கடந்த சில வருடங்களாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பல இடங்களில் இருந்தும் போதைப்பொருட்களை கைப்பற்றி வருகின்றன. இந்த வரிசையில் தான் இரண்டு குடோன்களில் இருந்து சுமார் 50 கிலோ வரையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 2000 கோடி மதிப்பு உடையது ஆகும்.
இந்த போதைப்பொருட்களானது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு கடத்தப்பட இருந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த கடத்தலில் முதலில் தமிழகத்தை சேர்ந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த போதைப்பொருள் கடத்தல் காரணமாக அவர்கள் மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் இந்த கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்தது திமுக முன்னாள் பிரதமர் ஒருவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை பொறுப்பாளரான ஜாபர் சாதிக் (Jaffer Sadiq) என்பதும் தெரியவந்தது. இந்த தகவல் வெளியானவுடன் இவரை திமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது. மேலும் இவர் சில திரைப்படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் (Jaffer Sadiq Case) விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதும் மேலும் ஜாபர் சாதிக் தலைமறைவாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இன்று டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இவரை நேரில் ஆஜாராகும் படி கூறப்பட்டு இருந்தது எனினும் அவர் ஆஜராகவில்லை. எனவே மைலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போலீசார் ஜாபர் சாதிக் நேரில் நேரில் ஆஜராகி இதற்கு விளக்கம் அளிக்கவேண்டும் என்று சம்மன் ஒட்டியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: மத்திய அரசு வங்கி கணக்கில் ரூ.2000 செலுத்தும் தேதி அறிவிப்பு..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…