தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் பல வகையான வாக்குறுதிகளை அறித்தது. அதன்படி திமுக ஆட்சி அமைத்த பிறகு தங்களின் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு தான் வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK. Stalin) 8,801 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை (Puthiya Thittangal) தொடங்கிவைக்க உள்ளார்.
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் இதுவரை பல்வேறு துறைகளில் தொடங்கப்பட்டு முடிவடைந்துள்ள பல திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காகக் காணெலி மூலம் திறந்து வைக்க உள்ளார். இத்திட்டதில் (New projects) சென்னை மருத்துவக் கல்லூரி அருகே கட்டப்பட்டுள்ள ஈவினிங் பஜார் சாலை மற்றும் ஈவேரா பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பிற்கு குறுக்கே ரூ.9.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2-ம் சுரங்க நடைபாதையையும் இன்று திறந்து வைக்கிறார்.
இதுமட்டுமின்றி ரூ.111.35 கோடி செலவில் தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் நீர்வளத்தறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாசன கட்டமைப்புகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் ஆகியவற்றையும் மேலும் திருச்சி மாவட்டத்தில் ரூ.414 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீரொழுங்கி மற்றும் அலுவலர்களின் வசதிக்காக ரூ.4.48 கோடி மதிப்பிலான 50 ஈப்புகளையும் வழங்குகிறார்.
மேலும் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.210.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டடங்கள் மற்றும் ரூ.12.27 கோடி செலவில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறையினரால் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் குடியிருப்புகள், வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் போன்றவற்றையும் இன்று முதல்வர் தொடங்கிவைக்கிறார்.
இவைகள் மட்டுமின்றி தமிழக மக்களின் நன்மைக்காக தமிழக அரசு மற்றும் அரசு துறையினரால் உறுவாக்கப்பட்டுள்ள மொத்தம் 8,801 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இன்று தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் தொடங்கி (New Schemes Started By CM Stalin) வைக்கிறார். இந்த புதிய திட்டங்கள் முதல்வர் மு. க.ஸ்டாலின் அவர்களால் (Chief Minister Stalin will launch new schemes) காணொளி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கவுள்ளார்.
இதையும் படியுங்கள்: போதைப்பொருள் கடத்தல் வழக்கு..! முன்னாள் திமுக பிரமுகருக்கு சம்மன்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…