இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. அதிக அளவிலான மக்கள் ஆன்லைன் முறையில் தான் பணம் செலுத்துகின்றனர். இந்த UPI- விரிவாக்கம் Unified Payments Interface என்பதாகும். இதற்கான விளக்கத்தை எளிமையாக பணத்தை பரிமாறி கொள்ளும் வசதி கூறலாம். இந்திய அரசினால் கொண்டு வரப்பட்ட நிதிச் சேவை தான் இந்த யுபிஐ. இதுப்பற்றி (UPI Full Form in Tamil) நாம் இப்பதிவில் தெளிவாகப் பார்க்கலாம்.
இந்த முறையானது பணப் பரிமாற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று விட்டது என்று தான் கூறவேண்டும். UPI என்பது ஒரு செயலி மட்டுமில்லை. இது ஒரு தொழில்நுட்ப வசதி ஆகும்.
நம்மில் பலரும் பல வங்கிகளில் கணக்கு வைத்திருக்கலாம். எனவே நாம் கணக்கு வைத்துள்ள வங்கியின் செயலியை தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த ஒரு பண பரிமாற்ற செயலியையும் நாம் பயன்படுத்தலாம்.
பல பணபரிமாற்ற செயலிகள் உள்ள அதனை நாம் பதிவிறக்கம் செய்து, ஒருவரின் வங்கி கணக்கை இணைத்துவிட்டால் போதுமானது. அதன் பிறகு நாம் UPI சேவையை பயன்படுத்தலாம். இந்த யுபிஐ பண பரிமாற்றம் பற்றி பலருக்கு தெரிந்து இருந்தாலும் சிலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை என்பது தான் உண்மை. எனவே இப்பதிவில் நாம் UPI பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
யுபிஐ என்பது பணத்தை விரைவாக பரிவர்த்தனை செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த யுபிஐ சேவையானது இதற்கு முன்னர் இருந்து செயல்பாட்டில் உள்ள IMPS என்னும் தொழில்நுட்பத்தினை அடித்தளமாக கொண்டு இயங்குகிறது. இந்த சேவையை பெறவேண்டுமெனில் ஒரு வங்கியானது தம்மை இதில் பதிவு செய்ய வேண்டும். இந்த சேவை NPCI என அழைக்கப்படும் (National Payments Corporation of India) அரசு அமைப்பு மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
அதற்கு பின்னர் Unified Payments Interface சேவையை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்க நினைக்கும் வங்கிகள் தனது வங்கிக்கான செயலியை முதலில் வெளியிட வேண்டும். மேலும் இந்த சேவையை வங்கிகள் அனைத்தும் தனி செயலியாகவோ அல்லது இதற்கு முன்னர் உள்ள mobile banking செயலிகளுடன் இணைத்தும் வெளியிடலாம்.
நாம் இந்த சேவையை பயன்படுத்த புதிய கணக்கு தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் முன்னர் பயன்படுத்தும் வங்கிக் கணக்கையே உபயோகிக்கலாம். மேலும் இந்த சேவையின் மூலம் 24 மணி நேரமும் உடனடியாகப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.
இதற்கு முன்னர் பணத்தை பரிமாற்றுவதற்கு IMPS, RTGS, NEFT பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த முறையில் வங்கியானது open-ஆக இருக்கும் போது மட்டும் தான் பணத்தை transfer செய்ய முடியும். அதுமட்டுமின்றி இன்னும் பல ரூல்ஸ் இருந்தது.
UPI-ஐ பயன்படுத்த வங்கி கணக்கின் விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வாடிக்கையாளரின் மெய்நிகர் முகவரி (mail id) மூலம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு ஸ்மார்ட்போன் மூலம் பணத்தை ஒருவருக்கு அனுப்பவோ அல்லது மற்றவர்களிடமிருந்து பணத்தை பெறவோ பயன்படுகிறது.
இதில் UPI முறையில் பண பரிவர்த்தனையானது உங்களுடைய குளோபல் அட்ரஸ் என்று அழைக்கப்படும் நம்முடைய கைப்பேசி எண் அல்லது ஆதார் எண் மற்றும் லோக்கல் அட்ரஸ் எனப்படும் மெய்நிகர் முகவரி ஆகியவற்றின் அடிப்படையில் நடக்கிறது.
UPI தொழில்நுட்பத்தின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் நம்முடைய தொலைபேசி மூலம் பணத்தை செலுத்தலாம். இந்த UPI முறையானது ஏற்கனவே உள்ள IMPS எனும் தொழில்நுட்பத்தை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுல்லதால் எந்த விதமான கட்டணமும் கிடையாது.
இதையும் படியுங்கள்: Honor X9b: இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய மாடல் Honor போன்..! |
இப்பதிவில் நாம் யுபிஐ குறித்த தகவல்களை பார்த்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இதையும் படியுங்கள்: UPI பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! இத செயலைனா உங்க UPI ID Block தான்..! |
UPI-ன் விரிவாக்கம் Unified Payments Interface
யுபிஐ என்பது பணத்தை விரைவாக பரிவர்த்தனை செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம் ஆகும் இதனை ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு என்றும் அழைக்கப்படுகிறது.
UPI-Pin என்பது 4 முதல் 6 இலக்கம் வரை உள்ள குறியீடு ஆகும். இந்த எண் BHIM பயன்பாட்டில் நாம் முதல் முறையாக பதிவு செய்யும்போது உருவாக்கப்படும். இந்த குறியீட்டை நாம் UPI பரிமாற்றங்களை அங்கீகரிப்பதற்கு பயன்படுத்தலாம்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…