அக்னி நட்சத்திரம் Agni Natchathiram 2024 ஆண்டு தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இந்த நட்சத்திரம் இந்திய துணைக்கண்டத்தில் வருடாவருடம் நிகழக்கூடிய ஒரு நிகழ்வாகும். இந்த அக்னி நட்சத்திரம் ஏப்ரல் நடுப்பகுதி மற்றும் மே நடுப்பகுதிக்கு இடையில் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த காலக்கட்டத்தில் வறண்ட வானிலை நிலவும். எப்போது காற்றோட்டமாகவும், நீரோட்டத்துடனும் நமது உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அக்னி நட்சத்திரத்தின் போது மக்கள் பல சடங்குகளை செய்து வருகின்றன. அப்போது அக்னி கடவுளான அக்னியை அவர்கள் பிராத்தனை செய்கின்றனர். ஏனெனில் அப்போதுதான் அக்னி கடவுளை சாந்தப்படுத்தவும், அவருடைய ஆசிர்வாதமும் கிடைப்பதாக ஐதீகம். இந்த பதிவில் (Agni Natchathiram 2024 In Tamil) பற்றி பார்ப்போம்.
நமது முன்னோர்கள் அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்களை செய்யக் கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அறிவியல் காரணங்களுக்காக சில காரியங்களை செய்ய கூடாது என்று கூறியிருப்பார்கள். ஆனால் அது காலப்போக்கில் ஜோதிடத்தின் வழியாக அவர்கள் செய்ய கூடாது என கூறி வந்ததாக மாறிவிட்டது.
உண்மையில் அக்னி நட்சத்திரத்தில் சுபகாரியங்களை செய்யலாம். அந்தக் காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் அக்னி நட்சத்திரம் காலத்தில் சில காரியங்கள் செய்ய சிரமமாக இருக்கும் என்பதால் சில காரியங்களை அக்னி நட்சத்திரம் முடிந்ததும் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளனர். அக்னி நட்சத்திரம் முழுமையும் சூரிய பகவானை குறிக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த காலக்கட்டத்தில் சூரிய பகவான் மிகவும் உக்கிரமாக இருப்பதால் சூரிய பகவனால் தரக்கூடிய வேலை வாய்ப்பு, குழந்தை வரம், ஆரோக்கியம், ஆகியவை இந்த காலக்கட்டத்தில் பெறுவது சற்று கடினமாக இருக்கும்.
பொதுவாக இந்த காலக்கட்டத்தில் அக்னி நட்சத்திரத்தில் அனைத்து காரியங்களையும் செய்யலாம். ஆனால் குறிப்பிட்ட சில காரியங்களை செய்யதால் அது அக்னி கடவுளான சூரியனின் பார்வையில் சற்று நல்ல அமைப்பை கொடுக்கும் என்று ஒரு ஐதீகம்.
அக்னி நட்சத்திரத்தில் (Agni Natchathiram in tamil nadu 2024) முருகன் கோயில்களில் விஷேசமாக இருக்கும். அக்னி நட்சத்தின் போது பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணி ஆகிய இடங்களில் அக்னி நட்சத்திரம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அக்னி நட்சத்திரத்தின் போது பழனியில் உள்ள முருகன் கோயில்களில் விஷேசமாக கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோயில்களுக்கு சென்று வழிபடுவார்கள். இந்த காலக்கட்டத்தில் பழனி முருகனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வார்கள். அபிஷேகம் செய்த பன்னீரை கடைசியாக தீர்த்தம் என பக்கதர்களுக்கு கொடுப்பார்கள்.
அந்த தீர்த்தத்தை பக்தர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று வயல்கள் மற்றும் கேணிகளில் ஊற்றுவார்கள். அக்னி நட்சத்திரம் பொதுவாக சிவபெருமானின் மகன் அதாவது முருகபெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழாவாக பார்க்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் முருகன் கோயில்களில் அபிஷேகங்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
விஞ்ஞான ரீதியாக பார்த்தால் அக்னி நட்சத்திரம் என்ற ஒரு வார்த்தையே அதில் இடம்பெறவில்லை என்றேதான் கூறவேண்டும். அக்னி நட்சத்திரம், கத்தரி வெயில் போன்றவைகள் ஜோதிட ரீதியாகதான் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இது வடகிழக்கு பருவக் காற்று வீசும் காலத்திற்கும் மற்றும் தென்மேற்கு பருவக் காற்று வீசும் காலத்திற்கு நடுவில் இந்த வானிலை நிலவுகிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால் இது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் வானிலை தான்.
அக்னி நட்சத்திர வெயில், கத்தரி வெயில், சித்திரை வெயில், கோடை வெயில் என பெயர்களில் இது அழைக்கப்படுகிறது.
மே 4 முதல் மே 29 வரை உள்ளது.
அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை. சுப காரியங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம். என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…