Erumbu Palangal: நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி நம் முன்னோர்கள், சில சாஸ்திரங்களை வகுத்து வைத்துள்ளன. அதன்படி பல்லி விழுந்தால் என்ன பலன், பல்லி சப்தமிட்டால் என்ன பலன், காகம் கரைந்தால் என்ன பலன், பஞ்ச பட்சி பலன் என்று நம்மை சுற்றியுள்ள விலங்குகள், பூச்சிகள், ஊர்வன என அனைத்து உயிரினங்களுக்கும் உரிய சாஸ்திரங்களை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
நம் அன்றாட வாழ்கையில் காலை முதல் இரவு உறங்க செல்லும் வரை, நாம் பார்க்கும் விடயங்கள் மூலம் நமது வாழ்க்கையில் என்ன நடக்க போகிறது என எதிர்க்காலத்தை குறிக்கும் என்று கருதப்படுகிறது. உதாரணமாக காலை எழுந்தவுடன் கழுதையோ, நரியோ கண்டால் யோகம் என்றும், அதுவே பூனை போன்றவற்றை கண்டால் தீமை எனவும் நம்பப்படுகிறது.
வீட்டின் அருகே காகம் கரைந்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அது கரையும் திசையை வைத்து அதனால் ஏற்பட போகும் விளைவுகளை நாம் முன்னதாகவே அறிந்துக்கொள்ளலாம். அந்த வகையில் நாம் இப்பொழுது நம் வீட்டில் அன்றாட பார்க்கும் ஒரு பூச்சி தான் எறும்பு. சுறுசுறுப்பான ஒரு உயிரினம் என்றால் அது எறும்பு தான். அந்த எறும்பை நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ கண்டால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி நீங்கள் இருக்கும் இடம் சுற்றி அதாவது, வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கருப்பு எறும்பை (Erumbu Palangal) கண்டால் அது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுவே சிவப்பு எறும்பை கண்டால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக சிவப்பு எறும்பு (Sivappu erumbu veetil vanthal enna palan) கடிக்கும் குணம் கொண்டது. ஆனால், கருப்பு எறும்பு கடிக்காது. கருப்பு எறும்புகள் பொதுவாக மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் நம் வீட்டில் சிவப்பு எறும்புகள் தென்படும் அளவிற்கு கருப்பு எறும்புகள் தென்படாது. கருப்பு எறும்பை (karuppu erumbu veetil vanthal enna palan) கண்டால் பணம் புழங்கும் என நம்பப்படுகிறது.
பொதுவாக கருப்பு எறும்பு சுபமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. கருப்பு எறும்பை கண்டால் பதவி உயர்வு, நிதி நிலை முன்னேற்றம், பிரச்சனை முடிவு என அனைத்தும் மங்களகரமகா நடக்கும்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…