அந்த படம் ஒரு யதர்தமான படமாக எனக்கு அமைந்திருந்தது. அதில் உள்ள கதாபாத்திரத்தை அப்படியே புரிந்துக்கொண்டு உணர்வுப்பூர்வமாக நடித்தது தான் அந்த கதாபாத்திரம்.
தற்போது அவர் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 படத்தின் கதாநாயகியாக நடித்துளார். இந்த படத்தில் ராஷி கண்ணாவும் இணைந்து நடித்துள்ளார். மேலும் சிம்ரன், குஷ்பு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் மே 4 நாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் மே 3 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரண்மனை 4 படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் தான் விராட் கோலி. இவர் பல வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் பல சீசன்களாக ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் நேற்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆர்சிபி அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்நிலையில் அணியின் முக்கிய வீரரான விராட் கோலி தனது சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தினார். மேலும் இவரது இந்த சிறந்த விளையாட்டின் மூலம் புதிய சாதனை ஒன்றையும் அவர் இப்போட்டியில் படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் பஞ்சாப் வீரர் பேஸ்ட்ரோவின் கேட்சை விராட் கோலி பிடித்தார். இந்த கேட்சின் மூலம் ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். மேலும் இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரைனா 172 கேட்சுகளை பிடித்து முதலிடத்தில் இருந்தார்.
ஆனால் தற்போது விராட் கோலி 173 கேட்சுகளை பிடித்து சுரேஷ் ரைனாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதலிடத்தில் உள்ளார் மேலும் இந்திய அணியின் தற்போதைக கேப்டனான ரோகித் ஷர்மா 167 கேட்சுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நவீன காலத்தில் ஆன்லைன் பேமெண்ட்கள் மிகவும் பிரபலமாகிவிட்டது. இப்போது அனைவரும் இதுபோன்ற ஆன்லைன் முறைகளில் தான் பணபறிமாற்றம் அதிக அளவில் செய்கிறோம்.இந்நிலையில் நம்மில் பலரும் யுபிஐ (UPI Payment Method) மூலம் பண பரிமாற்றம் செய்யும் போது ஒரு முறையாவது தவறுதலாக அல்லது கவனகுறைவாக மாற்றி அனுப்பி இருக்கலாம். அப்போது என்ன செய்வது என்று அறியாமல் பலரும் இருந்து இருப்போம்.
இப்போது இந்த பதிவில் நாம் தவறுதலாக பணம் அனுப்பி விட்டால் (UPI Payment Mistake) என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். நாம் இதற்கு முன் நமக்கு தெரியாதவர்களுக்கு பணத்தை அனுப்பிவிட்டால் அந்த பணத்தை நாம் மீட்டெடுக்க மிக முக்கியமான படி என்னவென்றால் நாம் செய்த பரிமாற்றம் தவறானது என்று நிரூபிக்கப்பட்டவுடன் அதனை சரி செய்வது வங்கியின் பொறுப்பாகும். இதை நாம் அறிய வேண்டும்.
இது குறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான தொடங்கப்பட்ட Ombudsman என்னும் திட்டத்தின் படி நம் குறைகளை நாம் வங்கி நிறுவாகத்திடம் தொரிவிக்கலாம். மேலும் சரியான நேரத்தில் புகார் அளித்தால் உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்.
UPI Helpline Numbers
Phone Pe
1800-419-0157
Google Pay
080-68727374
Paytm
0120-4456-456
BHIM
18001201740
இந்த எண்களை தொடர்பு கொண்டு நாம் நம்முடைய புகார்களை தெரிவிக்கலாம். இதன் மூலம் நம் பணம் மீண்டும் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் நாம் செய்யும் தவறாக UPI Transaction மூலம் இழக்கும் பணத்தை நாம் மீண்டும் பெற்றகொள்ளலாம்.
Rose Milk Rasgulla Recipe: ரோஸ் மில்க் ரசகுல்லா செய்வது எப்படி?இனிப்பு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அதுவும் பால் கொண்டு செய்யப்படும் இனிப்பு என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நாம் அனைவரும் ரோஸ் மில்க் குடித்திருப்போம் அதேபோல் ரசகுல்லா சாப்டிருப்போம். இரண்டையும் சேர்த்த ரோஸ் மில்க் ரசகுல்லா சாப்பிட்டு உள்ளீர்களா. இந்த ரோஸ் மில்க் ரசகுல்லா செய்வது எப்படி (Rose Milk Rasgulla Seivathu Eppadi) என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் இந்த பதிவில் செய்ய உள்ள ரோஸ் மில்க் ரசகுல்லா மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகையாகும். இந்த ரசகுல்லா இனிப்பு வகையானது இந்திய துணைகண்டத்தில் மிகவும் பிரபலமான இனிப்பு ஆகும். இந்த ரோஸ் மில்க் ரசகுல்லாவை அனைவரும் Rasgulla Pink எனவும் அழைப்பார்கள்.
இந்த ரசகுல்லா மற்றும் ரோஸ் மில்க் இரண்டும் பாலை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு. அதுவும் இது போன்ற இனிப்பு வகைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது இந்த ரோஸ் மில்க் ரசகுல்லா செய்வது எப்படி (How to Make Rose Milk Rasgulla) என்பதை பார்க்கலாம்.
Table of Contents
ரோஸ் மில்க் ரசகுல்லா (Rose Milk Rasgulla Recipe in Tamil) Rasgulla Pink
பால் கொண்டு செய்யப்படும் இனிப்பு என்பது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும். அந்த இனிப்பு வகைகள் குழந்தைகளுக்கும் பிடிக்கும். அதுவும் ரசகுல்லா என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த ரசகுல்லா இனிப்பை சற்று வித்தியாசமாக ரோஸ் மில்க் ரசகுல்லாவாக செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். இந்த ரோஸ் மில்க் ரசகுல்லா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் (Rose Milk Rasgulla Ingredients)
பால் – 1லிட்டர்
சீனி – 1 கப்
ரோஸ்மில்க் ஃபிளேவர் – 3டீஸ்பூன்
எலுமிச்சை பழ சாறு- 1டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
முந்திரி, பாதாம் (துருவல்) – சிறிதளவு
செய்முறை (Rose Milk Rasgulla Seivathu Eppadi)
முதலில் காலை நன்கு சுத்தமாக வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் அந்த பாத்திரத்தை வைத்து பாலை காய்ச்ச வேண்டும்.
பால் நன்கு காய்ந்த பின் அதில் ரோஸ்மில்க் ஃபிளேவர் சேர்க்கவும்.
1 நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு சேர்க்கவும். நன்கு கலந்து இறக்கி மெல்லிய வெண்துணியில் வடிகட்டி அப்படியே வைக்கவும்.
20 முதல் 30 நிமிடம் கழித்து துயில் இருக்கும் பன்னீரை எடுத்து கைகளால் மென்மையாக பிழிந்து தனியே எடுக்கவும்.
அதன் பிறகு பன்னீரை கைகளால் ஒன்று சேர நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
மற்றொரு அகலமான பாத்திரத்தில் 1 கப் சீனி மற்றும் 3 கப் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும்.
ரோஸ் மில்க் பனீரை உள்ளங்கையில் வைத்து உருண்டையாகவோ அல்லது தட்டையாகவோ தயார் செய்து கொதிக்கும் சீனி பாகில் சேர்த்து 10 – 15 நிமிடங்கள் மூடி கொதிக்கவைத்து இறக்கவும்.
அதன் பிறகு அதில் முந்திரி பாதாம் துருவல் தூவினால் சுவையான ரோஸ் மில்க் ரசகுல்லா தயார் (Rose Milk Rasgulla Recipe in Tamil).
Rose Milk Rasgulla Recipe: ரோஸ் மில்க் ரசகுல்லா சாப்பிட்டு இருக்கீங்களா? ஈசியாக வீட்டிலேயே செய்வது எப்படி..!
இந்த பதிவில் ரோஸ் மில்க் ரசகுல்லா செய்வது எப்படி (Rose Milk Rasgulla Recipe) என்பதை பதிவிட்டுள்ளோம்.
Type:
Dessert
Cuisine:
India
Keywords:
Rose Milk Rasgulla Recipe, Rasgulla Pink
Recipe Yield:
5
Preparation Time:
PT5M
Cooking Time:
PT40M
Total Time:
PT45M
Recipe Ingredients:
Milk - 1 liter
Sugar - 1 cup
Rose milk Flavor – 3 tsp
Lemon juice- 1 tsp
Water – required quantity
Cashews, almonds (crushed) - a little
Recipe Instructions:
முதலில் காலை நன்கு சுத்தமாக வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் அந்த பாத்திரத்தை வைத்து பாலை காய்ச்ச வேண்டும்.
பால் நன்கு காய்ந்த பின் அதில் ரோஸ்மில்க் ஃபிளேவர் சேர்க்கவும்.
1 நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு சேர்க்கவும். நன்கு கலந்து இறக்கி மெல்லிய வெண்துணியில் வடிகட்டி அப்படியே வைக்கவும்.
20 முதல் 30 நிமிடம் கழித்து துயில் இருக்கும் பன்னீரை எடுத்து கைகளால் மென்மையாக பிழிந்து தனியே எடுக்கவும்.
அதன் பிறகு பன்னீரை கைகளால் ஒன்று சேர நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
மற்றொரு அகலமான பாத்திரத்தில் 1 கப் சீனி மற்றும் 3 கப் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும்.
ரோஸ் மில்க் பனீரை உள்ளங்கையில் வைத்து உருண்டையாகவோ அல்லது தட்டையாகவோ தயார் செய்து கொதிக்கும் சீனி பாகில் சேர்த்து 10 – 15 நிமிடங்கள் மூடி கொதிக்கவைத்து இறக்கவும்.
அதன் பிறகு அதில் முந்திரி பாதாம் துருவல் தூவினால் சுவையான ரோஸ் மில்க் ரசகுல்லா தயார்.
Arupadai Veedu கொண்ட ஆறுமுகன் பற்றியும். அறுபடை வீடு பற்றியும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். தமிழ் கடவுளான முருகன் அழிக்கும் கடவுள் சிவன் மற்றும் தேவி பார்வதியின் இளைய புதல்வன் என இதிகாவசங்கள் கூறுகின்றன.
சிவபெருமானின் மூன்றாவது கண்ணான நெற்றி கண்ணின் ஒளி சுடரில் உருவானவர் முருகன் சூரபத்மனை அளிப்பதற்காக அவதாரம் எடுத்தவர். சிவன் நெற்றிக் கண்ணில் உருவான சுடரின் அளிப்பதற்காக நரகாசுரன் அம்பை எய்தான் ஆனால் ஆறு பாகங்களா உடைந்த அந்த சுடர் கங்கையில் விளுந்தது. அதன் பிறகு இந்த ஆறு சுடரும் ஆறு குழந்தைகளாக மாறின அந்தக் குழந்தைகளை ஆறு கார்த்தை பெண்களை வழர்த்தனர். கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் தான் முருகன் கார்த்திகேயன் என அழைக்கப்படுகிறார். அவர்களை போற்றும் வகையில் தான் கந்தை நினைத்து கார்த்திகை விரதம் இருக்கிறார்கள்.
ஆறு குழந்தைகளையும் வளர்த்து போர் கலைகளை கார்த்திகை பெண்கள் கற்று கொடுத்தனர். அதன் பிறகு தேவி பார்வதி ஆறு பாலகர்களையும் அரவணைத்தார் அதன் காரணமாக அனைவரும் ஒரே முறுகனாக மாறினர். அதன் பிறகு தாயார் பார்வதி முருகனுக்கு வேல் ஆயுதம் வழங்கினார். இந்த வேலை கொண்டு சூரபத்மனை (Surapadman) முருகன் வதம் செய்தார். இவ்வாறான முருகபெருமானின் தோற்றமும் அவரின் திருவிலையாடல் கதைகளை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். அறுபடை வீடு கொண்ட ஆறுமுகன் பற்றியும் அறுபடை வீடுகளின் சிறப்புகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
Table of Contents
அறுபடை வீடு பட்டியல் (Arupadai Veedu list) – Arupadai Veedu in Tamil
அழகு என்றால் முருகன் தான். அந்த அளவிற்கு அழகாக இருக்கும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் தனித்தனி சிறப்புகளை கொண்டது. முருகனின் திருவிளையாடல்கள், திருமணம், அறிவு மற்றும் போர் திறன் போன்றவற்றை பக்கதர்களுக்கு கூறும் வகையில் தான் இந்த அறுபடை வீடுகளும் அமைந்திருகின்றன (Murugan Arupadai Veedu List) என கூறப்படுகின்றன.
திருப்பரங்குன்றம்
திருச்செந்தூர்
பழனி
சுவாமிமலை
திருத்தணிகை
பழமுதிர்சோலை
இவை அனைத்தும் ஆறு முகனின் அறுபடை வீடுகள் பட்டியல் (Arupadai Veedu list) ஆகும். இவற்றை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் (Thiruparankundram)
முருகபெருமாளின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடானது திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஆகும். இந்த கோவிலின் கதை என்னவென்றால் முருகன் சூரனை வதம் செய்த புறகு தேவர்களின் தலைவரான இந்திரனின் மகள் தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
இங்க மலை வடிவில் சிவபெருமாள் அனைவருக்கும் அருள் தருகிறார். முருகபெருமான் அமர்ந்த கோலத்தில் மக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும் தெய்வானை மணக்கொலத்தில் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் (Tiruchendur)
திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாவது (Murugan Arupadai Veedu) படை வீடு ஆகும். இந்த திருச்செந்தூரில் கடற்கரையில் தான் முருகன் சூரபத்மனை வதம் செய்தார் என கந்த புறனம் செல்கிறது. எனவே இந்த கடற்கரை அருகிள் முருகன் கோவில் ரம்மியமாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி முடிந்து ஆறாம் நாள் திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ள கடர்கரையில் முருகபெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெரும். அந்த ஆறு நாட்களும் முருக பக்தர்கள் கந்தனை நினைத்து விரதம் இருப்பார்கள்.
பழனி (Palani)
திண்டுக்கள் மாவட்டத்தில் உள்ள பழனி அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடு ஆகும். பழனி மலை சித்தர்கள் வாழ்ந்த இடம் என கூறுப்படுகிறது. இந்த பழனி கோயிலில் போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலை உள்ளது.
ஞான மாம்பழத்திற்றாக முருகரும் பிள்ளையாரும் போட்டி போட்டனர். அந்த போட்டியில் தந்தை மற்றும்தாயாரை உலகம் என்று கூறி ஞான மாம்பழத்தை பிள்ளையார் பெற்றார். போட்டியில் தோற்றதால் கோபம் அடைந்த முருகன் கைலாய மலையில் இருந்து வெளியேறி பழனிமலையில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.
பழனி மலையின் உச்சியில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு போக 690 படிகட்டுகள் ஏறவேண்டும். அங்கு முருகப்பெருமான் மொட்டை அடித்து, கோவணம் கட்டி, ஒரு கையில் தடியை ஆயுதமாக கொண்ட தண்டாயுதபாணியாக மக்களுக்கு காட்சி அளிக்கிறார்.
சுவாமிமலை (Swamimalai)
கும்பகோணத்தில் இருந்து 5 கிமீ தொலையில் உள்ள ஊர்தான் சுவாமிமலை. இது அறுபடை வீடுகளிள் நான்காம் படை வீடு ஆகும். இந்த கோவில் ஒரு செயர்க்கை மலை மீது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுவாமிமலை தான் தந்தைக்கு உபதேசம் செய்த மலை என கூறப்படுகிறது. முருகன் அவரின் தந்தையான சிவபெருமானுக்கு ஞானஉபதேசம் செய்தார் என கூறப்படுகிறது. ஓம் என்ற மந்திரத்தை பொருளை தந்தை சிவபெருமானிக்கு எடுத்துறைத்து உபதேசம் செய்தார் முருகன் இந்த நிகழ்வை எடுத்துறைக்கும் இடம் தான் சுவாமிமலை.
முருகபெருமானின் ஜந்தாம் படை வீடு திருத்தணி ஆகும். இந்த திருத்தணி சென்னையில் இருந்து 75 கிலோமீட்டர் தொலையில் அமைந்துள்ளது. இந்த கோவில் மலையில் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல 365 படிகள் ஏறவேண்டும். இந்த படிகள் ஒரு வருடத்தை குறிக்கிறது. வள்ளி தேவியை இந்த கோவிலுக்கு அருகிள் தான் முருகன் சந்தித்து திருமணம் செய்து கொண்டார் என கூறப்படுகிறது.
தேவர்களை காக்க சூரனை வதம் செய்த முருகன் வள்ளியை மணந்து கொள்வதற்காக வேடர்களுடன் விளையாட்டாகப் போர் செய்தார். அப்போது அவர் கோபத்தைத் தணிப்பதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தார். அந்த இடனம் திரு தணிகை மலை என அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தலம் தான் திருத்தணி (Thiruttani) என அழைக்கப்படுகிறது.
பழமுதிர்சோலை (Pazhamudircholai)
அறுபடை வீடுகளில் பழமுதிர்சோலை தான் ஆறாம் படை வீடு ஆகும். மதுரையில் இருந்து 60 கி.மீ தொலையில் இந்த பழமுதிர்சோலை அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகன் அவரின் மனைவியான தெய்வானை மற்றும் வள்ளி உடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
உலகில் வாழும் அனைவருக்கும் கல்வி அறிவுடன் இறையருள் என்ற மெய் ஞானமும் வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என முருகன் சிறு பாலகன் வடிவில் இந்த கேட்ட தலம் பழமுதிர்சோலை.
இவை ஆறு இடங்களும் தான் முருக பெருமானின் அறுபடை வீடுகள் (Murugan Arupadai Veedu) ஆகும். இங்கிருந்து தான் முருகன் பக்கதர்களுக்கு அருள் பாளிக்கின்றார்.
ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு செல்ல போக்குவரத்துக்கு பொரும்பாளும் அனைவருக்கும உதவுவது பேருந்துகளே ஆகும். இந்த பேருந்துகள் சில சமையம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் போகிறது என புகார்கள் போக்குவரத்து துறையினருக்கு (Tamil Nadu Transport Corporation) புகார்கள் வருவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக போக்குவரத்து துறை பொதுமக்கள் புகார் அளிக்க ஒரு எண்ணை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அரசு போக்குவரத்து பேருந்து சேவை ஆனது மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் மட்டும் மொத்தமாக 625 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த 625 வழித்தடங்களில் மொத்தம் 3,436 பேருந்துகளுக்கு மேல் நாள் முழுவதும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து சேவை மூலம் நாள்தோறும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன் பெறுகிறார்கள் என கூறப்படுகிறது.
இந்த பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு போக்குவரத்து கழகம் பல சேவைகளை தருகிறது. பென்களுக்கான கட்டணம் இல்லா விடியல் பேருந்து சேலை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ், முதியவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவை, ஒரு நாள் மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் சீசன் டிக்கெட் போன்ற பல திட்டங்களை மாநகர போக்குவரத்துக் கழகம் பொதுமக்களுக்காக செல்படுத்தி வருகிறன்றது.
இந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் தொடர்பாக அல்லது பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காமல் போல்லோ பொதுமக்கள் தங்கள் புகார்களை மாநகர போக்குவரத்து கழகத்திடம் தெரிவிக்க 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி (Toll-Free Complaint Number) எண்ணை அறிவித்துள்ளது போக்குவரத்து கழகம்.
பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உதாரணமாக நம் வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ பாம்பை கண்டால் பதறி ஓடி வந்து விடுவோம். சில சமயம் அந்த பாம்பை பிடிப்பதற்கு பாம்பு பிடிப்பவர்களை அழைத்து பிடித்துவிடுவோம். அந்த பாம்பை பிடித்த பிறகு தான் நமக்கு நிம்மதி ஏற்படும். அந்த அளவிற்கு பாம்பு என்றால் அனைவருக்கும் பயம்.
நமக்கு சில சமயம் தோன்றும் இந்த பாம்பு பிடிப்பவர்கள் மட்டும் எவ்வாறு இவ்வளவு தைரியமாக பாம்பை பிடிக்கிறார்கள் என்று. காரணம் அவர்கள் முறையான பயிற்சி பெற்று பாம்பு பிடிக்கிறார்கள். இதனால் பாம்பை கண்டால் அதன் அருகில் செல்லாமல் பாம்பு பிடிப்பவர்களை தொடர்பு கொண்டு அதனை பிடித்து விடலாம்.
இதில் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால், எவ்வளவு விஷமான பாம்பாக இருந்தால் அதன் முன் தைரியமாக நின்று சண்டையிடும் ஒரு விலங்கு தான் கீரி. பொதுவாக ஒரு வீட்டில் குழந்தைகள் சண்டியிட்டுக்கொண்டால் ஏன் பாம்பு, கீரி போல சண்டை போட்டு (Mongoose Snake Fight in tamil) கொள்கிறீர்கள் என்று கூறுவார்கள். ஏனென்றால் கீரிக்கு பாம்பு என்றார் ஆகவே ஆகாது. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை நடந்தால் அதில் அதிகளவு வெற்றி பெறுவது கீரியாக தான் இருக்கும்.
எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் தன்னுடைய விஷத்தின் மூலம் கொல்லும் பாம்பு. அனால் கீரியை ஏன் கொல்ல முடியவில்லை. பாம்பின் விஷம் கீரியை ஒன்றும் செய்யாமல் இருக்க காரணம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்பின் விஷம் கீரியை ஒன்றும் செய்யாமல் இருக்க காரணம், கீரியின் உடலில் அசிட்டைல்கோலின் என்ற ஒரு வேதிப்பொருள் சுரக்கிறது. இந்த வேதிப்பொருள் தான் பாம்பின் விஷத்தை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கீரியின் தோல் மிகவும் கடினமான தோல், அவ்வளவு எளிதாக பாம்பின் பற்கள் கீரியின் உடலில் பதியாது. கீரியின் உடலில் இருக்கும் க்ளைக்கோபுரோட்டின், பாம்பின் விஷத்தில் இருக்கும் புரோட்டினை சமன் செய்து விடுவதால், பாம்பின் விஷத்தால் கீரிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை.
Rasmalai Recipe: உணவு நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாகும். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் துரித உணவு மற்றும் காரமான உணவு வகைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து உண்டு வருகின்றன. அதற்கு இடையில் கண்களை கவரும் வகையிலும் உண்டவர் நாவில் இனிப்பு சுவையை தந்து மீண்டும் உண்ண தூண்டும் ரசமலாய் செய்வது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கவுள்ளாம்.
ரசமலாய் ஒரு பால் மூலம் தயாரிக்கப்படும் இனிப்பு வகை ஆகும். பாலாடைக்கட்டி கொண்டு இந்த ரசமலாய் தயாரிக்கப்படுகிறது. கெட்டியாக இருக்கும் பாலேட்டை பந்து போல் உருட்டி சிறிது தட்டியது போல் செய்து அதில் ஏலக்காய், முந்திரி மற்றும் பாதாம் தூவி இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த ரசமலாய் செய்வதற்கான முழுமையான விளக்கத்தை (Rasmalai Recipe in Tamil) இந்த பதிவில் பார்க்கலாம்.
Table of Contents
ரசமலாய் பெயர் காரணம்
Rasmalai ஆசிய கண்டத்தில் உருவான ஒரு பால் சார்ந்த இனிப்பு வகை ஆகும். அதுவும் குறிப்பாக இந்தியாவின் துணைக்கண்டம் வங்காளத்தில் தோன்றியது இந்த ரசமலாய். இந்த ரசமலாய் பால் ஆடைகட்டியுடன் சுவையான இனிப்பு நீர் சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை ஆகும்.
இந்த ரசமலாய் என்ற பெயர் இந்தி சொற்கலான ரச மற்றும் மலாய் என்ற இரு வார்த்தைகளில் இருந்து உருவானது ஆகும். ரச என்பதன் பொருள் சாறு மற்றும் மலாய் என்பதன் பொருள் பாலேடு என்பதாகும்.
ரசமலாய்செய்வது எப்படி (How to Make Rasmalai) Rasmalai Recipe
சுவையான ரசமலாய் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் ரசமலாய் செய்முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டு விசேஷங்களின் போது இந்த இனிப்பு ரசமலாய் செய்து அனைவருக்கும் பகிருங்கள்.
தேவையான பொருட்கள் (Rasmalai Ingredients)
பால் – 1-1/2 லிட்டர்
சர்க்கரை – 3 டம்ளர்
பாதாம் பருப்பு – 5
முந்திரி பருப்பு – 5
பிஸ்தா – 4
மைதா மாவு – 2 டேபுள் ஸ்பூன்
குங்குமப்பூ – 3 முதல் 5
எலுமிச்சம் பழம் – 1
செய்முறை (Rasmalai Seivathu Eppadi)
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய்ந்த பாலில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அந்தச் சாறை அந்த பாலில் விட்டு பாலை திரிய விடவும்.
பிறகு அந்த திரிவடைந்த பாலாடையை வடிகட்டி குளிர்ந்த நீர் கொண்டு 2 முதல் 3 முறை வடிக்கட்ட வேண்டும். அதன் பிறகு அந்த பாலாடையில் மைதா போட்டு நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உள்ளங்கையில் வைத்து குலாப் ஜாமுன் மாதிரி உருட்டி கொள்ள வேண்டும்.
அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் 3 டம்ளர் சந்நரைக்கு 13 டம்ளர் தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும.
சர்க்கரை நன்கு கரைந்தவுடன் நம் உருட்டி வைத்த இந்த உருண்டைகளை அதில் போட்டு எட்டு நிமிஷம் சிம்மில் வைக்க வேண்டும்.
பிறகு அந்த உருண்டைகளை திருப்பி போட்டு மறுபடியும் எட்டு நிமிஷம் சிம்மில் வைக்கவும்.
திரும்ப மற்றொரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து பால் கொதித்த உடன் அதில் சிறிதளவு குங்குமப்பூ போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே பாலில் நன்றாக காய்ந்தவுடன் சர்க்கரை போட்டு சிம்மில் வைத்து கொஞ்ச நேரம் சுண்ட விட வேண்டும்.
பால் சிறிதளவு சுண்டிவுடன் அதில் நாம் ஊறவைத்த குங்குமப்பூவை போட்டு இன்னும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு மற்றும் முந்திரி நன்கு பொடி பொடியாக நறுக்கி எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு சர்க்கரை சேர்க்கவும் பிறகு அதில் பாதாம் பொடி பொடியாக நறுக்கி பருப்பு முந்திரிப்பருப்பு, பிஸ்தாவை அதில் போட்டு கலக்கவும்.
அதன் பின்னர் நாம் சர்க்கரை பாகில் போட்டு வைத்த எடுத்த பாலாடை உருண்டைகளை இந்த பால் கலவையில் போட்டு இறக்கினால் சுவையான ரசமலாய் தயார்.
Rasmalai Recipe: பார்க்கும் போதே ருசிக்க தூண்டும் ரசமலாய்… வீட்டிலேயே செய்வது எப்படி..!
அனைவருக்கும் பிடித்த சுவையான ரசமலாய் செய்வது எப்படி (Rasmalai Recipe in Tamil) என்பதை இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.
Type:
Dessert
Cuisine:
Bangladesh
Keywords:
Rasmalai Recipe. How to Make Rasmalai
Recipe Yield:
5
Preparation Time:
PT5M
Cooking Time:
PT40M
Total Time:
PT45M
Recipe Ingredients:
Milk – 1-1/2 litres
Sugar – 3 tumblers
Almonds – 5
Cashews – 5
Pistachios – 4
Maida flour – 2 tablespoon
Saffron – 3 to 5
Lemon – 1
Recipe Instructions:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய்ந்த பாலில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அந்தச் சாறை அந்த பாலில் விட்டு பாலை திரிய விடவும்.
பிறகு அந்த திரிவடைந்த பாலாடையை வடிகட்டி குளிர்ந்த நீர் கொண்டு 2 முதல் 3 முறை வடிக்கட்ட வேண்டும். அதன் பிறகு அந்த பாலாடையில் மைதா போட்டு நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உள்ளங்கையில் வைத்து குலாப் ஜாமுன் மாதிரி உருட்டி கொள்ள வேண்டும்.
அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் 3 டம்ளர் சந்நரைக்கு 13 டம்ளர் தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும.
சர்க்கரை நன்கு கரைந்தவுடன் நம் உருட்டி வைத்த இந்த உருண்டைகளை அதில் போட்டு எட்டு நிமிஷம் சிம்மில் வைக்க வேண்டும்.
பிறகு அந்த உருண்டைகளை திருப்பி போட்டு மறுபடியும் எட்டு நிமிஷம் சிம்மில் வைக்கவும்.
திரும்ப மற்றொரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து பால் கொதித்த உடன் அதில் சிறிதளவு குங்குமப்பூ போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே பாலில் நன்றாக காய்ந்தவுடன் சர்க்கரை போட்டு சிம்மில் வைத்து கொஞ்ச நேரம் சுண்ட விட வேண்டும்.
பால் சிறிதளவு சுண்டிவுடன் அதில் நாம் ஊறவைத்த குங்குமப்பூவை போட்டு இன்னும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு மற்றும் முந்திரி நன்கு பொடி பொடியாக நறுக்கி எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு சர்க்கரை சேர்க்கவும் பிறகு அதில் பாதாம் பொடி பொடியாக நறுக்கி பருப்பு முந்திரிப்பருப்பு, பிஸ்தாவை அதில் போட்டு கலக்கவும்.
அதன் பின்னர் நாம் சர்க்கரை பாகில் போட்டு வைத்த எடுத்த பாலாடை உருண்டைகளை இந்த பால் கலவையில் போட்டு இறக்கினால் சுவையான ரசமலாய் தயார்.