பிரபலமான தமிழ் சீரியல்களில் ஒன்றாக உள்ள சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் பிரபல தொலைகாட்சியான சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. மேலும் இந்த சீரியலை பிடிக்காத இல்லத்தரசிகளே இருக்க முடியாது என்னும் அளவுக்கு பிரபலமாக உள்ள சீரியல் தான் இது.
இந்த சீரியலின் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். மேலும் இந்த சீரியலின் கதாநாயகியாக ஜனனி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா (Ethirneechal Serial Actress Madhumitha) மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு நடிகை மதுமிதா சென்ற கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து சோழிங்கநல்லூர் மதுமிதா தனது காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து (Serial Actress Madhumitha Accident) ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவகுமார் என்பவர் பலத்த காயம் அடைந்தார். அதன் பிறகு அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து (Ethirneechal Serial Actress Accident) காரணமாக நடிகை மதுமிதா மீது பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், சிறு காயங்கள் ஏற்படுத்துதல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் காயமடைந்த ரவிக்குமார் வீடு திரும்பினார்.
இந்த விபத்தை மதுமிதா குடிபோதையில் செய்துள்ளார் என்று வதந்திகள் பரவியது. இது தகவல் குறித்து மதுமிதா (Serial Actress Madhumitha) விளக்கம் அளிக்கும படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, நான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி ஒரு போலீஸ்காரர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாகவும், இந்த விபத்தால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் உண்மை அல்ல என்று அவர் கூறினார். மேலும் எனக்கு மதுப்பழக்கம் கிடையாது என்றும் ஒரு சிறிய விபத்து நடந்தது உண்மைதான் என்றும் அவர் கூறினார். மேலும் அந்த போலீஸ் அதிகாரி தற்போது நலமுடன் இருக்கிறார். நானும் நலமாக இருக்கிறேன் என்று கூறி அவர் இந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: பிரபல நடிகை டாப்ஸிக்கு திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா? |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…