நம் இந்தியவின் அரசியலமைப்பு (Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். மேலும் இச்சட்டமானது உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக உள்ள சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் ஆகும். மேலும் உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பு சட்டம் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் தான்.
இச்சட்டமானது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு ஆகும். அதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் பற்றி சிலருக்க தொரிந்தாலும் அதுகுறித்த தெளிவு பலரிடத்தில் இல்லை. எனவே இப்பதிவில் நாம் இந்திய அரசியலமைப்பு சட்டம் (Constitution of India in Tamil) குறித்து பார்க்கலாம்.
அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு என்பது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவாகும். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கு பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவரும் உட்பட ஏழு பேர் கொண்டக் குழு ஒன்று (Drafting committee) உருவாக்கப்பட்டது.
ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவானது தனது அறிக்கையை 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி ஒப்படைத்தது. அதன் பிறகு முழுவடிவம் பெற்ற சட்ட வரையறை 1949-ம் ஆண்டு நவம்பர் 26-இல் அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவரான இராஜேந்திரப் பிரசாத்த் அவர்களின் கையொப்பம் பெற்றது.
அதன் பிறகு ஜனவரி 24-இல் நடைபெற்ற கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாளில் இந்தியாவிற்குச் சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதன் நினைவாக தான் ஜனவரி 26-ஆம் தேதியை இந்தியக் குடியரசு நாளாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: President Name List of India: இந்தியாவின் குடியரசு தலைவர்கள் பெயர் பட்டியல்..! |
“நாம், இந்திய மக்கள், உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசாகக் கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை; படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட; மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட. இந்த 1949, நவம்பர் 26-ஆம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய மன்றத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்றுச் சட்டமாக்கி நமக்கு தருகிறோம்” |
பகுதி 1 (1-4) | இந்திய அரசு பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை. |
பகுதி 2 (5-11) | இந்திய குடியுரிமை பற்றியது. |
பகுதி 3 (12-35) | அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள். |
பகுதி 4 ( 36-51) | அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள். |
பகுதி 4A (51 A) | அடிப்படை கடமைகள்.(1976-ஆம் ஆண்டு 42-ஆவது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது) |
பகுதி 5 (52- 151) | ஒன்றிய அரசமைப்பு அதாவது குடியரசுத் தலைவர்,துணைக் குடியரசுத் தலைவர், நடுவண் அமைச்சரவை, நாடாளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு. |
பகுதி 6 (152-237) | மாநில அரசமைப்பு, ஆளுநர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு. |
பகுதி 7 (238) | அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப்பட்டுள்ளது. |
பகுதி 8 (239 -242) | ஒன்றியப் பகுதிகள் குறித்து. |
பகுதி 9 (243-243O) | உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. |
பகுதி 9A (243P-243Z,243ZA-243ZG) | நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. |
பகுதி 10 (244) | பட்டியல் சாதிகள்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து. |
பகுதி 11 (245-263) | ஒன்றிய மற்றும் மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு. |
பகுதி 12 (264-300) | அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள். |
பகுதி 13 (301- 307) | இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள். |
பகுதி 14 (308-323) | அரசுப் பணிகள் |
பகுதி 14A ( 323ஏ, 323 பி) | ஒன்றிய அரசின் தீர்ப்பாயங்கள். |
பகுதி 15 (324-329) | தேர்தல்கள், தேர்தல் ஆணையம். |
பகுதி 16 (330-342) | பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள் பற்றி. |
பகுதி 17 (343-351) | அலுவல் மொழி, வட்டார மொழி,நீதி மன்றங்களில் மொழி. |
பகுதி 18 (352-360) | அவசர நிலைக்கானது பிரகடனம் (எமெர்ஜென்சி) |
பகுதி 19 (361-367) | இதர (இதில் குடியரசு தலைவர், ஆளுநர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில) |
பகுதி 20 (368) | இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை. |
பகுதி 21 (369-392) | தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள் |
பகுதி 22 (392-395) | குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை. |
தற்போது வரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 11 அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை இனி பார்க்கலாம்.
முதலாம் அட்டவணை | Articles 1 மற்றும் 4 |
2-ம் அட்டவணை | (Articles 59(3), 65(3), 75(6), 97, 125, 148(3), 158(3), 164(5), 186 மற்றும் 221) |
3-ம் அட்டவணை | Articles 75(4), 99, 124(6) |
4-ம் அட்டவணை | Articles 4(1) மற்றும் 80(2) |
5-ம் அட்டவணை | Article 244(1) |
6-ம் அட்டவணை | Articles 244(2) மற்றும் 275(1) |
7-ம் அட்டவணை | Article 246 |
8-ம் அட்டவணை | Articles 344(1) மற்றும் 351 |
9-ம் அட்டவணை | Article 31-B |
10-ம் அட்டவணை | Articles 102(2) மற்றும் 191(2) |
11-ம் அட்டவணை | Article 243-G |
12-ம் அட்டவணை | Article 243-W |
இப்பதிவில் நாம் இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி முக்கிய தகவல்களை பார்த்துள்ளோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இதையும் படியுங்கள்: Tamil Nadu State Symbols: தமிழ்நாட்டின் சின்னங்கள் மற்றும் அதன் சிறப்புகள்..! |
1949-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையடைந்து ஏற்கொள்ளப்பட்டது.
1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்திய அரசியலமைப்பு 22 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது
தற்போது வரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 11 அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை உருவாக்கியவர் பீ. இரா. அம்பேத்கர் ஆவார்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…