இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் (Gaganyaan) திட்டத்தின் முதல் பரிசோதனையாக ஆளில்லா மாதிரி விண்கலம் TV-D1 ராக்கெட் மூலம் விண்ணில் இன்று (21 அக்டோபர்) காலை 10 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
நேற்று இரவு 7 மணிக்கு கவுண்டவுன் ஸ்டார்ட் (Countdown Start) செய்யப்பட்டு, இன்று காலை 8 மணிக்கு Gaganyaan மாதிரி விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என திட்டமிட்டிருந்த நிலையில் வானிலை காரணமாக காலை 8.30 மணியாக மாற்றம் செய்யப்பட்டது. பிறகு காலை 8.45 மணியளவில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ககன்யான் மாதிரி விண்கலம் தாமதமாக இயக்கப்படும் என இஸ்ரோ (ISRO) தலைவர் சோம்நாத் கூறினார். அதன் பிறகு காலை 10 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இந்த சாதனை வரிசையில் இந்தியாவும் இணைய மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கனவு திட்டமானது 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு இத்திட்டத்துக்கு Gaganyaan என பெயரிடப்பட்டது. பூமியிலிருந்து 400 கி.மீ தூரத்திற்கு மூன்று வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு செய்வது, அவர்களை எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே இந்த திட்டம். 2025 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் 3 கட்ட சோதனைகளை நடத்தப்போவதாக ISRO
முடிவெடுத்து உள்ளது.இந்த ககன்யான் முதல் மாதிரி விண்கலமானது இன்று காலை 10 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. 90 நொடிகளில் தரையிலிருந்து 17 கி.மீ உயரம் சென்ற பிறகு விண்வெளி வீரர்கள் அமரும் பகுதி மட்டும் தனியாக பிரிந்து மூன்று வகையான பாராசூட் மூலம் மெதுவாக எந்த ஒரு பாதிப்பும் இன்றி வங்கக்கடலில் வந்து இறங்கியது, அந்த பகுதியை இந்திய கப்பல் படையின் சிறப்பு வீரர்கள் கடலில் இருந்து மீட்டு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் முதல் கட்ட சோதனை வெற்றி பெற்றது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…