Deepavali அன்று பட்டாசுகள் வெடிப்பது நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும், பல வகையான பக்க விளைவுகளை பட்டாசுகள் ஏற்படுத்துகிறது. நாம் பட்டாசுகளை வெடிக்கும் போது அதிலிருந்து துத்தநாகம், சல்பர், சோடியம் மற்றும் தாமிரம் போன்ற இராசயனங்கள் காற்றில் கலந்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் பல வகையான ஆரோக்கிய குறைபாடுகளும் உருவாகிறது. இந்த நிலையில் பசுமை பட்டாசுகள் (Green Crackers)சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்குமா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது, இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த பசுமை பட்டாசுகளை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியது.
பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை மற்றும் வர்த்தகம் தொழில்துறை அமைச்சகம் ஆகியவை இந்த பட்டாசுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இந்த பசுமை பட்டாசுகள் சுற்றுப்புற சூழல் மாசுஅடையாது என்பது இல்லை, ஆனால் இவை வழக்கமான பட்டாசுகளை ஒப்பிடும் போது 30% குறைவான காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இவை தூசியை உறிஞ்சுக்கொள்கின்றன. மேலும் இந்த பசுமை பட்டாசுகளில் பேரியம் , நைட்ரேட் போன்ற அபாயகரமான வாயுக்கள் இல்லை.
இந்த பசுமை பட்டாசுகள் மூன்று வகைகளில் தயாரிக்கப்படுகிது.
இந்த வகை பட்டாசுகள் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கப்பட்ட பட்டாசுகள் ஆகும். இவை SWAS என அழைக்கப்படுகிறது. இந்த பட்டாசுகள் நீராவி வடிவில் வெளியாகும். இந்த வகையான பட்டாசுகளை வெடிக்கும் போது அதிலிருந்து நீர் விடுப்பட்டு காற்றில் நீராவியை கலக்கிறது, இதன் மூலம் தூசிகளை இப்பட்டாசுகள் அடக்குகிறது. இதிலிருந்து வெளிவரும் துகள் தூசி 30% வரை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வகை பட்டாசுகளில் குறைந்தபட்ச அலுமினியம் உள்ளது மற்றும் இவை பாதுகாப்பானவை. இவற்றில் அலுமினியத்திற்கு பதிலாக மெக்னீசியம் பயன்படுத்தப்படுகிறது. எனவே வழக்கமான பட்டாசுகளை போல் இல்லாமல் இது வெடிச்சத்தின் ஒலியை குறைத்து காட்டும்.
இவை தெர்மைட் பட்டாசுகள் ஆகும், இந்த வகையான பட்டாசுகளிலும் பொட்டாசியம், நைட்ரேட் மற்றும் கந்தகம் போன்ற வாயுக்கள் இல்லை. எனவே இது துகள்களை அகற்ற செய்து ஒலி தீவிரத்தையும் குறைக்கும்.
இந்த பசுமை பட்டாசுகளை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க முடியும். இதனை அடையாளம் காண முடியாவில்லை எனில் CSIR NEERI லோகோ இப்பட்டாசுகளில் இருக்கும், அதன் மூலம் கண்டறியலாம்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…