இன்றைய காலகட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்பது அதிகமாக தான் உள்ளது. விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்புகள் என்பதை அறிந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து செய்து தான் வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் கூட விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்காக பல முக்கிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள திட்டங்களை விரிவுபடுத்துதல் என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த தகவலில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை (Vivasayigalukku Ukka Thogai) வழங்குவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் படி கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம் ஊக்கத்தொகைகள் (Incentives for farmers) வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கரும்பின் ஆதரவு இதற்கு முன்னர் ரூபாய் 315 ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்த அறிவிப்பு மூலம் கரும்பின் ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு 340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 215 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசின் 340 மற்றும் தமிழக அரசின் ஊக்கத்தொகை (Ukka Thogai) 215 ஆகியவை வரவு வைக்கப்படும். இந்த தகவல் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: பூண்டு விலை உயர்வை தொடர்ந்து அதிரடியாக உயர்ந்துள்ள அரிசி விலை..! எவ்வளவு தெரியுமா? |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…