ஆன்மிகம்

Kanavu Palangal in Tamil: நம் கனவில் இவைகள் வந்தால் என்ன பலன்கள் தெரியுமா?

Kanavu Palangal in Tamil: பொதுவாக நம் அனைவருக்கும் இரவு உறங்கும் போது கனவுகள் வரும். சிலருக்கு காலை எழுந்தவுடன் அது நினைவிருக்கும் பலருக்கும் அது நினைவிருக்காது. ஆனால் சிலருக்கு அவர்கள் கண்ட (kanavu palangal) கனவுகளினால் பயம் ஏற்படும். காரணம் அந்த கனவு குறித்த சிந்தனையில் இருப்பார்கள். இரவு நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவுகள் ஏற்படும். அந்த கனவுகள் கட்டாயம் பலிக்கும் என்று கூறுவார்கள்.

ஒரு சிலர் பகல் கனவு பலிக்காது என்று கூறுவார்கள். ஆனால் அதிகாலை கனவுகள் பலிக்கும். கனவு நம் மூளையில் ஏற்படும் ஒரு முக்கிய நிகழ்வாகும். நாம் ஆழந்த நிலையில் உறங்கினாலும் நம் மூளை செயல்பட்டு கொண்டே தான் இருக்கும். அவ்வாறு உறக்க நிலையில் நம்மையும் அறியாமல் சில கனவுகள் ஏற்படும். அநடா கனவுகளினால் நமக்கு என்ன பலன்கள் (All Kanavu Palangal in Tamil) என்பதை காண்போம்.

Table of Contents

இறந்தவர்கள் நம் கனவில் வந்தால் என்ன பலன்Kanavu Palangal in Tamil

இறந்தவர்கள் நம் கனவில் வந்து (iranthavargal kanavil Vanthal enna palan) அழுவது போல் கனவு கண்டால் நல்லது அல்ல. இறந்தவர்களுடன் பேசுவது போல கனவு கண்டால் உங்களுக்கு நன்மைகள் நடக்க போவதாக அர்த்தம். நீங்கள் பார்க்கும் வேலைகளில் நல்ல பெயரும், நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.

ஒருவருடைய தாய், தந்தை இறந்திருப்பார்கள். அவர்களை கனவில் கண்டால் கனவு காண்பவருக்கு வரவிற்கும் இடையூறுகளையும், சிக்கல்களை பற்றி எச்சரிப்பதாக அர்த்தம். அவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இது பலரின் வாழ்க்கையில் நடந்துள்ள உண்மை அனுபவங்கள் ஆகும்.

வயது முதிர்வின் காரணமாக ஒருவர் இறந்திருந்தால் (iranthavargal kanavil kandal enna palan), அவர்கள் கனவில் வந்தால் அது ஒரு நல்ல பலனாகும். அவர்கள் நம்மை ஆசிர்வதிப்பது போல ஒரு நம்பிக்கை. யாரேனும் இறந்து அவர்களின் சடலங்களை கனவில் கண்டால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கப்போவதாக அர்த்தம். இறந்தவர்கள் நம் வீட்டில் உறங்குவது போல கனவு கண்டால் நமக்கு ஏற்பட இருக்கும் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிக்கபோவதாக அர்த்தம்.

மனைவி இறப்பதாக கனவு கண்டால் குழந்தை பாக்கியம் ஏற்படும். ஒருவருடைய மனைவி இறந்திருந்தார் என்றால் அவரின் முகம் கனவில் சோகமாக கண்டால் கனவு காண்பவர்களின் வாழ்க்கை நிலையற்றதாக உள்ளதை குறிக்கிறது.

குழந்தைகள் இறப்பது போல கனவு கண்டால் கனவு கண்டவருக்கு வரவிற்கும் ஆபத்தை குறிக்கிறது. இறந்தவர்கள் வீட்டில் உணவு உண்பது போல கனவு கண்டால் அவருக்கு நடக்கவிருக்கும் நன்மைகளை குறிப்பதாகும். இறந்தவர்கள் உங்களுடன் பேசுவது போல கனவு கண்டால் உங்களுக்கு ஏற்பட்டு உள்ள சிக்கலான நிலையில் யாராவது உதவி செய்ய வருவார்கள் என கூறப்படுகிறது.

Animals Kanavu Palangal in Tamil – விலங்கு கனவு பலன்கள்

நம் கனவில் விலங்குகளை கண்டால் (Vilangu Kanavu Palangal in Tamil) அதற்கு ஏற்ற பலன்கள் உண்டு. பொதுவாக ஒருவருடைய கனவில் விலங்குகள் அவர்களை துரத்துவது, கடிப்பது போன்ற கனவுகள் அடிக்கடி ஏற்படும். இந்த கனவு அவர்களை சற்று பயத்திலேயே வைத்துக் கொள்ளும். எந்த விலங்குகள் கனவில் வந்தால் என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

1. Snake Kanavu Palangal in tamil பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்

ஒருவர் கனவில் அடிக்கடி பாம்பை கனவில் கண்டால் (pambu kanavu palangal in tamil) அவர்கள் தங்களுடைய குலத்தெய்வத்தை வழிபட வேண்டும் என்று அர்த்தம். குலத்தெய்வத்திற்கு ஏதேனும் நேர்த்தி கடன் இருந்தால் அதை நிறைவேற்ற வேண்டும்.

  • உங்கள் கனவில் (nalla pambu kanavil vanthal) பாம்பு உங்களை விடாமல் துரத்துவது போல கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் வறுமை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  • பாம்பு உங்களை கடிப்பது போல கனவு கண்டால் உண்மையில் அது ஒரு நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. இதுவரை உங்களை பிடித்திருந்த கெட்டவைகள் உங்களை விட்டு விலகப்போகிறது என்று அர்த்தம். இதுவரை உங்களை பிடித்திருந்த பீடைகள் உங்களை விட்டு விலக்கப்போகிறது. வறுமை நீங்கி பணவரவு உண்டு.
  • பாம்பு உங்கள் காலை சுற்றிக்கொள்வது (Pambu kanavil vanthal enna palan) போல கனவு கண்டால் உங்களுக்கு சனி பகவான் பிடிக்கப்போகிறார் என்று அர்த்தம்.

2. Elephant Kanavu Palangal in Tamil – யானையை கனவில் கண்டால் என்ன பலன்

  • உங்கள் கனவில் ஒரு கருப்பு (yanai kanavu palangal in tamil) யானையை பார்த்தால் உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட கூடிய பிரச்சனைகளை குறிப்பதாகும். நீங்கள் பார்க்கும் அல்லது தொடங்க நினைக்கும் செயல்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.
  • உங்கள் கனவில் ஒரு வெள்ளை யானையை கண்டால் மிகவும் அதிர்ஷ்டமாகும். ஏனெனில் வெள்ளை யானை கனவில் வருவது என்பது மிகவும் அரிது. வெள்ளை யானை இந்திரனின் வாகனமாக இருப்பதால் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி பெருகும்.
  • யானை கூட்டத்தை கனவில் கண்டால் உங்களுக்கு எதிர்காலத்தில் பணவரவு ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
  • யானை (Yanai kanavil vanthal enna palan) நம்மை தாக்குவது போல கனவு கண்டால் அவ்வளவு நல்லதல்ல. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

3. Dog Kanavu Palangal in Tamil – நாய் கனவில் வந்தால் என்ன பலன்

  • உங்கள் கனவில் நாய் உங்களை கடிப்பது (Dog Kadipathu Kanavu Palangal in Tamil) போல கனவு கண்டால் நீங்கள் உங்களை சுற்றியுள்ள உறவுகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். உங்களால் அவர்களுக்கோ அல்லது அவர்களால் உங்களுக்கோ ஏதேனும் பிரச்சனைகள் வரக்கூடும் என்று அர்த்தம். இதனால் நீங்கள் உறவுகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
  • நாய் உங்களை துரத்துவது போல கனவு கண்டால் உங்களை யாரோ காதலிப்பதாக அல்லது நீங்கள் யாரோ மீது விருப்பம் உள்ளதாக அர்த்தம்.
  • கனவில் நாய் குரைப்பது போல கனவு கண்டால் மற்றவர்களால் உங்களுடைய மனநிம்மதி போகும் என அர்த்தம்.
  • பழுப்பு நிற நாயை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்க போகும் முக்கிய முடிவுகளை பற்றி சற்று கவனமாக இருக்க வேண்டும்.
  • நீங்கள் கனவில் கருப்பு நிற நாயை (dog death kanavu palangal in tamil) கண்டால் உங்களுக்கு நெருக்கமான உறவு மூலம், நண்பர்கள் உங்களுக்க துரோகம் செய்யலாம்.
  • வெள்ளை நாயை கனவில் கண்டால் (Nai kanavil vanthal enna palan) உங்களை சுற்றியுள்ள அல்லது உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உண்மையாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

lizard kanavu palangal in tamil – பல்லியை கனவில் கண்டால் என்ன பலன்

  • கனவில் பல்லி (Palli Kanavil Vanthal Enna Palan) வருவது நல்ல சகுனமாக கருத மாட்டார்கள். உங்கள் கனவில் பல்லியை பார்த்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  • சுவற்றில் பல்லி இருப்பது போல கனவு வந்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு ஏற்பட கூடிய கெட்டதை குறிப்பதாகும். மற்றவர்கள் மூலம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
  • பல்லி மற்றொரு பல்லியை உண்பது போல கனவு கண்டால் பணவரவு உண்டு. ஆனால் அதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
  • பல்லி சுவரில் இருந்து கீழே விழுவது போல கனவு கண்டால் உங்களுக்கு ஏதேனும் விபத்து நடக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: Palli Vilum Palangal tamil: பல்லி நம் உடம்பில் எங்கு விழுந்தால் என்ன பலன்..!

Puli Kanavu Palangal in Tamil – புலி கனவில் வந்தால் என்ன பலன்

  • ஒருவர் கனவில் புலி (Kanavil puli vanthal enna palan) அவர்களை தாக்குவது போல கனவு கண்டால் அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அர்த்தம். அவர்களை சுற்றி பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது என்று கூறப்படுகிறது.
  • சாதரணமாக ஒருவர் அவர்களுடைய கனவில் புலியை பார்த்தால் அவர்கள் மிகவும் பயத்துடனே இருப்பார்கள். மற்றவர்களுடம் இவர்கள் கடுமையாக நடந்து கொள்வது, தேவையற்ற சிந்தனைகள் போன்றவை ஏற்படும்.
  • புலிக்குட்டிகளை கனவில் கண்டால் கனவு காண்பவர்களுடைய குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் மற்றும் திருமணமாகதவர்கள் பிறரிடம் கவனமாக இருக்க வேண்டும்.

Cow Kanavu Palangal in Tamilமாடு கனவில் வந்தால் என்ன பலன்

  • ஒருவர் அவருடைய கனவில் பசுவை கண்டால் (Kanavil Pasu Madu Vanthal Enna Palan) அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை குறிப்பதாகும். பசுவை காண்பது நல்ல சகுணமாக பார்கப்படுகிறது.
  • ஒருவர் கனவில் சிவப்பு நிற பசுவை கனவில் கண்டால் அவருக்கு சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
  • மஞ்சள் நிற பசுவை கனவில கண்டால் அவருக்கு நல்ல அவருக்கு எதிர்காலத்தில் நல்ல அதிர்ஷ்டம், செல்வம், மற்றும் ஆன்மீக தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பார்கள்.
  • கருப்பு நிற பசுவை கனவில் கண்டால் கனவு கண்டவரை சுற்றியுள்ளவர்களால் இடையூர்கள் நடக்க இருப்பதை குறிக்கிறது.
  • வெள்ளை பசுவை கனவில் கண்டால் அவருக்கு வாழ்வில் நடக்க இருக்கும் நல்ல செய்திகளை குறிப்பதாகும்.
  • பசு மாடு துரத்துவது போல அல்லது முட்டுவது போல கனவு கண்டால் உங்களுக்கு பிடிக்காதவர்களால் உங்களுக்கு துன்பம் ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.
  • பசு மாடு கன்றுடன் இருப்பது போல கனவு கண்டால் கனவு கண்டவர்களுக்கு நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த காரியங்கள் நிறைவேறும்.

Kaalaimaadu Kanavil Vanthal – காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன்

  • காளை மாடு கனவில் துரத்துவது போல கனவு கண்டால் (Kalai Madu Kanavil Vanthal Enna Palan Tamil) உங்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படபோவதை உணர்த்துகிறது.
  • காளை மாடு முட்டுவது போல கனவு கண்டால் உங்களுக்கு மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • கருப்பு காலை மாடு கனவில் வந்தால் நல்லதல்ல. அவர்களுக்கு வரபோகும் துன்பத்ததை குறிக்கிறது.
  • வெள்ளை காளை மாடு கனவில் வந்தால் அவர்களுக்கு வாழ்கையில் மகிழ்ச்சியான செய்தி வரும்.

Horse Kanavu Palangal in Tamil – குதிரை கனவில் வந்தால் என்ன பலன்

  • உங்கள் கனவில் குதிரையை கனவில் கண்டால் (kuthirai kanavil vanthal enna palan) உங்களுக்கு வரபோகும் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. புதிய தொழில் தொடங்க நல்ல நேரம் இது.
  • குதிரை கனவில் ஓடுவது போல கனவு கண்டால் உங்களுக்கு தற்போது உள்ள பிரச்சனைகள் நீங்கி நீங்கள் வெற்றி காண்பீர்கள்.
  • குதிரையில் சவாரி செய்வது போல கனவு கண்டார் பெயர், புகழ் கிடைக்கும் என்று அர்த்தம்.
  • குதிரை உங்களை உதைப்பது போல கனவு கண்டால் பணியிடத்தில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட போவதை குறிக்கிறது.
  • குதிரை உங்களை கடிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு பணி உயர்வு கிடைக்க போகிறது.

Buffalo Kanavu Palangal in Tamil – எருமை மாடு கனவில் வந்தால் என்ன பலன்

  • எருமை மாடு (madu kanavu vanthal palangal) கனவில் வந்தால் அவ்வளவு நல்லதல்ல. எனவே நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
  • எருமை மாடு நிற்பது போல கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • எருமை மாடு கூட்டமாக (Erumai Kanavil Vanthal Palan) பார்த்தால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

Water Kanavu Palangal in Tamil – தண்ணீரை கனவில் கண்டால் என்ன பலன்

  • ஒருவர் கனவில் தண்ணீர் (Thannirai Kanavil Kandal Palan Enna Palan) சம்பந்தமாக கனவு வருவது அவர்களுடைய ஆழ்மனதின் வெளிபாடாக உள்ளது.
  • கனவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல கனவு கண்டால் அவர்கள் வாழ்வில் பதற்றமான நிலை ஏற்பட போவதை குறிக்கிறது. கவனமாக இருக்க வேண்டும் என்பதாகும்.
  • அதுவே சீராக தண்ணீர் செல்வது போல கனவு கண்டால் அவர்களுக்கு நல்ல சாதகமான சூழ்நிலை ஏற்படும்.
  • கனவில் கடல் அலைகளை கண்டால் உங்களுடைய ஆழ்மனதில் உள்ள சிந்தனைகளின் வெளிபாடாகும். இது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு பதற்றமான நிலையை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இது உள்ளது.

Kinaru Kanavu Palangal in Tamil – கிணறு கனவு பலன்கள்

  • கிணறு நிரம்பி வழிவது போல கனவு கண்டால் (Kinari kanavil kandal enna palan) நம் வாழ்க்கையில் பொருளாதார நிலை உயரும் என்று அர்த்தம்.
  • கிணறு கனவில் வந்தால் விரைவில் திருமணம் நடக்க போவதை உணர்த்துவதாக அர்தத்தம்.
  • கிணறில் நீர் எடுப்பது போல கனவு கண்டால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் விரைவில் நடக்கும்.
  • கிணற்றில் யாரோ உங்களை தள்ளிவிடுவது போல கனவு கண்டால் உங்களுக்கு வரபோகும் கஷ்டங்களை குறிப்பதாகும்.

Pagal Kanavu Palangal in Tamil – பகல் கனவு பலன்கள்

  • நாம் பொதுவாக காணக்கூடிய கனவு நம்முடைய ஆழ்மனத்தின் வெளிபாடாகும்.
  • நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி கனவு பலன்கள் குறிப்பிடப்பட்டடுள்ளது. இதில் பகல் பொழுதில் காணும் கனவுகளுக்கும், படுத்த உடனே காணும் கனவுகளுக்கும் பலன்கள் இல்லை என்றே கூறவேண்டும்.
  • பகலில் காணும் கனவுகள் நம் மனதின் நிறைவேறாத என்ணங்களின் வெளிபாடாகும். எனவே பகல் கனவுகள் பலிப்பதில்லை.

Kanavu Nera Palangal – எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும்

நேரம்பலிக்கும் காலம்
மாலை 6 மணி முதல் 8.24 மணிக்குள்1 வருடம்
இரவு 8.24 முதல் 10.48 மணிக்குள் 3 மாதத்திலும்
இரவு 10.48 முதல் 1.12 மணிக்குள்1 மாதத்திலும்
இரவு 1.12 முதல் 3.36 மணிக்குள்10 நாட்களிலும்
விடியற்காலை 3.36 முதல் 6.00 மணிக்குள் வெகுவிரைவில் நடைபெறும்
மேலும் படிக்க: Navratna Stones in Tamil: நவரத்தின மோதிரம் அணிந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்..!

Kanavu Palan – FAQ

1. சிவன் கனவில் வந்தால் என்ன நடக்கும்? Sivan kanavil vanthal enna palan?

கனவில் சிவலிங்கத்தை காண்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. இந்த கனவு எதிர்காலத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரப்போகிறது என்பது என்பது பொருள்.

2. விலங்குகள் கனவில் வந்தால் என்ன நடக்கும்? Vilangu kanavil vanthal enna palan?

பொதுவாக விலங்குகள் கனவில் வருவது உங்களுக்கு வரப் போகும் ஆபத்துக்கள், பிரச்சனைகள் குறித்து எச்சரிப்பதற்காக என சொல்லப்படுகிறது.

3. எந்த கனவு பலிக்கும்? Entha Kanavu Palaikkum?

பகல் கனவு பலிக்காது அதே நேரத்தில் அதிகாலையில் காணும் கனவு நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago