இன்றைய காலகட்டத்தில் நிலத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இவை ஒருபுறம் இருக்க நம்மில் பலருக்கு ஒரு முறையாவது அதிக நிலம் யார் வைத்திருப்பார் என்ற சந்தேகம் எழுந்து இருக்கும். இந்திய அளவில் பலர் சொந்த வீடுகள் இன்றி இருந்தாலும் பலர் அதிக அளவிலான நிலத்துடன் தான் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் அதிக நிலம் யாரிடம் உள்ளது (Maximum Land In India) என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் பார்த்தால் நம் இந்திய அரசிடம் தான் அதிக நிலம் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆம் நம் இந்திய அரசிடம் தான் அதிக அளவிலான நிலம் உள்ளது. மேலும் இந்திய அரசாங்கத்தை தொடர்ந்து இன்னும் சிலர் அதிகளவில் நிலம் வைத்துள்ளனர்.
அரசாங்க நில தகவல் அமைப்பு (GIS) இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 2021-ம் பிப்ரவரி மாதம் இந்திய அரசு சுமார் 15,531 சதுர கிலோமீட்டர் நிலத்திற்கு உரிமையாளராக இருந்தது. மேலும் இந்த நிலத்தில் 51 அமைச்சகங்கள் மற்றும் 116 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதை விட சிறிய நாடுகள் பல உள்ளன.
இதில் ஆச்சரியப்பட வைப்பது என்னவென்றால், அது இந்திய அரசுக்கு சொந்தமான நிலத்தை விட குறைவான நிலத்தில் கிட்டத்தட்ட 50 நாடுகள் உலக அளவில் உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவற்றில் சிலவற்றினை இனி பார்க்கலாம். கத்தார் (11586 சதுர கிலோமீட்டர்), பஹாமாஸ் (13943 சதுர கிலோமீட்டர்), ஜமைக்கா (10991 சதுர கிலோமீட்டர்), லெபனான் (10452 சதுர கிலோமீட்டர்), காம்பியா (11295 சதுர கிலோமீட்டர்), சைப்ரஸ் (9251 சதுர கிலோமீட்டர்), புரூனே (5765 சதுர கிலோமீட்டர்), பஹ்ரைன் (5765) சிங்கப்பூர் (726 சதுர கிலோமீட்டர்) போன்ற நாடுகள் உள்ளன.
அமைச்சகங்கள் வாரியாக பார்த்தால், ரயில்வே அமைச்சகத்திடம் அதிக அளவிலான நிலம் உள்ளது. இந்திய ரயில்வே-க்கு நாடு முழுவதும் 2926.6 சதுர கிலோமீட்டர் நிலம் உள்ளது. இதற்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நிலக்கரி அமைச்சகம் (2580.92 சதுர கிலோமீட்டர்) உள்ளது.
இதையும் படியுங்கள்: Lover Movie Box Office Collection: இரண்டு நாளில் இத்தனை கோடியா? |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…