ஆன்மிகம்

Perumal Avatharam: திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றிய சிறப்பு தகவல்கள்..!

இந்த பதிவில் காக்கும் கடவுலான Perumal Avatharam பற்றியும் பதிவிட்டுள்ளாம். பூமியில் இருக்கும் மனிதர்களை பாவங்கள் செய்யும் அரக்கர்களிடம் இருந்து காப்பதற்காகவும், மனிதர்கள் தீய செயல்களில் ஈடுபடாம்ல் இருப்பதற்காகவும் பெருமால் பத்து அவதாரங்கள் எடுக்கிறார் என கூறப்படுகிறது.

கடவுள் என்பவர் மனிதர்களின் நம்பிக்கையாக மட்டுமின்றி நல்வழிபடுத்துபவராகவும் இருக்கிறார். இதிகாசங்கள் படி அடுத்தவர்களை துன்புறுத்தும் செயல்களை செய்பவர்கள், பாவங்கள் செய்யும் மனிதர்கள் அனைவரையும் அழிக்க கடவுள் மனித உருவில் அவதாரம் எடுக்கிறார் என கூறுகிறது. அதன் மூலம் அனைவருக்கும் நன்மைகள் செய்ய வேண்டும் என்ற கருத்து மக்களுக்கு சொல்லப்படுகிறது.

அவ்வாறு மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மனிதர்களை காக்கும் கடவுள் எனவும் அழைக்கப்படுகிறார். பெருமாள் 10 அவதாரம் எடுத்து. இதன் மூலம் மனிதர்களை நல்வழிபடுத்துகிறார் என இதிகாரங்கள் கூறுகின்றன. இந்த பதிவில் பெருமாளின் பத்து அவதாரங்கள் (Thirumalin Pathu Avatharam in Tamil) பற்றி பதிவிட்டுள்ளோம்.

பெருமாள் பத்து அவதாரங்கள் (Thirumalin Pathu Avatharam) – Perumal Avatharam

  • மச்ச அவதாரம்
  • கூர்ம அவதாரம்
  • வராக அவதாரம்
  • நரசிம்ம அவதாரம்
  • வாமன அவதாரம்
  • பரசுராமர் அவதாரம்
  • இராம அவதாரம்
  • பலராம அவதாரம்
  • கிருஷ்ண அவதாரம்
  • கல்கி

ஆகியவை பெருமாளின் பத்து (Perumal Pathu Avatharam) அவதாரங்கள் ஆகும். இந்த அவதாரங்கள் மூலம் பெருமாள் பூமியில் வாழும் மக்களுக்கு நற்போதனைகளை பெருமாள் எடுத்துறைக்கிறார்.

மச்ச அவதாரம் (Macha Avatharam)

பெருமாளின் முதல் அவதாரமாக கருதப்படுவது மச்ச அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தில் பெருமாள் மீன் உருவில் பூமியில் தோன்றினார். கிருயுகம் நடைபெறும் பொழுது விஷ்ணு நான்கு கைகளுடன், மேல்பாகம் தேவராகவும் கீழ்பாகம் மீன் ருபமாகவும் தோன்றி அனைத்து உயிர்களை காத்தார் என மச்ச புராணம் (Macha Avatharam Story) கூறுகிறது.

சோமுகாசுரன் என்ற அசுரன் மூன்று லோகத்தினராலையும் அழிக்க முடியாத சாகவரத்தினை சிவபெருமானிடம் இருந்து பெற்றிருந்தான். சாகா வரம் பெற்ற அகந்தையில் பிரம்ம தேவரிடம் இருந்து வேதங்களை பிடிங்கிகொண்டு கடலுக்கடியில் சென்று மறைந்துகொண்டான். இதன் காரணமாக பெருமாள் மீன் அவதாரம் எடுத்து கடலுக்குள் சென்றார். அங்கு சோமுகாசுரன் அரக்கனை அளித்தார் பெருமான். அதன் பிறகு வேதங்களை பிரம்பரிடம் திருப்பி தந்தார். இந்த மச்ச அவதாரம் விஷ்ணு பகவானின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரம் (Vishnu Avatharam in tamil) ஆகும்.

கூர்ம அவதாரம் (Kurma Avataram)

விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாக கருதப்படுவது கூர்ம அவதாரம் ஆகும். கூர்மம் என்பதன் பொருள் ஆகை என்பதாகும். பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக கடையும் போது மேரு மலையை மத்தாக பயன்படுத்தினர். சிவபெருமான் கழுத்தில் இருக்கும் வாசுகி என்ற பாம்பை கயிறாகக் பயன்படுத்தினர். இந்த நிகழ்வின் போது மேரு மலை கடலில் புதையாமல் இருப்பதற்காக பெருமாள் கூர்ம அவதாரம் (Kurma Avatar) எடுத்தார் என இதிகாசங்கள் கூறுகின்றன.

வராக அவதாரம் (Varaha Avataram)

பெருமாளின் மூன்றாவது அவதாரமாக கருதப்படுவது வராக அவதாரம் (Varaha Avatar of Vishnu) ஆகும். வராக என்பதன் பொருள் பன்றி ஆகும். இந்த வராக அவதாரம் ஆனது கிருத யுகத்தில் எடுக்கப்பட்டது.

இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரன் பூமி உட்பட மூன்று உலகையுடம் கைப்பற்றி கடலுக்கடியில் இருந்தபடி ஆட்டிபடைத்தான். அப்போது அனைத்து தேவர்களும் பெருமாளிடம் சென்று வேண்டுகோள் வைத்தனர். திருமால்

வராக அவதாரம் எடுத்து 1000 ஆண்டுகள் போர் செய்து இரண்யாட்சன் அழிப்பத்தார் என இதிகாரங்கள் கூறுகின்றன. இராமாயணத்தில் இந்த அவராதம் பற்றி கூறப்படுகிறது.

நரசிம்ம அவதாரம் (Narasimha Avataram)

நரசிம்ம அவதாரம் பெருமாளின் நான்காவது அவதாரம் ஆகும். நரன் மற்றும் சிம்மன் என இரண்டாக பிரித்து இரு பொருள் தருகின்றது நரசிம்ம என்ற பெயர். நரன் என்பது மனித உருவத்தை குறிக்கிறது சிம்மன் என்பது சிங்கம் என பொருள் படம். இரணியகசிபுவை வதம் செய்ய மனிதன் மற்றும் சிங்கம் உருவில் தொன்றினார் விஷ்ணு.

இரணியகசிபு என்ற அரக்கன் பிரம்ம தெவரை வனங்கி தவம் இருந்தான். இவரின் தகத்திற்காக பிரம்ம தேவர் இரணியகசிபுக்கு வதம் வளங்க வந்தார. அப்போது இரணியகசிபு சாகா வரம் கேட்டான். பிறக்கும் உயிர்கள் அனைத்தும் இரப்பது இயற்கை எனவே வேறு வதம் கேள் என பிரம்மர் கூறினர்.

எனவே இரணியகசிபு எனக்கு அழிவு என்பது ஆயுதத்தினாலோ, பகலிலோ, இரவிலோ, உயிர்களினாலோ, விலங்குகலினாலோ தேவர்களாலோ மற்றும் முனிவர்கள் மூலமாகவோ கிடைக்கக்கூடாது என்று வரம் பெற்றான். இதனால் சாகா வரம் பெற்றதாக நினைத்தான். அதனால் அனைவரையும் துண்புருத்தினான்.

மேலும் இரணியகசிபு தீவிர சிவ பக்தன். ஆனால், அவன் மகன் பிரகலாதன் பெருமாள் மீது பற்று கொண்டிருந்தான். இதன் காரணமாக மகன் என்றும் நினைக்காமல் அனவை துண்புறுத்தினான் இரணியகசிபு. எனவே திருமால் நரசிம்ம அவதாரமாக (Narasimha Avatar) தூணிலிருந்து பிலந்து கொண்டு வந்தார். அந்தி சாயும் வேளையில் விரல் நகங்களால் இரணியகசிபுவை கொண்றார்.

வாமன அவதாரம் (Vamana Avatharam)

பெருமாளின் ஐந்தாவது அவதாரமாக கருதப்படுவது வாமன அவதாரம் (Vamana Avatharam) ஆகும். வாமனன் என்பதன் பொருள் குற்றவடிவானவர் என்பதாகும். மலை நாட்டை ஆண்ட மகாபலி என்ற அரசனின் ஆனவத்தை (கர்வத்தை) அழித்து அவருக்கு நல்வழி காட்டுவதற்காகவே பெருமாள் இந்த அவதாரத்தை எடுத்தார் என கூறப்படுகிறது. இந்த அவதாரத்தில் பெருமாள் மூவடியால் உலகத்தை அளந்தார் என கூறப்படுகிறது. இதுவே வாமன அவதாரத்தின் கதை (Vamana Avatharam Story) ஆகும்.

பரசுராமர் அவதாரம் (Parasurama Avatharam)

பெருமாளின் ஆறாவது அவதாரமாக கருதப்படுவது பரசுராமர் அவதாரம் ஆகும். திரேதா யுகத்தில் பெருமாள் பரசுராமர் அவதாரம் எடுத்தார் என செல்லப்படுகிறது. பரசு என்றால் கோடாரி என்று கொருள். இவர் கடுமையான தவம் இருந்து சிவனிடம் இருந்து கோடாரியை பரிசாக பெற்றதால் இவர் பெயர் பரசுராமர் என அழைக்ப்பட்டது. ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய் பிறந்த பரசுராமர் தந்தை செல்லை தட்டாத மகன் ஆவார்.

தந்தையின் ஆணைக்கு இணங்கி தனது தாயின் தலையை கோடாரியால் வெட்டியவர் பரசுராமர். அதன்பிறகு தாயின் உயிரை மீண்டும் கொண்டு வர வரம் கேட்ட அவதாரம் தான் பரசுராமர் ஆவராரம்.

இராம அவதாரம் (Rama Avatharam)

பெருமாளின் ஏழாவது அவதாரமாக கருதப்படுவது இராம அவதாரம் (Rama Avathar) ஆகும். இந்த அவதாரம் கதை மிகவும் புகள் பெற்ற இதிகாதமாக விழங்குகிறது. அடுத்தவர் மனைவி மீது ஆசைகொள்வது தவரு என்பதை உணர்த்தும் வகையில் இந்த இதிகாசம் அமைந்துள்ளது. இந்த அவதாரத்தில் ராமர் அவரின் மனைவீ சீதாவை கவர்ந்து சென்ற இராவணனை வதம் செய்வார்.

மேலும் படிக்க: Ramayanam Story in Tamil: அயோத்தியை ஆண்ட ராமர் பிறப்பு முதல் இராவணன் வதம் வரை..!

பலராம அவதாரம் (Balarama Avatharam)

பலராம அவதாரம் திருமாளின் பத்து அவதாரங்களில் (Perumal Dasavatharam) எட்டாவது அவதாரம் ஆகும். துவார யுகத்தில் பெருமாள் இந்த பலராம அவதாரம் எடுத்தார். பெருமாள் கிருஷ்ண அவதாரம் எடுப்பதற்கு முன்பாக அவரது அண்ணனாக ஆதிசேஷன் பலராமன் உருவம் எடுத்ததாக கூறப்படுகிறது. இவரா கிரிஷ்ணருடன் பல குரும்பு தனங்கள் செய்தார்.

கிருஷ்ண அவதாரம் (Krishna Avatharam)

கிருஷ்ண அவதாரம் பெருமாளின் ஒன்பதாவது அவதாரம் ஆகும். இந்த அவதாரமும் துவார யுகத்தில் நடைபெற்றது. இந்த அவதாரத்தில் கிருஷ்ணன் குரும்புகள் செய்யும் குழந்தையாக அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார். இந்த கிருஷ்ண அவராரத்தில் அவரின் மாமாவான கம்சன் என்ற அரக்கனை வதம செய்வார்.

அதன் பிறகு திரவ்பதியின் மானம் காப்பார். அதர்மம் பெய்ம் கௌரவர்களை வதம் செய்வதற்கு பான்டவர்களுக்கு உதவிகள் செய்வார். இந்த கதையே மகாபாரதம் என அழைக்கப்பகிறது.

கல்கி அவதாரம் (Kalki Avatharam)

விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக கருதப்படுவது கல்கி அவதாரம் ஆகும். இந்த அவதாரம் கலியுகத்தில் நடைபெரும் என கூறப்படுகிறது. கலியுகத்தில் தர்மங்கள் அழிந்து அதர்மங்கள் அதிகரிக்கும் போது பெருமாள் இந்த கல்கி அவதாரம் (kalki Avathar) எடுப்பார் என கூறப்படுகிறது.

இவை அனைத்தும் பெருமாளின் பத்து அவதாரங்கள் (Perumal Pathu Avatharam) ஆகும். இந்த அவதாரங்கள் மூலமாக பெருமாள் அனைத்து உயிர்களையும் பாவங்கள் செய்யாமல் நல்வழிபடுத்துகிறார். ஒவ்வொரு அவதாரமும் தீமைகளை அழித்து மீண்டும் தர்மத்தை பூமியில் மீண்டும் நிலைநாட்டுகிறது.

மேலும் படிக்க: Kashi Vishwanath Temple: காசி விஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு..!

Perumal Avatharam – FAQ

1. மும்மூர்த்திகள் என அழைக்கப்படுபவர்கள் யார்?

சிவன், பெருமாள் மற்றும் பிரம்மா ஆகிய மூவரும் இதிகாசத்தின் படி மும்மூர்த்திகள் என அழைக்கப்படுகிறார்கள்.

2. பெருமாளின் பத்து அவதாரங்களைப் பாடிய ஆழ்வார் யார்?

பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவாரான பொய்கையாழ்வார் தான் பெருமாளின் பத்து அவதாரங்களைப் பாடியவர்

3. திருமாலின் மூன்றாவது அவதாரம் எது?

திருமாலின் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம் ஆகும்.

4. மச்ச என்பதன் பொருள் என்ன?

மச்ச என்பது சமஸ்கிருத சொல் ஆகும். இது மத்ஸ்யம் எனவும் கூறப்படுகிறது. இதன் பொருள் மீன்.

Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago