நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக 29 ஆம் தேதி இருக்கும் அதுவே லீப் ஆண்டு (Leap Year in Tamil) என நம் அனைவருக்கும் தெரிந்து உண்மைதான். ஆனால் ஏன் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
லீப் ஆண்டை முதன் முதலில் ரோமானியர்களே கண்டுபிடித்தாக கூறப்படுகிறது. கி.மு. 45 ஆம் ஆண்டில் ரோமாபுரி நாட்டை ஆண்ட மன்னறான ஜூலியஸ் சீசர் காலகட்டத்தில் தான் இந்த லீப் இயர் கொண்ட காலண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என கூறப்படுகிறது. எனவே பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்த லீப் இயர் பின்பற்றப்படுகிறது. இதன் படி நான்காண்டுகளுக்கு ஒரு நாள் பிப்ரவரி மாதத்தில் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. லீப் ஆண்டு (Facts About Leap Year in Tamil)பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
லீப் ஆண்டு என்பது தமிழில் நெட்டாண்டு (Leap Year Meaning) என அழைக்கப்படுகிறது. பூமி சூரியனை முழுவதுமாக சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவை தான் நாம் ஒரு வருடமாக எடுத்துக் கொள்கிறோம். அதேபோல் பூமியின் ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள் தான் என்று நாம் நினைக்கிறாம். ஆனால் பூமி சூரியனை சுற்றி வருவதற்கு 365.25 நாட்கள் ஆகிறது. அதோவது 365 நாட்கள் 5 மணிநேரம் 48 நிமிடங்கள் 46 வினாடிகள் ஆகின்றது.
இதுபோன்று ஒரு வருடத்தில் கூடுதலாக வரும் நேரத்தை சேர்த்து நான்கு ஆண்டுக்கு ஒரு நாளாக பிப்ரவரி மாத்தில் 29 வது நாளாக சோ்க்கப்படும். இவ்வாறு கூடுதலாக 1 நாள் உள்ள வருடம் தான் லீப் ஆண்டு (Leap Year) என கூறப்படுகிறது. இந்த லீப் ஆண்டு என்பது நாம் காலண்டர் (Calendar) பாதையில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு வழியாக உள்ளது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் காலண்டர் என்பது நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களை கொண்டுள்ளது. இதனை பயன்படுத்தி வருடத்தில் வரும் நனைத்து நாட்களையும் குறித்து வைத்துக்கொள்ள முடியும். இந்த Calendar -ன் பெயர் கிரிகோரியன் காலண்டர் ஆகும்.
போப் பதிமூன்றாம் கிரிகோரி என்பதால் இந்த காலண்டர் பிரபலபடுத்தப்பட்டது இதன் காரணமாகவே இவரது பெயரால் இந்த Calendar கிரிகோரியன் காலண்டர் என அழைக்கப்படுகிறது.
ஆனால் லீப் ஆண்டு இந்த கிரிகோரி காலண்டருக்கு முன்பாக இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது இதற்கு முன்பாக இருந்த ஜூலியன் காலண்டரில் இந்த லீப் ஆண்டு இருந்தது என்று செல்லப்படுகிறது. ரோமாபுரி மன்னன் ஜூலியஸ் சீசர் தான் முதன் முதலில் இந்த லீப் ஆண்டு யோசனையை கொண்டு வந்தவர் என கூறப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டை கண்டறிவது எப்படி? அதனை கணக்கிடுவது எப்படி? (How to Find Leap Year in Tamil) என்ற பல கேள்விகள் அனைவர் மனதிலும் வரும். இந்த லீப் ஆண்டை கணக்கிடுவது மிகவும் சுலபமானது ஆகும். இதற்கு கணக்கிட போகும் ஆண்டினை எடுத்துக்கொண்டால் மட்டும் போது எளிதில் எந்தெந்த ஆண்டுகள் லீப் ஆண்டு என கண்டு பிடித்து விடலாம்.
இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் 4 மற்றும் 100 ஆல் வகுப்படும் ஆண்டுகளும் லீப் ஆண்டு ஆகும். மேலும் இதனை உருதிப்படுத்த ஒரு வழி உள்ளது அதனையும் பார்ப்போம்.
லீப் ஆண்டை கண்டுபிடிப்பதற்கு மற்றொரு வழிதான் 400 ஆல் வகுப்பது ஆகும். ஒரு ஆண்டு 100 ஆல் வகுபடும் போது அந்த ஆண்டு 400 வகுபடுமா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.
இது போன்ற கணித முறைகளை பயன்படுத்தில் ஒரு வருடம் லீப் ஆண்டா அல்லது லீப் ஆண்டு இல்லையா என்பதை கணக்கிட முடியும். அது மட்டுமின்றி தற்போது நிலைய அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. அதனை பயன்படுத்தியும் நாம் லீப் ஆண்டை கண்டுபிடிக்க முடியும்.
அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறோம். அதில் காலண்டர் என்ற ஒன்று இருக்கும். அதில் நாம் வருடங்களை மாற்றி அதன் பிறகு பிப்ரவரி மாதத்தில் 29 ஆம் நாள் இருக்கிறதா என்று பார்பதின் மூலமும் லீப் ஆண்டை கண்டு பிடிக்கலாம்.
ரோமாபுரி மன்னன் ஜூலியஸ் சீசர் லீப் ஆண்டை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என கூற்படுகிறது.
ஆம், 2024 ஆம் ஆண்டு ஒரு லீப் ஆண்டு ஆகும்.
பூமி சுரியனை சுற்றி வருவதற்கு 365.25 நாட்கள் ஆகிறது. அதோவது 365 நாட்கள் 5 மணிநேரம் 48 நிமிடங்கள் 46 வினாடிகள் ஆகின்றது.
பிப்ரவரி மாதத்தில் 29 ஆம் நாள் நான்கு (4) வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…