இந்தியாவில் விரைவில் பொதுத்தேர்தல் வர உள்ளது. இந்த இந்தியப் பொதுத் தேர்தலுக்காக உலகில் அளவில் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் அதிக அளவிலான வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளது. இதனை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் தான் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலில் எந்த விதமான ஊழல்கள் மற்றும் சட்ட விரோத செயல்களும் நடந்துவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது குறித்து பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, இந்தியா என்பது பன்மைத்துவம் நிறைந்த நாடு. நம் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலேயே பல உலக நாடுகளும் சுதந்திரம் பெற்றன. கல்வியறிவு குறைவாக இருந்த நம் நாட்டில் ஜனநாயகம் தலைக்குமா என பலருக்கும் சந்தேகங்கள் இருந்தது. ஜனநாயகம் என்பது அனைவரின் தேவைகளும் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும், அனைவரது ஆசைகளுக்கும் இடமளிக்கிறது என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் நம் இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் இதில் மக்கள், அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் என பலருடைய பங்களிப்பும் உள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் என்பது எந்தச் சட்டத்திலும் இடம்பெற்றது அல்ல என்று அவர் கூறினார். அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர் இவை அனைத்தும் அரசியல் கட்சிகளே தங்களுக்காக வகுத்துக்கொண்ட கட்டுப்பாடுகள் தான் இவை தான் பிற்காலத்தில் தேர்தல் ஆணையம் நடைமுறைக்கு கொண்டு வந்தது என்றும் கூறினார்.
அதுமட்டுமின்றி வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிப்பது, நேர்மையாக வாக்களித்தல் அவசியமாகும் என்றார். மேலும் மக்கள் சரியான வேட்பாளர்களை கண்டறிந்து வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். இதற்காக அரசு சார்பில் கண்காணிப்பாளர்கள் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் சி-விஜில் (C-Vigil) என்கிற செயலியையும் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலி (CVIGIL App) மூலம் மக்கள் கண்காணிப்பாளர்களாக செயல்பட்டு புகார்களை அளிக்கலாம் என்று அவர் கூறினார். இந்த செயலி மூலம அளிக்கப்படும் புகார்களின் மீது வெறும் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: Yamaha: இனி இந்த பைக்களின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது..!அதிர்ச்சியில் பைக் பிரியர்கள்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…