உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் முக்கிய தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தியில் இன்று முதல் பாதுகாப்பு பணிகள் முடிக்கிவிடப்பட்ட நிலையில் போக்குவரத்து போன்றவற்றில் பல மாற்றங்களை உத்திரபிரதேசம் அரசு தொடர்ந்து அங்கு செய்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி வரும் ஜனவரி 20-ஆம் தேதி திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரவிருப்பதாக (Modi visit Srirangam Temple) தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் உள்ள பல வைணவ ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 20 தேதி காலை 11 மணியளவில் ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து விமானம் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். பிறகு அங்கு சாமி தரிசனம் செய்ய பிறகு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் இரவு தங்குகிறார். பிறகு மறுநாள் ஜனவரி 22 தேதி அங்கிருந்து புறப்பட்டு நேரடியாக ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக்கொள்ளகிறார்.
பிரதமர் மோடி வருகையை (Modi Srirangam kovil varugai) முன்னிட்டு விமானநிலையத்திலிருந்து அவர் வரும் வழிதடம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ள பகுதியில் யாரேனும் புதிதாக ஓட்டல்களில் தங்கியுள்ளார்களா என அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்த உயர் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அருகில் உள்ள பொம்மை கடைகள் போன்றவற்றை மூட உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருச்சியில் இன்று முதல் ஜனவரி 20 தேதி வரை ட்ரோன்கள் பறக்க கூடாது என உத்திரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார். அதனையும் மீறி ட்ரோன்கள் பறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…