தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக (Advocate General of TN Govt) பணியாற்றி வந்தவர் ஆர்.சண்முகசுந்தரம். இவர் தமிழக அரசின் வழக்கறிஞராக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமர்ந்ததும் ஆர். சண்முகசுந்தரம் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் (Advocate General Shanmugasundaram). இவர் 1989 ஆம் ஆண்டு முதல் 1991 வரை திமுக ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞராக பணியற்றினார். பிறகு 2008 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2021 ஆண்டு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்துள்ளார். அப்போது முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டாம். பதவியில் தொடர்ந்து நீடியுங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனது ராஜினாவை திரும்ப பெற்றதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ஆர். சண்முகசுந்தரம் ராஜினாமா செய்துவிட்டதாகவும், தனது ராஜினாமா குறித்த முடிவை தமிழக அரசிடமும், முதல்வரிடம் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மனுவை முதல்வரிடம் ஏற்கும்படி ஆர். சண்முகசுந்தரம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனை முதல்வர் ஏற்றுக்கொண்டதால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஆர். சண்முகசுந்தரம்.
தமிழக அரசின் புதிய வழக்கறிஞராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. தமிழக அரசு புதிய தலைமை வழக்கறிஞரை (TN Advocate General) நியமிப்பதற்கான பணிகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர்களாக உள்ள பி.எஸ் ராமன், ஜே. ரவீந்திரன் ஆகியோர்களில் யாரேனும் ஒருவர் தமிழக அரசு நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்..! தமிழக அரசு அறிவிப்பு..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…