12 zodiac signs in tamil: நமது ஜோதிட சாஸ்திரம் அறிவியலை மையமாக கொண்டு கணிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஒரு குழந்தை கருவில் உருவாகும் போதே அந்த குழந்தையின் தலையெழுத்து எழுதப்படுகிறது என்று கூறுவார்கள். பொதுவாக ஒருவருக்கு ஜாதகம் எழுவது என்பது அந்த நபர் பிறந்து உடனே, பிறந்த தேதி, கிழமை, நேரம் என ஆகியவற்றை குறித்து வைத்துக்கொண்டு ஒரு ஜோதிடரிடம் கொடுத்து ஜாதகத்தை எழுதுவார்கள். அப்படி ஜோதிடர் எழுதும் ஜாதகத்தில் அந்த நபர் பிறந்த நாள், கிழமை, நேரங்களை கணித்து குறிப்பிட்ட ராசி, நட்சத்திரங்கள், லக்கனங்கள் என அனைத்தையும் கணித்து எழுதிவிடுவார்.
இந்த உலகத்தில் தோன்றிய அனைவரும் இந்த 12 ராசிகளில் தான் வருவார்கள். இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் எந்த ஒரு விஷயத்திற்காகவது ஒத்து போவார்கள். ஆனால் ஒத்து போகாதது என்று பார்த்தால் அவர்களின் குணாதிசயங்கள் மட்டும் தான். மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒரு தனிப்பட்ட ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளன. நாம் பழகும் போது அவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் கெட்ட குணங்களை பார்ப்போம். உதராணமாக நம் வீட்டில் உள்ளவர்களை எடுத்துக்கொள்வோம். யாருடைய குணமும் யாருடனும் ஒத்து போவதில்லை. இதற்கு காரணம் அவர்களுடைய ராசியும், (tamil rasi palangal) நட்சத்திரமும் தான் காரணம் என நம் ஜோதிடம் கூறுகிறது.
அப்படியென்றால் இங்கு பலருக்கும் ஒரு சந்தேகம் தோன்றும் இந்த 12 ராசிகளின் கீழ் தான் உலகத்தில் உள்ள மனிதர்களின் ராசி உள்ளது என்றால், ஏன் குணாதிசயங்கள் ஒத்துபோவதில்லை என கேள்வி வரும். அதாவது ஒரு நபர் விருச்சிகம் ராசியாக இருந்து, அவருக்கு தெரிந்த நபரும் விருச்சிகம் ராசியாக இருந்தால் இருவரின் குணங்களும் ஒத்து போகுமா என்றால்? நிச்சயம் நூற்றுக்கு ஐம்பது சதவீதம் ஒரே மாறியாக இருக்கும். ஆனால் மீதி, ஒவ்வொரு நபரும் பிறந்த நேரம், காலம், கிழமை, நட்சத்திரம் முக்கியமாக பிறந்த நொடி இதில் ஏற்படும் மாற்றங்கள் தான் ஒரே மாறியான ராசியினராக இருந்தால் கூட அவர்களின் வாழ்க்கை வேறு விதமாக இருக்கிறது.
ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த பதிவில் நாம் 12 ராசியினருக்கும் இருக்க கூடிய பொதுவான குணாதிசயங்களை (12 Rasi in English and Tamil) பற்றி பார்ப்போம்.
பன்னிரண்டு ராசிகளில் முதல் ராசியாக இருப்பது மேஷம் தான். இதனை (Aries in English) ஆங்கிலத்தில் Aries என்று கூறுவார்கள். இந்த ராசியினரின் அடையாளம் ஆடு. இந்த அடையாளங்கள் அவர்களின் குணங்களுக்கு ஏற்றவாறு இருக்கும். மேஷம் ராசிகாரர்கள் பொதுவாக நீதி, நியாயம் என இருப்பார்கள். இவர்கள் சண்டைக்கு போகவில்லை என்றாலும் வந்த சண்டையை விடமாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் தைரியசாலியாகவே இருப்பார்கள். யாரு எந்த தவறு செய்தாலும் உடனே கேட்க கூடிய தன்மை கொண்டவர்கள். இவர்கள் ராசிக்கு கொடுத்த அடையாளம் போல ஆட்டை மந்தையாக விட்டாலும் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொள்ளும் அதுபோல தான் இவர்களின் நிலைமையும். கலகக்காரர்கள் என்று இவர்களை கூறுவார்கள். உயர்ந்த பதவிகளில் பணிபுரிபவர்கள் இந்த ராசிகாரர்களாக இருப்பார்கள்.
மேஷராசியை பொதுவாக ஆண் ராசி என்று கூறுவார்கள். இந்த ராசியினர் பழமையை மதிப்பவர்களாக இருப்பார்கள். அதிலும் பெண்களை மதிப்பது, அவர்களை தெய்வமாக பார்பார்கள். இவர்களிடம் ஒரு பண்பு என்னவென்றால் ஒரு பிரச்சனையை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ளாமல் முதல் ஆளாக அதில் தலையீடுவது தான். தன்னை நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிடாதவர்கள்.
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் இவர்களின் போராட்ட குணங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். இவர்களிடம் இருக்கும் பொறுமையற்ற குணம்தான் அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய எதிரியே. தன்மீது உள்ள தைரியத்தால் சூழ்நிலைகளை புரிந்துக்கொள்ளாமல் நடக்கும் நிலைமையை குறைவாக மதிப்பிடுவது.
இவர்கள் முருகனை வணங்கி வந்தால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து (mesha rasi palan) காப்பாற்றப்படுவார்கள். வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெற முருகனை இஷ்ட தெய்வமாக வழிபடுவது சிறந்தது.
இரண்டாவது ராசியாக இருப்பது ரிஷபம். இதனை ஆங்கிலத்தில் (Rishaba in English) Taurus என்று அழைப்பார்கள். இந்த ராசியினரின் அடையாளமாக மாடு உள்ளது. இந்த ராசி நபர்கள் பார்பதற்கு பொறுமையானவர்களாகவும், மற்றவர்கள் மதிக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் தோற்றம் பெரும்பாலும் சாந்தமாக இருக்கும். பார்பதற்கு அமைதியானவர்களாக இருப்பார்கள். இந்த ராசியின் அடையாளப்படி மாடு உள்ளது. மாடு தன் உரிமையாளருக்கு கட்டுப்பட்டு நடக்கும் அதுபோல தான் இவர்கள் தன் குருவிற்கு உண்மையாக இருக்க வேண்டும் என் நினைப்பார்கள். செய்யும் தொழிலில் உள்ள வேலைகளை முழுமையாக முடிக்க வேண்டும் என எண்ணுவார்கள். அவர்களுக்கு எந்த புதிய விஷயங்கள் மீதும் அவ்வளவாக ஆர்வம் ஏற்படாது. இவர்களை நம்பி ஒரு காரியத்தை கொடுத்தால் அதில் கவனம் செலுத்தி அந்த வேலையை முடித்துவிடுவார்கள்.
இவர்களுக்கு சுயநலமாக இருப்பது பிடிக்காது. அவ்வளவாக எதிலும் ஆர்வம் இல்லாதவராக இருப்பார்கள். இவர்கள் கற்பனையில் என்றும் வாழ மாட்டார்கள். இவர்களின் சிரிப்பு எப்போதும் அழகாக இருக்கும். ரிஷபகாரர்களை தன் வசியப்படுத்துவது என்பது சற்று சிரமம் தான். இந்த ராசிகாரர்கள் லட்சுமி தேவியை தன் கடவுளாக வணங்கலாம்.
ராசியில் மூன்றாவது ராசியாக இருப்பது மிதுனம். இந்த ராசியை ஆங்கிலத்தில் (Mithunam in English) Gemini என்று கூறுவார்கள். இந்த ராசிகார்களின் அடையாளமாக இருப்பது ஆண் மற்றும் பெண்ணாக இருக்கும். இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையும் மாற்றியமைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதையாவது யோசித்தப்படியே இருப்பார்கள். இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் இவர்கள் ஒரு வேலையை செய்தால் அந்த வேலையை முழுமையாக செய்த முடிக்காமல் அடுத்த வேலைக்கு சென்று விடுவார்கள். அந்த வேலையும் சரியாக செய்து முடிக்க மாட்டார்கள்.
இவர்கள் அடிக்கடி யோசித்துக்கொண்டே இருப்பதால் இவர்களை நம்பலாமா? வேண்டாமா? என தோன்றலாம். ஆனால் இவர்கள் நம்பிக்கைகுரிய மனிதர்களாகவே இருப்பார்கள். பல வேலையை இழுத்துப்போட்டு செய்வார்கள். மனக்கவலையை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். மிதுன ராசிகார்களின் கிரகம் புதன் என்பதால் இவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்கள். புத்தகங்களை வாசிப்பது இவர்களுக்கு பிடிக்கும். இவர்களை அவர்களின் போக்கில் விட்டால் ஒரு உயர்ந்த நிலைக்கு வருவார்கள்.
இவர்களுடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டும் தான் இவர்களுடைய உண்மையான குணங்கள் பற்றி தெரியும். ராசியின் அடையாளங்களுக்கு ஏற்றவாறு ஆண் பெண் என பார்க்காமல் அனைவரிடமும் சமமாக பழகுவார்கள். இவர்கள் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக்கொள்ளவார்கள். இவர்கள் தனிமையை வெறுப்பார்கள். இவர்கள் விஷ்ணு வழிபாடு நடத்துவது சிறந்தது.
ராசியில் நான்காவது ராசியாக இருப்பது கடகம். இந்த ராசியை ஆங்கிலத்தில் (Kadagam in English) Cancer. இந்த ராசிகளின் அடையாளம் நண்டு. இந்த ராசியை பொதுவாக நீர் ராசிகள் என்று அழைப்பார்கள்.இந்த ராசிகார்கள் பொதுவாக யாரையும் அவ்வளவு எளிதாக நம்ப மாட்டார்கள். இந்த ராசிகாரர்கள் தன்னை சார்ந்தவர்களை பாதுகாப்பார்கள். கற்பனையில் என்றும் இருப்பார்கள். இவர்களுக்கு கருணை உள்ள மனது. யாராவது உதவி என்று கேட்டால் உடனே உதவுவார்கள். இவர்கள் பொதுவாக ஒரு பிரச்சனையை கண்டு பயம் கொள்வதில்லை. மாறாக பிரச்சனையை உருவாக்குவதில் உரிய நபராக இருப்பார்கள். ஒரு பிரச்சனையில் ஒருபட்சமாக தன்னுடைய கருத்தை பதிவிடுவார்.
கடக ராசிகார்களுக்கு அவர்கள் மீது தவறு இருந்தால் அதனை நியாயப்படுத்த நினைக்க மாட்டார்கள். இதனை வைத்து இவர்களை குறைவாக எடை போட வேண்டாம். காரணம் அவர்களின் இந்த பொறுமை குணங்களை நாம் குறைவாக மதிப்பிட்டால் அவர்களை பிறகு நாம் புரிந்துக்கொள்வது கடினமாகிவிடும். இந்த ராசிகாரர்கள் குழந்தை குணம் கொண்டவர்கள். அவர்கள் நினைத்தது போல நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இல்லை என்றால் அவர்களின் கோபம் உச்சம் அடைந்துவிடும். இவர்கள் சுயநலமானவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் நிலைபாடுகளை அடிக்கடி மாற்றிக்கொள்வதால் மற்றவர்கள் இவர்களை புரிந்துக்கொள்ளவதில் சிரமப்படுவார்கள். இவர்களுக்கு என்று ஒரு தனித்துவமான குணங்கள் இருக்கிறது. அது இவர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் தெரியும். மற்றவர்களை பாதுகாக்கும் குணம் கொண்டவர்கள் இவர்கள். இந்த ராசியினர் அம்மனை வணங்கி வந்தால் இவர்களுக்கு நல்லது நடக்கும்.
ராசி பலனில் ஐந்தாவது ராசியாக இருப்பது சிம்மம். இந்த ராசியை ஆங்கிலத்தில் (Leo in English)Leo என்று அழைப்பார்கள். இந்த ராசியின் அடையாளமாக இருப்பது சிங்கமாகும். அடையாளத்திற்கு ஏற்றது போல இவர்களின் குணங்களும் சிங்கத்துடன் ஒத்துப்போகிறது. சிம்ம ராசிகாரர்கள் எப்போதும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அது தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கும். அதுப்போல தான் சிம்ம ராசிகார்களும் அப்படி தான் இருப்பார்கள். யாரு என்ன சொன்னாலும், எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாமல் தான் அலட்டிக்கொள்ளாமல் இருப்பார்கள்.
இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அலட்சியமாக இருப்பார்கள். இதனால் இவர்களுக்கு என்று எந்த ஒரு பிரச்சனையும் வருவதில்லை. முக்கியமாக அவர்களுடைய சுதந்திரத்தில் யாராவது தலையிட்டால் அவர்களுக்கு பிடிக்காது. தாராள மனம் கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் ஆளுமை குணம் கொண்டவர்கள். அதனால் எங்கும் அவர்களுடைய ஆளுமை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சற்று ஆணவம் இவர்களிடை இருக்கும். என்னதான் இவர்களின் தோற்றமும், நடையும் கம்பீரமாக இருந்தாலும் இவர்களிடம் நெருங்கி பழகுபவர்களுக்குதான் தெரியும் இவர்களின் உண்மையான பாசம். எந்தவொரு தேவையற்ற விஷயத்தையும் இவர்கள் செய்ய மாட்டார்கள். அதனால் வரும் வருத்தங்களை இவர்கள் விரும்புவதில்லை. இவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவன்.
ராசியில் ஆறாவது ராசியாக இருப்பது கன்னி. இந்த ராசியை ஆங்கிலத்தில் (Virgo in English) Virgo
என்று அழைப்பார்கள். இந்த ராசியின் அடையாளமாக இருப்பது ஒரு கன்னி (பெண்) ஆகும். இவர்களின் தோற்றம் பார்ப்பதற்கு இளமையாக இருக்கும். இந்த ராசிகாரர்கள் எப்போதும் எதையாவது பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். இதனால் இவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது சிறந்தது. தங்களை சுற்றி உள்ளவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள். ஒரு விஷயத்தை தொடங்கினால் அதை பற்றி முழு புரிதல் இருந்தால் தான் அவர்கள் அந்த காரியத்தை செய்வார்கள். இவர்கள் சுதந்திரமாக இருக்க நினைப்பார்கள்.எந்தவொரு விஷயத்தையும் முன்னின்று செய்வார்கள். இவர்கள் எந்த ஒரு செயலையும் மற்றவர்களை விட சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த எண்ணம் தான் இவர்களை ஒரு நல்ல நிலையில் வைத்திருக்கும். பொறுப்புணர்வுடன் எப்போதும் இருப்பார்கள். மற்றவர்களை மதிப்பார்கள். அவர்களின் கருதத்துக்கு மதிப்பு கொடுப்பார்கள். இவர்கள் விளையாட்டுதனம் கொண்டவர்கள். குழந்தை மனம் படைத்தவர்கள் இவர்கள்.
இவர்களின் தேவையற்ற சிந்தனை இவர்களை நிம்மதி இல்லாமல் செய்து விடும். தேவையற்ற வம்புகள் செய்வார்கள். இதனால் கவலையும் அடைவார்கள். சிந்தித்துக்கொண்டே தன்னுடைய நேரத்தை வீணடிப்பார்கள். பழைமயான விஷயங்களை விரும்புவார்கள். இவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் விஷ்ணு தெய்வமாகும்.
ராசியில் ஏழாவது ராசியாக இருப்பது துலாம். இந்த ராசியை ஆங்கிலத்தில் (Libra in English) Libra என்று அழைப்பார்கள். இந்த ராசியின் அடையாளம் ஒரு நபரின் கையில் தராசு இருப்பது போன்ற ஒரு அடையாளமாகும். இந்த அடையாளத்திற்கு ஏற்றவாறு எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் நியாயம், நேர்மை என அனைத்தையும் பார்ப்பார்கள். இவர்களுக்கு நியாயம் மிகவும் முக்கியம். அநியாயம் செய்பவர்களை பார்த்தால் பிடிக்காது. இவர்கள் மற்றவர்களிடம் அன்பாக பழக்ககூடியவர்களாக இருப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் குணம் உடைவராக இருப்பார்.
இவர்கள் தங்களின் வாழ்க்கையை ரசித்து வாழ்வார்கள். தொழிலில் பல தந்திரங்களை கற்றுவைத்து இருப்பார்கள். இவர்கள் அனைத்து விஷயங்ளையும் ரசிக்க கூடியவராக இரப்பார்கள். மற்றவர்கள் செய்யும எந்த ஒரு செயலிலும் நியாயத்தை எதிர்ப்பார்கள். அமைதியானவர்களாக இருப்பார்கள், பார்ப்பதற்கு அழகாகன தோற்றம் உடையவர்களாக திகழ்வார்கள்.
இவர்களின் வாழ்க்கை துணையை இவர்களே தேர்ந்தெடுப்பார்கள். இவர்களின் இல்லற வாழ்க்கை நன்றாக இருக்கும். இவர்கள் எளிதில் பிறரின் நம்பிக்கையை பெற்றுவிடுவார்கள் இதுதான் இவர்களின் பலவீனமாகும். மந்தமான நிலையை தான் இவர்கள் கொண்டிருப்பார்கள். சுயநலம் இவர்களிடம் இருக்கும். இவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் இவர்கள் துர்கை வழிபடலாம்.
ராசியில் எட்டாவது ராசியாக இருப்பது விருச்சிகம். இந்த ராசியை ஆங்கிலத்தில் (Scorpio in English) Scorpio என்று அழைப்பார்கள். இந்த ராசியின் அடையாளம் தேள். அது நீர் ராசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ராசியின் அடையாளத்திற்கு ஏற்றவாறு இவர்களிடம் பேசும்போது பார்த்து தான் பேச வேண்டும். தேள் கொட்டுவது போல கொட்டிவிடுவார்கள் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் உண்மையில் தேள் எப்படி ஒளிந்துக்கொண்டு இருக்கிறதோ வெளியில் வராமல் இருக்கும். அதுபோல தான் விருச்சிகராசிகாரர்கள் தங்களை பற்றி ஒருபோதும் தங்களை வெளிகாட்டிக்க மாட்டார்கள். மனதுக்குள்ளேயே அனைத்தையும் வைத்துக்கொள்வார்கள். கோபம் இவர்களின் குணம். அதற்காக இவர்களை கெட்டவர்களை என்று எண்ணிட வேண்டாம். காரணம் இவர்களை விட பொறுமைசாலி எவரும் இல்லை. பொறுமையும் இவர்களிடம் தான் இருக்கும் அதுபோல அந்த பொறுமை இழந்தால் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள். சனியின் ஆதிக்கம் கொண்ட ராசியாக இருப்பதால் செவ்வாயின் ஆதிக்கமும் இருக்கும்.
இவர்கள் மற்றவர்களை எளிமையாக ஈர்க்க கூடியவர்களாக இருப்பார்கள். அமைதி மற்றம் பொறுமை இவர்களின் குணமாகும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அதிகமானோர்கள் இந்த ராசிகாரர்களாக தான் இருப்பார்கள். இவர்களை புரிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினம். இவர்கள் இப்படிதான் என்று நம்மால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. இவர்கள் மற்றவர்களுடன் எளிதில் சேரமாட்டார்கள். ஒரு தேள் மற்றொரு தேளுடன் எப்பொழுதும் சேர்ந்து இருப்பதில்லை. இந்த ராசியின் கடவுள் முருகன் இவரை வணங்கி வந்தால் நல்லது.
ராசியில் ஒன்பதாவது ராசியாக இருப்பது தனுசு. இந்த ராசியை ஆங்கிலத்தில் (Sagittarius in English) Sagittarius என்று அழைப்பார்கள். இந்த ராசியின் அடையாளத்தை பார்த்தோம் என்றால் பாதி மிருகம் பாதி மனிதன். இவர்களிடம் பாதி மனித தன்மையும், பாதி மிருகத் தன்மையும் அதிகம் இருக்கும். காரணம் இவர்கள் என்றும் நேர்மையான வழியில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உண்மைக்காக போராடுவதாக நினைத்து எல்லா காரியங்களையும் சரியாக புரிந்துக்கொள்ளாமல் உடனே கோபம் கொள்வார்கள். இவர்கள் சற்று பிடிவாதம் குணம் கொண்டவர்களாகவும், அவர்கள் சொல்லுவது தான் சரி என்று நினைப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் மனதை ஒருநிலைப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் தனக்கென்று தனி லட்சியத்தை கொண்டிருப்பார்கள். இதனால் இவர்கள் அதனை நோக்கி பயணிப்பார்கள். இவர்களுக்கு தற்பெருமை சற்று அதிகமாகவே இருக்கும். இவர்கள் குருவை அதிபதியாக கொண்டுள்ளதால் பணத்தின் மீது எந்த வித ஈடுபாடும் இவர்களுக்கு இருக்காது. நண்பர்கள், குடும்பங்கள்,உறவினர்களை மட்டும் தான் பெரிதாக நினைப்பார்கள். இவர்களிடம் பொறுப்பற்ற குணம், எதையும் யோசிக்காமல் உடனே செய்துவிடுவார்கள். நேர்வழியில் செல்வார்கள். வணங்க வேண்டிய தெய்வம் தட்சணாமூர்த்தி.
ராசியில் பத்தாவது ராசியாக இருப்பது மகரம். இந்த ராசியை ஆங்கிலத்தில் Capricorn என்று அழைப்பார்கள் (Capricorn in Englsih). இந்த ராசியின் அடையாளத்தை பார்த்தோம் என்றால் முதலை. இந்த ராசிகாரர்கள் இரக்க குணம் கொண்டவர்கள். ரொம்ப அமைதியானவர்கள். அதிகமாக யாரிடமும் பேச மாட்டார்கள். பேச வேண்டும் நினைத்தால் அவ்வளோதான் நிறுத்த மாட்டார்கள். இவர்கள் முதலை போல குணம் கொண்டவர்கள் ஒரே இடத்தில் கொண்டு தங்களின் காரியங்களை செய்துவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் முதலை பார்பதற்கு அமைதியாக இருப்பது போல தெரியும் ஆனால் அதனை சுற்றியுள்ள அனைத்து காரியங்களையும் அது கவனித்துக்கொண்டு தான் இருக்கும்.
தன்னை சுற்றியுள்ளவர்களை இவர்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார்கள். பெரியவர்களை மதிப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது போன்ற நல்ல குணங்கள் இவர்களிடம் எப்போதும் இருக்கும். இவர்கள் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருப்பார்கள். வாய்ப்பு கிடைத்தவுடன் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்வார்கள். இந்த ராசியினர்கள் சிவபெருமானை வழிபடலாம்.
ராசியில் பதினொன்றாவது ராசியாக இருப்பது கும்பம் . இந்த ராசியை ஆங்கிலத்தில் Aquarius (Aquarius in English) என்று அழைப்பார்கள். இந்த ராசியின் அடையாளத்தை பார்த்தோம் என்றால் ஒரு மனிதன் பானை ஒன்றை சுமர்ந்து நிற்பது போல தெரியும். இவர்கள் மற்றவர்களிடம் எப்போதும் எதையும் எதிர்பார்க்காமல் பழகமாட்டார்கள். மற்றவர்களால் இவர்களுக்கு என்ன லாபம் பெறலாம் என பார்த்து பழகுவார்கள். இந்த ராசியினரின் மனதில் என்ன இருக்கிறது என்று யாராலும் கண்டுப்பிடிக்க முடியாது. அவர்கள் சில ரகசியங்களை அவர்களே வைத்திருப்பார்கள்.
இவர்கள் ஒரு செயலை செய்தால் அது மற்றவர்கள் அவரை மதிக்கும்படி செய்வார். தன்னை முழுமையாக வெளிகாட்ட மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களிடம் உள்ள குறைகளை பழித்து பேசும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் குறைகளை எளிமையாக கண்டுப்பிடித்துவிடுவார்கள். இவர்கள் என்னதான் படித்து பல பட்டங்கள் பெற்றாலும் பிரபலம் ஆவது மிகவும் கடினம். பெரும்பாலான நேரங்களில் இவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்று சந்தேகம் ஏற்படும். காரணம் இவர்களை அவ்வளவு சீக்கிரம் புரிந்துக்கொள்ள முடியாது. திடமான மன உறுதி உடையவர்கள் ஆவார்கள். இவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் சிவபெருமான்.
ராசியில் பன்னிரண்டாவது ராசியாக இருப்பது கும்பம் . இந்த ராசியை ஆங்கிலத்தில் (Pisces in English) என்று Pisces அழைப்பார்கள். இந்த ராசியின் அடையாளத்தை பார்த்தோம் என்றால் இரண்டு மீன்கள். இதனை நீர் ராசிகள் என்று அழைப்பார்கள். இந்த ராசியினர் தன்னையும் தன்னை சுற்றியுள்ள இடங்களையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மீன்களை போல எப்போதும் ஒரு இடத்தில் இல்லாமல் அங்கும் இங்கும் செல்வார்கள். எப்போதும் கூட்டத்துடன் இருக்க நினைப்பார்கள். மற்றவர்களுக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் முதலில் வருவது இவர்கள் தான்.
உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் தான் இந்த ராசியினர்கள். இவர்களிடம் எப்பொழுதும் அன்பும், பொறுமையும் கலந்திருக்கும். பார்ப்பதற்கு அமைதியானவர்களாக இருப்பார்கள். கடினம் என்ற சொல்லே இவர்களுக்கு பிடிக்காது. எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்வார்கள். இவர்கள் முடிவெடுப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இந்த ராசியினர் வணங்க வேண்டிய தெய்வம் தட்சணாமூர்த்தி.
மேலும் படிக்க: Macha Sastram Tamil: அதிர்ஷ்டம் தரும் மச்ச பலன்கள்..! |
Aries (மேஷம்), Taurus (ரிஷபம்), Gemini (மிதுனம்), Cancer (கடகம்), Leo (சிம்மம்), Virgo (கன்னி), Libra (துலாம்), Scorpio (விருச்சிகம்), Sagittarius (தனுசு), Capricornus (மகரம்), Aquarius (கும்பம் ), Pisces (மீனம்).
12 ராசிகள்
27 நட்சத்திரங்கள்
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…