செய்திகள்

மீண்டும் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு… அதிர்ச்சியில் மக்கள்..!

கோடை காலம் என்லாளே அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். இதுபோன்ற விடுமுறை நாட்களில் அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலா பயணத்திற்கு செல்வார்கள். இந்து போன்று போகும் சுற்றுலா பயணத்திற்கு செல்பவர்களுக்கு ஐகோர்ட் ஒரு புதிய உத்தரவை (Madras High Court Order) அறிவித்துள்ளது.

ஊட்டி , கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வரும் மே 7 ஆம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறை அமல்படுத்த (E-Pass for Kodaikanal and Ooty) வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நம் உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு பெரும்பாலான குடும்பங்கள் சுற்றுலா பயணமாக கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்கு செல்வார்கள். இதன் காரணமாக அதிகப்படியான சுற்றுலா பயணிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் இருப்பார்கள் அவர்கள் வரும் வாகனங்களும் அதிகமாக இருக்கும் என்பதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.

இந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நேற்று சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி வாயிலாக இந்த வழக்கில் ஆஜரானானர்கள். அரசு தரப்பில் வக்கீல் ஜெனரல் பி.எஸ். ராமன் ஆஜரானார். அப்போது அவர் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய இருக்கின்றன என தெரிவித்தார்.

அதன் பிறகு ஊட்டிக்கு தினமும் 1,300 வேன்கள் உட்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருகின்றன என கூறப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், இத்தனை வாகனங்கள் சென்றால் சுற்றுச்சூழல் என்ன ஆவது, மேலும் உள்ளூர் மக்கள் நடமாட இயலுமா என கேல்வி எழுப்பினர். அதன் பிறகு சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்களின் ஆய்வு முடிவுகள் வரும் வரை இடைக்கால நடிவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அதன்படி கொரோனா காலத்தில் கடைபிடிக்கப்பட்ட இ-பாஸ் முறையை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் (E-Pass on Kodaikanal and Ooty) வரும் மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு இ-பாஸ் வாங்கி வரும் வாகனங்களில் எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலா அல்லது தொடர்ந்து தங்குவார்கள் என்பது போன்ற விவரங்களை பெற வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி… 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago