செய்திகள்

இது ஒரு பொன்மாலை பொழுது.. நீயா நானா அரங்கத்தில் ஒலித்த பாடல் ரகசியம்..!

பிரபல தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவும் நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கோபி. இவரை நீயா நானா என்ற கோபிநாத் (Neeya Naana Gopinath) என்று கூறினால் தான் அனைவருக்கும் தெரியும். இந்த நிகழ்ச்சி அனைவரும் பிடித்த நிகழ்ச்சியாக தற்போது உள்ளது. இதில் அவ்வபோது நடக்கும் சில சுவராஸ்யமான நிகழ்வுகள் சமூக வலைதளங்ளில் டிரெண்ட் ஆவதும் வழக்கம் தான்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதிக்கான எபிசோட்டில் தத்துவப் பாடல் ரசிகர்களும், மறுபுறம் பாடகர்களும் கலந்துக்கொண்டு தங்களின் இனிமையான தருணங்களை பகிர்ந்துக்கொண்டும், அந்த பாடல்கள் அவர்களுக்கு எவ்வாறு மருந்தாக அமைந்தது என்பதையும சுவரஸ்யமாக விளக்கினார்கள்.

சில நேரங்களில் யாரிடமும் சொல்ல முடியாத நேரங்களில் கூட, அந்த ரகசியமான நேரங்களில் அவர்களுக்கு அருமருந்தாய் சில பாடல்கள் அமைந்திருக்கும். அதுபோல சில மகிழ்ச்சியான நேரங்களிலும் சில பாடல்கள் மருந்தாக அமைந்திருக்கும். அதை பற்றி தான் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி எபிசோட்டில் (Neeya Naana Latest Episode) விவாத நிகழ்வாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கான பிரோமோ வெளியானதும் நிகழ்ச்சி இப்படி தான் போக போகிறது என்ற அனைவரிடத்திலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்தது. நீயா நானா நிகழ்ச்சியில் பல முறை தமிழ் சினிமா பாடல் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தாருலும், இந்த தத்துவ பாடல் எபிசோட் அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.

தத்துவப்பாடல்களில் கண்ணதாசன் போன்ற ஒரு கவிஞர் அந்த காலத்தில் கில்லியாக இருந்தாலும், அவரை தொடர்ந்து வந்த வாலி, வைரமுத்து 80ஸ், 90ஸ் கிட்ஸ்க்கும் 2கே கிட்ஸ்க்கு கவிஞர் நா.முத்துக்குமார் போன்ற கவிஞர்கள் அவர்களின் தத்துவப்பாடல்களால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்தார்கள் என்று தான் கூற வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் நிழல்கள் திரைப்படத்தில் இருந்து இது ஒரு பொன் மாலை பொழுது என்ற அந்த பாடல் வரிகளை பாடகர்கள் பாடிய போது கோபிநாத் தன்னுடைய நினைவலைகளையும் பகிர்ந்துக்கொண்டார். அது அனைவராலும் ரசிக்கும்படியாக இருந்தது. அவர் கூறும் போது கே.கே நகரில் 13 கிலோ துணி மூட்டையை நான் தூக்கி கொண்டு திரிந்த போது எனக்கு உத்வேகம் கொடுத்தது இந்த பாடல் தான் என்று கூறு கண்கலங்கினார்.

எத்தனையோ நிகழ்ச்சிகளை நீயா நானா கோபிநாத் தொகுத்து வழங்கிருந்தாலும், இந்த எபிசோட் அவர் மிகவும் உணர்ச்சி வசமாக தான் நடத்தினார் என்று தான் கூறவேண்டும். எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு தனி இடத்தை கொடுத்தது என்றே கூறலாம்.

மேலும் படிக்க: மர்மங்கள் நிறைந்த ஆவிகள் இருக்கும் மலை… நள்ளிரவில் நடைபெறும் சிறப்பு பூஜைகள்…
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago