தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைகளில் இரண்டாவது நாளாக மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான தை மாதத்தில் இரண்டாம் நாளில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த மாட்டு பொங்கல் பண்டிகை என்பது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தான் திருவள்ளுவர் தினம் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் மாட்டு பொங்கல் பண்டிகையானது ஜனவரி மாதம் 16 ஆம் தேதி கொண்டாடுகிறாேம்.
உழவுக்கு உழவருக்கு உறுதுணையாக இருக்கும் எருதுகளை போற்றும் வகையிலும் அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையின் போது மாடுகளை குளிப்பாட்டி வண்ண வண்ண நிறங்கள் மற்றும் பூக்களால் அலங்கரித்து உழவுக்கு உதவும் மாடுகளை தெய்வமாக கருதி பொங்கல் சமைத்து படையல் இடுவார்கள்.
அதுமட்டுமின்றி மாட்டு பொங்கல் அன்று வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏறு தழுவல், மஞ்சு விரட்டு எனவும் அழைப்பார்கள். இந்த ஏறு தழுவுதல் போட்டியானது தமிழர்களின் மரபுவழி வீர விளையாட்டுகளில் ஒன்றாகும்.
இது போன்று பல போட்டிகள் இந்த பொங்கல் பண்டிகைகளின் போது நடைபெறும். இந்த வருடம் மாட்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்கு மற்றும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உங்கள் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொள்வதற்கு சிறப்பான மாட்டு பொங்கல் வாழ்த்துக்களை இங்கு பதிவிட்டுள்ளோம். அனைவருக்கும் நமது வலைதளத்தின் சார்பாகஇனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் (Mattu Pongal Wishes in Tamil).
கலைப்பறியாது உழைக்கும் உனக்கு
காலை வணங்கி கூறுகிறேன்
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.
அன்பின் ஒவ்வொரு நிறமும்
உங்கள் வீட்டையும் இதயத்தையும் நிறைய
மகிழ்ச்சியுடன் நிரப்பட்டும்.
இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தாய் கூட சில மாதங்கள் தான்
எனக்கு பால் ஊட்டினாள்
ஆனால் நான் இருக்கும் வரை
எனக்கு பால் கொடுக்கும் நீ
என் தாயினும் சிறந்தவள்.
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
இந்த அழகான பண்டிகை
உங்கள் வாழ்க்கையில் வெற்றியையும்,
மகிழ்ச்சியையும், புன்னகையையும் தரட்டும்
இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நம் விவசாயிகளும், விளை செல்வங்களும்
செழிப்புடன் என்றும் நிறைந்திருக்க அனைவருக்கும்
இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
விவசாயத்தின் தோழனாய்,
உழவனின் தொண்டனாய்,
வீரத்தின் அடையாளமாய்
விளங்கும் மாடுகளுக்கு
நன்றி செலுத்துவோம்…
இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
இவ்வுலகில்,
தாய்ப்பால் அருந்தாமல் வளர்ந்தவர் பலர்,
பசும் பால் அருந்தாமல் வளர்ந்தவர் இலர்!
அனைத்து உறவுகளுக்கும்
அன்பார்ந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
மாடுகளின் அழகினை
கவிதையில் வர்ணிக்கலாம்
ஆனால் உழைப்பை வர்ணிக்க
ஓராயிரம் கவிதை போதாது.
இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க: மாட்டு பொங்கல் கோலம் 2024..! Mattu Pongal Kolam Designs..! |
உழைத்து களைத்த
உழவர்களுக்கு ஒருநாள்
உழவர் திருநாள்!
உழைத்து களைத்த
உனக்கும் ஒரு நாள்
மாட்டுப்பொங்கல்!
விவசாயிகள் அனைவருக்கும்
மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
மார்தட்டி நாம் கொண்டாடுவோம்
இன் நன்னாளினை…!
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.
உழவனுக்கு மட்டும் அல்ல,
ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு பிறகு
உலகுக்கே நீ செல்லப்பிள்ளை தான்
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.
மண் வாசனையோடு
ஏர் கலப்பைகளை சுமந்து நாம்
இன்பமாய் உணவுண்ண
விவசாயிக்கு தோள்கொடுக்கும்
எருதுகளை போற்றுவோம்.
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.
இந்த பொங்கல் பண்டிகைக்கு இதுபோன்ற மாட்டு பொங்கல் வாழ்த்துக்களை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் நமது வலைதளத்தின் சார்பாக இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க: Pongal Kolam 2024: அழகிய பொங்கல் கோலங்கள்..! |
பொங்கல் பண்டிகையானது நான்கு நாட்கள் நடைபெறும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளி மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
இந்த ஆண்டில் புதுக்கோட்டையில் உள்ள தச்சங்குறிச்சியில் தமிழகத்தில் முதல் முதலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 முதல் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில், தமிழர் வாழும் பகுதிகளில் நடைபெற்றது.
ஜனவரி 13 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இந்த பொங்கல் பண்டிகை லோஹ்ரி என்ற பெயரில் கோதுமை அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…