செய்திகள்

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு மழை..! அடுத்த இரண்டு நாட்களுக்கு கொட்டப்போகும் மழை..!

கோடை காலம் தொடங்கியது முதல் கொளுத்தும் இந்த அதிகபட்ச வெயிலால் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இந்த வெயிலால் துன்பப்படும் சூழல் தான் தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாக மழை பெய்தால் (Rain in Summer) இந்த கோடையில் வெயில் சற்று குறைந்த குளிர்ந்த சூழல் நிலவும் என்று நம்மில் பலரும் நினைத்து இருப்போம். அனால் இன்றுவரை ஒரு பகுதியில் கூட மழை பெய்யவில்லை என்பது தான் உண்மை.

இந்நிலையில் தான் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை கொட்டி தீர்க்க போகிறது என்று தகவல் (Rain in Tamilnadu) வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதன் படி அதிகபட்சமாக கன்னியாகுமரியில் உள்ள இரணியல் என்னும் பகுதியில் 30 மிமீ மழை பாதிவாகியுள்ளது. அதேபோல திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதியிலும் தலா 30 மிமீ மழை பெய்துள்ளது.

அதேபோல திருச்செந்தூர் AWS, நாலுமுக்கு, குளச்சல், காக்காச்சி உள்ளிட்ட இடங்களில் தலா 20 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் தான் தற்போது சென்னை வானிலை மையம் (Chennai Meteorological Centre) முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் படி மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக இன்று (15.04.2024) தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய அதிக வாய்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளதுழ.

மேலும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவைகள் தவிர்த்து உள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல நாளை ஏப்ரல் 16-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 17-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அன்றைய தினம் மற்ற மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் வருகின்ற ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தகவல் (Chennai Meteorological Centre Recent Rain News) வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு… நடந்தது என்?
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago