நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு உணவு தான் பிரியாணி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகவும் இது உள்ளது. பிரியாணி பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் அந்த அளவுக்கு தான் இருப்பார்கள் மற்றபடி அனைவருக்கும் பிரியாணி மிகவும் பிடித்த ஒரு உணவாக தான் உள்ளது.
நாம் பல வகையான பிரியாணி வகைகளை சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதிகபட்சம் நாம் கடைகளில் சென்று சாப்பிட்டாலும் சரி வீடுகளில் செய்து சாப்பிட்டாலும் அதிக அளவில் செய்வது சிக்கன் அல்லது மட்டன் பிரியாணி தான். ஆனால் இந்த வாரம் விக் எண்ட்ல இந்த மீன் பிரியாணி செஞ்சு பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. நாம் இப்பதிவில் சுவையான மீன் பிரியாணி செய்வது எப்படி (Simple Fish Biryani Recipe In Tamil) என்பது குறித்து பார்க்கலாம்.
நாம் இப்பதிவில் வழக்கமாக இல்லாமல் இந்த வீக் எண்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மீன் பிரியாணி செய்வது எப்படி (Fish Biryani Seivathu Eppadi) என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
நாம் இப்பதிவில் சுவையான மீன் பிரியாணி செய்வது எப்படி (Simple Fish Biryani Recipe In Tamil) என்பது குறித்து பார்க்கலாம்.
Type: Appetizer
Cuisine: India
Keywords: Fish Biryani, Fish Biryani Recipe
Recipe Yield: 5
Preparation Time: PT40M
Cooking Time: PT30M
Total Time: PT1H10M
Recipe Ingredients:
Recipe Instructions: மீன் பிரியாணி செய்வதற்கு முதலில் பாசுமதி அரிசியை நன்றாக இரண்டு முதல் மூன்று முறை கழுவி அதன் பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுமார் அரை மணிநேரம் வரை ஊறவைக்கவும். இந்த பிரியாணிக்கு தேவையான மசாலா அரைப்பதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் துருவிய தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய், காய்ந்த சிகப்பு மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். இப்போது பிரியாணி செய்ய முதலில் குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் சிறிதளவு நெய் ஊற்றவும். அந்த எண்ணெய் சூடான பிறகு அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். பின்னர் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய உடன் புதினா மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். இப்போது நாம் அரைத்து வைத்துள்ள விழுதை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். அந்த மசாலாவின் நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அந்த கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்நாக வதக்கி கொள்ளவும். நாம் மாசாலா விழுதிலும் மிளகாய் சேர்த்து அரைத்துள்ளதால் மிளகாய் தூள் அதிகமாக சேர்த்துவிட கூடாது. உங்களது காரத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளவும். மசாலாக்கள் நன்கு வதங்கிய உடன் அலசிய வஞ்சரம் மீன் துண்டுகளை சேர்த்து கவனமாக கிளறவும். இப்போது அதில் நாம் அரைமணிநேரம் உறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். ஒரு டம்ளர் அரிசிக்கு 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். இப்போது உப்பு ருசிபார்த்துக் கொள்ளவும். கொஞ்சம் அதிகமாக இருந்தால் பிரியாணி வெந்து வரும் போது சரியாக இருக்கும். இப்போது 2 விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திறந்து பார்த்தால் சுவையான மீன் பிரியாணி தயார்.
இதையும் படியுங்கள்: ரெஸ்டாரண்டில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலேயே சிக்கன் ரைஸ் செய்வது எப்படி? |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…