Navratna Stones in Tamil: ரத்தின கற்கள் ஒருவரின் வாழ்கையில் நேர்மறையான பலன்களை தரக்கூடியதாக கருதப்படுகிறது. இது ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியினரும் அவருக்கு ஏற்ற ரத்தின கற்களை மோதிரமாக போட்டுக்கொள்ளலாம். அது சமயம் அவ்வாறு அணியும் மோதிரம் எந்த விரலில் அணிய வேண்டும் என்ற சில நிபந்தனைகளும் உண்டு. இந்த ராசியினர் இந்த ரத்தின கற்கள் கொண்ட மோதிரத்தை அணியலாம் என நம்பி அதனை விரல் மாற்றி அணிந்துக்கொண்டால் கட்டாயம் நேர்மறை பலன்களுக்கு பதிலாக எதிர்வினை பலன்கள் நிகழும்.
அவ்வாறு அணியும் ரத்தின மோதிரங்களுக்கு என்று சில விதிகள் உள்ளன. அவைகள் என்ன விதிகள் என்று பார்க்கலாம் (Gem Meaning in Tamil). ஆனால் இதனை ஜோதிடர்களின் வழிகாட்டுதலின் படி அணிந்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு ரத்தினக்கல் (navarathinam kal in tamil) உண்டு. அந்த கிரகத்தின் பாதிப்பிலிருந்து சற்று நம்மை நேர்மறையான பலன்கள் கொடுக்கும் என்பது ஐதீகம்.
ஒருவர் அவரது விரல்களில் நவரத்தின மோதிரம் (9 Gems Names in Tamil) அணிந்தால் அவருக்கு பதவி உயர்வு, நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த முக்கியமான காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. தொழில் தொடங்குவது, குடும்பத்தில் அமைதி, சந்தோஷம், மகிழ்ச்சி போன்றவை கொடுக்கும்.
ஆனால் நவராத்தின கற்கள் அணிந்தால் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடுமா? என்றால் நிச்சயம் இல்லை. காரணம் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏற்றார் போல் ஜோதிடர்கள் ரத்தின கற்கள் அணிந்துக்கொள்ளலாம் என்று கூறுவார்கள். அதுபோல நாமும் அணிந்துக்கொண்டால் நடக்க கூடிய எதிர்வினைகளில் இருந்து ஓரளவிற்கு பாதிப்புகள் குறையும் என்று கூறலாம்.
சூரியன் – மாணிக்கம்
சனி – நீலம்
புதன் – மரகதம்
செவ்வாய் – பவளம்
குரு – புஷ்பராகம்
சந்திரன் – முத்து
சுக்கிரன் – வைரம்
ராகு – கோமேதகம்
கேது – வைடூரியம்
இந்த மாணிக்க ரத்தின கல்லை ரூபி என்று அழைப்பார்கள். இந்த கல் நவரகிரத்தில் சூரியனின் நவரத்தினமாக பார்க்கப்படுகிறது. இந்த கல்லை தங்கத்தால் செய்த மோதிரத்தில் பதித்து மோதிர விரலில் அணிந்துக்கொண்டால் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த மோதிரத்தை சூரியனுக்கு ஏற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் அணிந்துக்கொள்வது அதாவது சூரிய உதயத்திற்கு முன்பாக அணிந்துக்கொண்டால் நன்மை ஏற்படும்.
இந்த ரத்தினகல் நவகிரகத்தில் சனி பகவானுக்கு ஏற்ற கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த கற்களை அணிந்துக்கொள்பவர்கள் சனியின் பார்வையில் இருந்து அவரின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். எனினும் ஒருவருடைய ஜாதகத்தை அடிப்படையாக கொண்டுதான் இந்த பாதிப்புகளின் நிலைகளை அறிய முடியும். இந்த கல்லை உற்று பார்த்தால் 6 ரேகைகள் தெரியும்.
இந்தக்கல்லை தங்க மோதிரத்தில் பதிய வைத்து அணிந்துக்கொண்டால் அவருக்கு வாழ்க்கையில் பொறுமை, நேர்மறையான சிந்தனைகள் போன்றவைகள் கிடைக்கபெறும். அதிலும் அஷ்டமத்து சனி நடப்பவர்கள் இந்த மோதிரத்தை சனிக்கிழமை அன்று நடுவிரலில் அணிந்துக்கொள்ளலாம்.
இந்த பவளக்கல் ரத்தினம் கடல்களில் இருந்து கிடைக்கிறது. கடலில் வாழும் உயிரினங்களின் எச்சங்களில் இருந்து இது பெறப்படுகிறது. பவளத்தில் பல நிறங்கள் கிடைத்தாலும் சிவப்பு நிற பவளங்கள் (red coral in tamil) தான் அதிக அளவு மக்கள் விரும்புகின்றனர்.
இந்த பவள ரத்தினம் நவகிரகத்தில் செவ்வாய் கிரகத்திற்கு ஏற்ற ரத்தினமாக பார்க்கப்படுகிறது. இந்த கல் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் அதிகம் இருந்தால் அவர்கள் இந்த பவளம் பதித்த கற்களை அணியலாம். இதனால் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் குறைந்து அதிக அளவு பாதிப்புகள் ஏற்படாது. அதுமட்டுமல்லாமல் இந்த பவள ரத்தினத்தை அணிந்துக்கொண்டால் எதிர்காலத்தில் ஒருவேளை நமக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதனை முன்னரே இந்த பவள கற்களின் நிறம் மாறி நமக்கு எச்சரிக்கும் என்பது நம்பிக்கை.
இந்த பவளக்கல்லை வெள்ளியில் பதித்து அணிந்துக்கொண்டால் நன்மைகள் ஏற்படும்.
இந்த ரத்தினக்கல் குருபகவானால் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க கூடியதாகும். இந்த ரத்தினக்கல்லை புஷ்பராகம் அல்லது கனகபுஷ்பபராகம் என்று அழைப்பார்கள். இந்த கல் பார்பதற்கு நிறமற்றதாகவும் அல்லது வெளிரிய மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இதனை மஞ்சள் புஷ்பராகம் என்றும் அழைப்பார்கள்.
இந்த மோதிரத்தை அணிந்துக்கொள்வதால் இதயநாேய், இரத்தம் அழுத்தம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து நம்மை பாதுக்காக்கிறது. இந்த கல் பதித்த மோதிரத்தை ஆள் காட்டி விரலில் அணிந்துக்கொள்வதால் நன்மைகள் கிட்டும். இந்த கல்லை தங்க மோதிரத்தில் பதித்து அணிந்துக்கொள்ளலாம்.
இந்த கல் நவகிரகத்தின் புதன் கிரகத்திற்கு ஏற்ற ரத்தினக்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த ரத்தினம் பதித்த மோதிரத்தை நாம் விரல்களில் அணிந்தால் புதன் கிரகத்தால் ஏற்படக் கூடிய விளைவுகளில் இருந்து நம்மை பார்த்துக்கொள்ளலாம்.
மரகத ரத்தின கற்கள் (Maragatha kal mothiram benefits in Tamil) மிகவும் விலை உயர்ந்தது. இந்த மகரகத கல்லை பச்சை ரத்தினக்கல் என்றும் கூறுவர். இந்த கல் பதித்த மோதிரத்தை பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் அணிந்து கொள்ளலாம். அதாவது இராணுவம், காவல் துறையினர் இந்த கல் பதித்த மோதிரத்தை அணிந்துக்கொள்ளலாம். இந்த மோதிரத்தை சுண்டு விரலில் புதன் அன்று அணிந்தால் அவருக்கு புதன் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் சற்று குறைவாக இருக்கும்.
இந்த வகை இரத்தினக்கல் நவகிரகத்தில் சந்திரனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இந்த முத்து மட்டும் தான் கடலில் வாழும் ஒரு உயிரினத்திடமிருந்து கிடைக்கிறது. கடலில் உள்ள சிப்பில் இருந்து இந்த முத்து எடுக்கப்படுகிறது.
செயற்கையாக பல முத்துக்கள் செய்யப்பட்டாலும் கடலில் உள்ள சிப்பியில் இருந்து கிடைக்கும் முத்து தான் உண்மையான முத்தாகும். இந்த முத்து பதித்த மோதிரத்தை அணிந்துக்கொள்வதால் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு இது தீர்வாக உள்ளது. அது மட்டுமல்லாமல் எதிர்மறையான சூழ்நிலைகளிலும் கூட இந்த முத்து நேர்மறையான சூழ்நிலையை உருகாக்குகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி ஒருவருடைய ஜாகத்தில் சந்திரன் பாதிப்பு உள்ளவர்கள் இந்த முத்து பதித்த மோதிரத்தை அணிந்துக்கொண்டால் அவருக்கு சந்திரனின் பாதிப்பு சற்று குறைவாக இருக்கும். இந்த முத்து வைத்த மோதிரத்தை வலது கையின் ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலில் அணிந்துக்கொள்ளலாம்.
நவரத்தினங்களிலேயே அதிக விலை கொண்ட ஒரே கல் வைரம் ஆகும். இந்த ரத்தினக்கல் அனைவராலும் அணிந்துக்கொள்ள கூடிய நவரத்தினக்கல் கிடையாது எனலாம். ஜோதிடத்தின் படி வைரம் ஒருவருடைய ஜாதக்கத்தில் சுக்கிரனின் ஆதிக்கம் இருக்கும் நபர்கள் இந்த கல் பதித்த மோதிரத்தை அணிந்துக்கொள்ளலாம்.
இந்த வைரக்கல் பதித்த மோதிரத்தை வலது கையில் அணிந்துக்கொள்ளலாம். இந்த வைரக்கல் பதித்த மோதிரம் வலது கையில் உள்ள நடுவிரலில் அணிந்துக்கொள்ளலாம்.
இந்த கோமேதகம் (garnet stone benefits) தேன் நிறத்தில் காணப்படுகிறது. பார்ப்பதற்கு அடரந்த மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த கல் ராகு ஆதிக்கம் ஒருவருடைய ஜாகத்தில் நடந்தால் அவர் இந்த கல்லை மோதிரமாக அணிந்துக்கொள்ளலாம்.
இந்த மோதிரத்தை சனிக்கிழமையன்று நடுவிரலில் அணிந்துக்கொள்ளலாம். இதனால் உடல் ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இந்த ரத்தினக்கல்லை ஆங்கிலத்தில் Cats Eye என்று அழைப்பார்கள். காரணம் இந்த ரத்தினக்கலின் மேலிருந்து கீழாக ஒரு கோடு போன்ற அமைப்பு பார்பதற்கு பூனையின் கண்கள் போல தெரியும். அதனால் தான் இதை Cats Eye என கூறுவார்கள்.
இந்த கல் பதித்த மோதிரம் அணிந்துக்கொள்பவர்களிடம் பயம் உணர்வு இருக்காது. அவர்களை சுற்றி நேர்மறையான சூழ்நிலைகள் மட்டும் தான் ஏற்படும். இந்த கல் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவருடைய ஜாதகத்தின் அடிப்படையில் கேது ஆதிக்கம் இருந்தால் இந்த மோதிரம் அணிந்துக்கொள்ளலாம்.
இந்த கல் பதித்த மோதிரத்தை ஆள்காட்டி விரல் அல்லது மோதிர விரலில் அணிந்துக்கொள்ளலாம்.
இந்த பதிவில் navarathinam names in tamil என்பதை பற்றி பார்த்தோம். இது ஒருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தின் அடிப்படையில் ஜோதிடர்களின் வழிக்காட்டுதலின் படி அணிந்துக்கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்ட பலன்கள் பொதுவானவையாகும்.
யார் வேண்டுமானாலும் நவரத்தின மோதிரம் அணியலாம்.
ரூபி என்னும் மாணிக்கம் ரத்தினக்கல் இது ஒன்பது கிரகங்களுக்கும் ராஜாவாக மதிக்கப்படுகிறது. மேலும் மாணிக் கல் சூரிய பகவானின் விலைமதிப்பற்ற ரத்தினமாகும்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…