Kamarajar History in Tamil:தமிழக அரசியலில் இதுவரை யாரும் இவரை போல் இருந்ததில்லை என்று கூறும் அளவிற்கு ஒரு அரசியல் தலைவர் இருந்தார் என்றால் அது காமராஜர் தான். இவரை பிடிக்காதவர்கள் என்று யாரும் இல்லை என்றே கூறலாம். ஏனென்றால் இவரின் ஆட்சி, மக்களுக்கு இவர் செய்த பல நல்ல திட்டங்கள் என்று இவரின் ஆட்சி பொற்காலம் என்று தான் கூறவேண்டும். அன்று பல குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு சென்று படித்தததிற்கு இவரும் ஒரு காரணம் என்று தான் கூறவேண்டும்.
தமிழகத்தில் பல பள்ளிக்கூடங்களை கட்டி அதில் பல ஏழை பிள்ளைகளை படிக்க வைத்த பெருமை இவரை தான் சேரும். அதனால் தான் இவரை “கல்வி கண் திறந்த காமராஜர்” என்று அழைக்கப்பட்டார். காமராஜர் தன்னுடைய நலனை கருதாமல் மக்களுடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டார். தனது வாழ்நாள் முழுவதும் பிறருக்காகவே வாழ்ந்து திருமணம் கூட செய்து கொள்ளாமல் வாழ்ந்ததால் இவரை “தென்னாட்டு” காந்தி என்று அனைவரும் அழைத்தனர். kamarajar details in tamil பற்றி இந்த பதிவில் காண்போம்.
பிறப்பு | ஜூலை மாதம் 15 ஆம் தேதி 1903 ஆம் வருடம் பிறந்தார். |
பிறந்த ஊர் | விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி கிராமம் |
பெற்றோர் | குமாரசாமி, சிவகாமி |
படிப்பு | குடும்ப நிலை காரணமாக படிக்கவில்லை |
திருமணம் | செய்துகொள்ளவில்லை |
இறப்பு | 1975 , அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி |
kamarajar valkai varalaru: காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விருதுநகர் மாவட்டத்தின் விருதுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தார் (Kamarajar Birthday). இவர் பெற்றோர்கள் குமாரசாமி, சிவகாமி அம்மையார் ஆவரார்கள். இவர் சிறு வயதாக இருக்கும் போது இவரின் தந்தை இறந்துவிட்டார். இதனால் இவரின் பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை. இவரின் தந்தை குமாரசாமி தனது குலதெய்வமான காமாட்சி அம்மனின் அருளால் தான் இவர் பிறந்துள்ளதால் இவருக்கு காமாட்சி என்று பெயர் வைத்தனர். இவரின் தயார் Kamarajar Parents இவரை ராசா என்று தான் அழைப்பார்.
பிறகு காமாட்சி என்ற பெயரும், ராசா என்ற பெயரும் சேர்ந்து காமராசு என்று அழைக்கப்பட்டார். இவரின் பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போது Kamaraj Achievements in Education in Tamil பள்ளியில் பொறுமையுடனும், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்துடனும் விளங்கி வந்தார் காமாராஜர். இவரின் தந்தை இறக்க பள்ளி படிப்பை தொடர முடியாமல் போயிற்று. இவரின் தாயார் சிவகாமிக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஒருவர் துணிகடை நடத்தி வந்துள்ளார். மற்றொருவர் மரக்கடை நடத்தி வந்துள்ளார். காமராஜர் குடும்ப நிலை காரணமாக தனது மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்துள்ளார்.
துணிக்கடையில் வேலை பார்க்கும் போது பல தேசதலைவர்களின் குறிப்பாக திருவிக, பே.வரதராசுலு நாயுடு ஆகியோரின் விடுதலை பேச்சுகளில் கவரப்பட்டு பிரச்சாரங்களில் பங்கேற்பது, விடுதலை போராட்டங்களில் ஈடுப்பட்டு வந்தார். இதனால் தனது 16-வது வயதில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்து வந்தார். கட்சியில் கொடி கட்டுவது முதல் கட்சிக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுவது முதல் என அனைத்தும் செய்து வந்தார். இவரின் கடின உழைப்பை பார்த்த காங்கிரஸ் கட்சி இவருக்கு கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பை வழங்கி வந்தது.
காமராஜர் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் அப்போதைய பொறுப்பாளராக இருந்த ராஜாஜியின் தலைமையில் 1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காமராஜர் ஆங்கிலயேர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அந்த சிறையில் 1 வருடம் சிறை தண்டனை அனுபவித்தார்.
பிறகு 1940 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு வெடிகுண்டு வெடிப்பில் காமராஜர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அப்போது வரதராசு நாயுடுவின் வழக்காடும் திறமையில் காமராஜர் மீது சுமர்த்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
மீண்டும் 1940 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் 9 மாத காலம் சிறைவாசம் பெற்றார். பிறகு 1942- ஆம் ஆண்டு புரட்சி இயக்கத்தில் கலந்துகொண்டதால் இவர் 3 ஆண்டுகள் சிறை தண்டனைப் பெற்றார்.
காமராஜர் தனது அரசியல் குருவாக காங்கிரஸ் கட்சியில் பேச்சாளரான சத்தியமூர்த்தியை தனது அரசியல் குருவாக ஏற்க்கொண்டார். அவரின் மீது காமராஜர் மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தார். சத்தியமூர்த்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரானபோது காமராஜரை காங்கிரஸ் கட்சியின் செயலாளராக நியமித்தார்.
அப்போது ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் அனைவரின் மத்தியிலும் அவருக்கு எதிராக அமைந்தது. இதனால் ராஜாஜியின் முதல்வர் பதவிக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. இதனால் அவர் தனது பதவியை இழக்க நேரிட்டது. இருந்தபோதும் அவரின் இடத்திற்கு வருவதற்கு வேறுறொரு நம்பிக்கையான ஒருவரை நிறுத்த நினைத்தார் ராஜாஜி. அப்போது அவரின் நம்பிக்கைகயான மனிதராக இருந்தவர் தான் சி.சுப்பரமணியம். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் காமராஜருக்கு ஆதரவாக இருந்ததால் அவர் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காமராஜரின் மதிய உணவு திட்டம் அனைவரும் பாராட்டக்கூடிய ஒரு திட்டமாக இருந்தது. காமராஜர் பள்ளிகளில் பிள்ளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைத்தார். அதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த மதிய உணவு திட்டம். காமராஜரின் மதிய உணவு திட்டத்தால் பல ஏழை பிள்ளைகள் பள்ளி சென்று படித்தனர். காமராஜர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த மதிய உணவு திட்டமானது தமிழகத்தில் இன்றளவும் அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. இவரின் இந்த திட்டத்தால் அன்று பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 32 விழுக்காடாக உயர்ந்தது.
அப்போது ராஜாஜி ஆட்சியில் இருந்த குலக்கல்வித் திட்டத்தை முதலில் கைவிட்டார். தமிழத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மூடி இருந்த 6000 பள்ளிகளை திறந்தார். மேலும் அவர் 17000 பள்ளிகளை திறந்தார். இதில் பல பள்ளிகளை நேரடியாக சென்று அவரே திறந்து வைத்தார்.
காமராஜர் ஆட்சி காலத்தில் முக்கிய 10 நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலும் அவர் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக கட்டப்பட்ட தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டி பாலமாகும்.
தமிழக அரசு, சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க Republic Day History in Tamil..! குடியரசு தின வரலாறு..! |
காமராஜர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அன்று தனது 72 வது வயதில் இறந்துவிட்டார்.
k. காமராஜின் பிறந்த நாளை (ஜூலை 15) ‘கல்வி வளர்ச்சி நாள்’ என்று தமிழ்நாடு கொண்டாடுகிறது.
2006 முதல், இந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
1967 ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு எதிரான மிகப்பெரிய ஆட்சி எதிர்ப்பு அலை சென்னையில் இருந்தது. காமராஜையும் அவரது கட்சியையும் தோற்கடிக்க வழிவகுத்தது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…