கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் திரையுலகில் வந்தியதேவனாக வலம் வந்தவர் தான் நடிகர் கார்த்திக். தமிழ் திரையுலகின் முக்கிய முன்னணி நடிகராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சில வருடங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான கைதி படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய முக்கிய அப்டேட்டை (Kaithi 2 New Update) கூறியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்து வெளியான படம் தான் இந்த கைதி. இப்படம் இயக்குனர் லேகேஷ் கனகராஜ் அவர்களில் இரண்டாவது படம் ஆகும். இப்படத்தின் மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது என்று தான் கூறவேண்டும்.
இப்படத்தில் கார்த்தியின் நடிப்பு சிறப்பாக இருந்தது. மேலும் இப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருந்தது. மேலும் இப்படத்தின் கதைக்களம் ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்தது. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு இப்படம் ஒரு தனி பெயரை பெற்று தந்தது என்றே கூறலாம்.
இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தமிழ் திரையுலகின் பெரிய நடிகர்களை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்கத்தொடங்கினார். இந்த படத்திற்கு பிறகு தான் மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கினார். இப்படத்தின் முதல் பாகம் வெளியான போது லோகேஷ் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் 2022-ஆம் ஆண்டில் தொடங்கும் என்று கூறியிருந்தார்.
ஆனால் அவர் தொடர்ந்து படங்கள் இயக்கி வந்ததால் கைதி 2 படத்தின் வேலைகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது கைதி படம் வெளியாகி கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் முடிவடைய போகிறது. இந்நிலையில் தான் தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்திக் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றபோது அங்கிருந்த ரசிகர்கள் கைதி 2 படம் பற்றி கேட்டனர் அதற்கு பதில் அளித்த நடிகர் கார்த்திக் டெல்லி மீண்டும் வருவான் என்றும், அடுத்த வருடத்தில் இப்படத்தில் படப்பிடிப்பு (Kaithi 2 Shooting) தொடங்கும் என்றும் கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது இப்படம் வரும் 2025-ம் ஆண்டு வெளியாகும் (Kaithi 2 Release) என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: இளையராஜா பயோபிக்: படத்திற்கு தனுஷ் கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா..! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…