சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சமீபத்தில் லால் சலாம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ரஜினி காந்த். இந்த லால்சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் விஜய் உடனான போட்டி குறித்து அவர் பேசியுள்ளார்.
இந்த லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இந்த படமானது வருகிற 9-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்நிலையில் தான் லால் சலாம் படத்தில் இசை வெளியீட்டு விழா (Rajini lalsalam audio launch) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தை அடுத்த சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவரும் தங்களது கருத்துகளை கூறினர். இப்படத்தின் இயக்குநர் ஜஸ்வர்யா நடிகர் ரஜினிகாந்த் பற்றி கூறினார். ஐஸ்வர்யாவின் பேச்சைக்கேட்டு ரஜினிகாந்த் கண்கலங்கினார்.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் ரஜினிகாந்த் (Rajini lalsalam audio launch Rajini Speech) உரையாற்றினார். அப்போது அவர் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அவர் கூறிய காக்கா – கழுகு கதையை (Rajinikanth Vijay Fans Kaka Kalugu Issue) விஜய்யை குறித்து பேசியதாக பலர் நினைத்துக் கொண்டுள்ளனர் என்றும், அது அவருக்கு மிகவும் மனவேதனை அளிப்பதாகவும் கூறி தனது வருத்தத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் விஜய்யை நான் சிறுவயதில் இருந்து பார்க்கிறேன். என்றும் அவர் நிறைய கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்றும் அவர் கூறினார். மேலும் இப்போது அவர் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் கேள்விப்பட்டேன் அதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறி, இவர்களிடேயே போட்டி உள்ளது என்று நீண்ட நாட்களாக உலவி வந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: சிவகார்த்திகேயனை முன்னோடி என்று கூறிய சூப்பர் ஸ்டார்..! ஏன் தெரியுமா? |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…