தமிழ் சினிமாவில் இன்றளவும் சில படங்கள் மற்றும் பாடல்களை இன்றளவும் மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. அந்த அளவிற்கு அந்த படங்களின் கதைகள் அல்லது பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் இருந்து நீக்க முடியாத அளவிற்கு இடம் பிடித்திருக்கும். அந்த வகையில் இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் நீங்காத இடம் பிடித்த பாடல் என்றால் அது அஜித் தபு மற்றும் நடிப்பில் வெளி வந்த என்ன சொல்ல போகிறாய் என்ற பாடல் வரிதான்.
தமிழ் சினிமாவில் இளைய ராஜாவிற்கு பிறகு தனக்கென தனி இடத்தை பிடித்த இசையமைப்பாளர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் இசையில் ஆரம்ப கால பாடல்கள் அனைத்துமே மனதிற்கு அவ்வளவு இதமாக இருக்கும். வைரமுத்து மற்றும் இசைப்புயல் இருவரும் இணைந்தாலே அந்த பாடல் மாபெரும் வெற்றி அடையும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பல பாடல்கள் தனித்துவமாக அமைந்து வெற்றி பெற்றுள்ளது.
அஜித் நடிப்பில் திரைக்கு வந்த படம் தான் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் (Kandukondain Kandukondain movie) திரைப்படம். இந்த படம் வெளிவந்து 24 அண்டுகளை கடந்தும் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளது என்றே தான் கூறவேண்டும். இந்த பாடலில் வரும் என்ன சொல்ல போகிறாய் பாடல் வரி காதலன் காதலியின் சம்மதத்திற்காக காத்திருக்கும் தவிப்பை உணர்வுப்பூர்வமாக நமக்கு இந்த பாடல் கொடுக்கும்.
இந்த பாடலின் முதல் வரியில் இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்.. என்ற வரியில் தொடங்கி என்ன சொல்ல போகிறாய் (Enna Solla Pogirai) என்று முடியும் வரிகள் வரை உணர்வுப்பூர்வமாக இருக்கும். இந்த வரியில் என் வாழ்க்கையில் காதலி இல்லை என்று சொல்ல ஒரு நொடி போதும். ஆனால் என் வாழ்க்கையில் நீ இல்லை என்று சொல்ல இந்த ஜென்மம் இல்லை, அடுத்த ஜென்மத்தில் கூட தாங்க முடியாது என்று காதலன் தவிப்பை அழுகாக கூறியிருப்பார்.
அடுத்த வரிகளில் காதன் கேள்விக்கு கண்களின் பதிலென்ன மெளனமா.. மெளனமா என்ற வரி ஒருவரின் காதலை உணர்த்துவது அவரின் கண்கள் தான் அவ்வாறு இருக்கும் போது அவனின் காதலை கண்களால் கூறும் போது அந்த கண்களின் கேள்விக்கு காதலி பதில் கூறாமல் இருப்பது சரியா என கூறியிருப்பார்.
இது போல அந்த பாடலில் உள்ள கவிஞர் வைரமுத்துவின் அனைத்து அழகான வரிகளுக்கும் ஆழமான விளக்கங்கள் உள்ளன. அஜித் மற்றும் தபு இந்த பாடலில் அவர்களை காட்சிப்படுத்தும் விதமும் மிக அழகாக இருக்கும். இந்த பாடலுக்கு இசைப்புயலின் இசை தனிச்சிறப்பாக அமைந்தது என்றே தான் கூறவேண்டும். இன்றும் இந்த பாடலை பலரும் யூடியூப்பில் கேட்டு ரசித்து வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…