Homeசெய்திகள்ஜூன் 2–ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

ஜூன் 2–ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

சென்னை, மே 23: 2025–2026 கல்வியாண்டுக்கான பள்ளி வகுப்புகள் தமிழ்நாட்டில் ஜூன் 2, 2025 அன்று தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஒரே நாளில் திறக்கப்படும்.

இம்முன், கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் திறப்புத் தேதி தள்ளிப் போகுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது தொடக்கக் கல்வி இயக்குநர் ஜூன் 2-தேயாக இருப்பது உறுதி என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

முன்னேற்பாடுகள் குறித்து உத்தரவு:


பள்ளிகள் திறப்பதற்கு முன் மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய நடவடிக்கைகள்:

வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள் சுத்தம் செய்ய வேண்டும்.

பள்ளி வளாகம் முழுவதும் சுகாதார ரீதியாக தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு

  • பாடப்புத்தகங்கள்
  • நோட்டுப்புத்தகங்கள்
  • சீருடைகள்
  • காலணிகள்

உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் நேரத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

  • வண்ண பென்சில்கள்
  • கணித பெட்டிகள்
  • புவியியல் வரைபடங்கள்

போன்ற கற்றல் உபகரணங்கள் முழுமையாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

பெற்றோர்களுடன் தகவல்தொடர்பு:


பள்ளியின் நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை பெற்றோர்களிடம் விரைவாக பகிர்வதற்காக வாட்ஸ்அப் வாயிலாக தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகளுடன், கோடை விடுமுறையின் இறுதி கட்டத்துக்கு வந்த மாணவர்களும் பெற்றோர்களும் புதிய கல்வியாண்டை எதிர்பார்த்து உள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular