Kitchen Tips: நம் வீட்டிற்கு அடிக்கடி விருந்தினர்கள் வருவார்களோ இல்லையோ, ஆனால் எப்போதும் அழையா விருந்தாளியாக இருப்பது யார் என்று பார்த்தால் அது நம் வீட்டில் இருக்கும் எறும்பு, பல்லி, கராப்பான் பூச்சி தான். அதுவும் இவைகள் நம் வீட்டில் முக்கியமாக வசிக்கும் ஒரு இடம் என்றால், அது நம் ஆரோக்கியத்தை நிர்ணையிக்கும் சமையல் அறையில் தான். நம் சமையல் அறையில் நாம் அதிகம் இருப்பதை விட இவைகள் தான் அதிகம் இருக்கும்.
இவைகள் நாம் சமைக்கும் உணவின் மீது உட்கார்ந்து பல நோய்களை உண்டு செய்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த நாம் பூச்சி மருந்துகளை வாங்கி வீடு முழுக்க தெளிப்போம். ஆனால் அவற்றை நாம் சமையல் அறையிலும் பயன்படுத்த முடியாது. அதனை விரட்டுவதற்கு நாம் என்னவெல்லாமோ செய்வோம். ஆனால் அதனை விரட்ட முடியாது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர்.
நமது வலைதளத்தில் (Unique Kitchen Tips) சமையல் அறையில் உள்ள பூச்சிகளை விரட்ட எளிமையான சில சமையலறை டிப்ஸ் (Kitchen Tips in Tamil) பற்றி காண்போம்.
முதலில் நாம் பார்க்க இருப்பது எறும்பு. இந்த எறும்பில் (Erumbu Varamal Iruka Tips) சிற்றெறும்புகள், சாமி எறும்புகள் என்று அழைக்கப்படுகிறது. சுறுசுறுப்பான உயிரினம் எது என்று பார்த்தால் அது எறும்பு தான். சில சமயங்களில் நம் தாத்தா, பாட்டி கூறுவார்கள் எறும்பை போல சுறுசுறுப்பாக இரு என்று. அதற்கு காரணம் எறும்பு ஓய்வெடுப்பது கிடையாது. அதற்கு ஏற்றார் போல் நம் வீட்டில் இவைகள் ராஜ்யம் சொல்லவா வேண்டும். எறும்பு பொதுவாக ஈரப்பதமான இடங்களில் அதிகம் இருக்கும். அந்த வகையில் இது சமையலறையில் இல்லையென்றால் தான் ஆச்சரியம். ஈரப்பதம் மட்டும் இல்லை இனிப்பு பொருட்கள் வைத்திருக்கும் இடத்தில் இவைகள் அதிகம் இருக்கும்.
இந்த உலகில் மொத்தம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எறும்பினங்கள் உள்ளன. நம் வீட்டில் அடிக்கடி பார்க்க கூடிய எறும்புகள் இந்த சிற்றெறும்புகள் மற்றும் கருப்பு எறும்புகள் தான். சிற்றெறும்புகள் கடித்தால் அது வலிக்கும். ஆனால் கருப்பு எறும்புகள் கடிக்காது. ஆனால் இது எல்லா பொருட்களிலும் இருக்கும். தற்போது எறும்பை விரட்ட என்ன வழி என்று பார்க்கலாம்.
எறும்பு விரட்டிகளுக்கு சிறந்த தீர்வு இந்த சாக். சாக்கில் கால்சியம் கார்பனேட் இருப்பதால் எறும்புகளுக்கு இது மயக்க நிலையை உண்டாக்கும். இந்த சாக்கை வாங்கி சுவற்றில் அல்லது எறும்பு தொல்லை எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு இதனை தூளாக்கி போடுங்கள். சமையல் அறையில் தூளாக போடாமல் கோடு கிழித்தால் அதை தாண்டி எறும்புகள் வராது.
இந்த சாக்கை கொண்டு கோடு போட்டால் வீட்டில் குழந்தைகள் அதில் கை வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் உள்ள வீட்டில் இதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும். பெரும்பாலும் சுவரில் இருக்கும் எறும்புகளுக்கு இது ஏற்றது.
நம் வீட்டில் அதிகமாக வெல்லம், சர்க்கரை,போன்ற இனிப்பு பொருட்கள் இருக்கும். இனிப்பு என்றாலே எறும்புகள் பெரும்பாலும் வரும். அதில் சிறிதளவு கிராம்பு அல்லது பட்டை போட்டு வைத்தால் அந்த வாசனைக்கு எறும்புகள் வராது. இது போன்று எறும்புகள் அதிகம் உள்ள பொருட்களில் கிராம்பு மற்றும் பட்டையை போட்டு வைக்கலாம். பட்டை, கிராம்பு வாசனை எறும்புகளுக்கு ஏற்றுக்கொள்ளாது. எனவே இதனை தூளாக்கி எறும்பு வரும் இடத்தில் போட்டு வைக்கலாம்.
எறும்பு வராமல் தடுக்க எலுமிச்சை சாறை பிழிந்து அதை எறும்பு வரும் இடத்தில் தெளித்தால் எறும்புகள் வராது. இனிப்பு சுவை எவ்வளவு எறும்புகளுக்கு பிடிக்குமோ, அதைவிட எலுமிச்சையில் உள்ள புளிப்பு சுவை மற்றும் அதன் வாசனை எறும்புகள் வருவதை தடுக்கிறது. எனவே எறும்புகள் உள்ள இடத்தில் எலுமிச்சையை இரண்டாக அறுத்து அப்படியே வைக்கலாம் அல்லது அதனை பிழிந்து எறும்பு உள்ள இடத்தில் தெளிக்கலாம்.
ஆரஞ்சு தோலை நன்று காய வைத்து அதனை பொடியாக்கி எறும்பு வரும் இடத்தில் போட்டால் எறும்பு தொல்லைகள் நீங்கும். அல்லது அதனை சிறிது தண்ணீர் கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தெளித்தால் எறும்புகள் வராது.
புதினா இயற்கையாகவே நல்ல நறுமணம் தரக்கூடிய ஒன்று. புதினா வாசனைக்கு எறும்புகள் வராது. இந்த புதினாவை அரைத்து அதனை நீரில் கலந்து கரைசல் போல் செய்து ஸ்பிரே பாட்டில் ஊற்றி அதனை எறும்புகள் இருக்கும் இடத்தில் தெளித்தால் புதினா வாசனைக்கு எறும்புகள் வராது.
வீட்டில் எறும்புகளுக்கு அடுத்தப்படியாக இருப்பது இந்த கரப்பான் பூச்சி தான். இவைகள் பெரும்பாலும் நோய்களை பரப்புகின்றன. நாம் சமைக்கும் சாப்பாட்டில் உட்கார்ந்து பாக்டீரியாக்களை உருவாக்குகின்றன. கரப்பான் பூச்சிகள் (Karappan poochi varamal iruka tips) வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உள்ள இடங்களில் இருக்கும். முக்கியமாக மரப்பொருட்கள் உள்ள இடத்தில் அதிகம் இருக்கும்.
அதிலும் குறிப்பாக சமையல் அறையில் குப்பை தொட்டியில், பாத்திரம் கழுவும் தொட்டியில் இது அதிகமாக இருக்கும். இதனை விரட்ட வழிகளை தற்போது காணலாம்.
கரப்பான்பூச்சியை விரட்டுவதற்கு மிகவும் உபயோகமாக இருப்பது இந்த பேக்கிங் சோடா. கரப்பான்பூச்சியை விரட்டுவதற்கு சிறிதளவு பேக்கிங் சோடாவை கரப்பான் பூச்சி உள்ள இடத்தில் போட்டால் போதும் இதன் தொல்லை ஒழிந்துவிடும்.
மேலும் படிக்க: சமையல் உப்பு ஈரப்பதம் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? Tips for Keeping Salt Dry in Tamil..! |
சிறிதளவு வெந்நீரில் எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை கலந்து சமையல் முடிந்ததும். கிச்சன் அடுப்பை சுத்தம் செய்தால் போதும். நன்கு துடைத்த பின்பு, மீதி உள்ள கரைசலை பாத்திரம கழுவும் சிங்-யில் ஊற்றிவிட்டால் அதில் ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சி ஓடிவிடும்.
வேப்பிலை மிகச்சிறந்த கிருமிநாசினி என்று நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். கரப்பான் பூச்சி வருவதை இது தடுக்கிறது. வேப்பிலை கொத்தை சமையல் அறையில் உள்ள ஜன்னல் போன்ற இடங்களில் வைக்கலாம். இது கரப்பான் பூச்சி வெளியில் இருந்து வருவதை தடுக்கும். வேப்ப எண்ணெய்யை தெளிப்பது மிகவும் சிறந்த ஒன்று. அது உடனடிய தீர்வை கொடுக்கும். இந்த வேப்ப எண்ணை வாசனைக்கு கரப்பான் பூச்சி வராது. வேப்ப எண்ணைய்யை சிறிதளவு வெந்நீர் கலந்து தெளிக்கலாம்.
பொதுவாக இந்த இலவங்க பட்டை வாசனைக்கு எந்த பூச்சிகளும் வராது. இதனால் இதனை சமையலறையில் ஆங்காங்கே வைத்தால் கரப்பான் பூச்சிகள் வராது. இதனை பொடி செய்து சிறிது வெந்நீரில் கலந்த ஸ்பிரே பாட்டிலில் போட்டு வைத்து தெளித்தால் கரப்பான் பூச்சி வராது.
பெரும்பாலும் நம் வீட்டில் நம் படுக்கறையில் தான் அதிகம் இருக்கும். சில சமையங்களில் சமையலறையில் இதன் தொல்லை தாங்காது. பார்க்கும் இடங்கள் எல்லாம் இது ஓடிக்கொண்டு இருக்கும். இது கடித்தால் உடலில் அரிப்பை ஏற்படுத்தும். அதிகமாக வெப்பநிலையை இதனால் தாங்கிக்கொள்ள முடியாது. தற்போது இதனை தடுக்க என்ன வழி என்று (mutta puchi varamal iruka tips) பார்க்கலாம்.
சிறிதளவு புதினாவை சமையலறையில் சிறிதளவு போட்டு வைத்தால் மூட்டை பூச்சி வருவது தடுக்கப்படுகிறது. குழந்தைகள் தூங்கும் இடத்தில் சிறிதளவு புதினா இலைகளை போட்டு வைத்தால் குழந்தைகளை மூட்டை பூச்சியில் இருந்து பாதுகாக்கலாம்.
பெரும்பாலும் இவைகளுக்கு அதிக நறுமண உள்ள பொருட்கள் பிடிக்காது. இதனால் காலியான செண்ட் பாட்டில், சோப்பு கவர்களை வைத்துவிட்டால் இந்த பூச்சிகள் வருவது தடுக்கப்படுகிறது. அதுபோல நமது வீட்டில் எங்கேயாவது துளைகள் இருந்தால் அதனை அடைத்துவிட வேண்டும்.
எலி பார்பதற்கு சிறியதாக இருந்தாலும், மிகவும் புத்திசாலிதனமான விலங்காகும். தற்போது எந்த எலி மருந்து வைத்தாலும் அதனை சாப்பிடாமல் தப்பித்து (Eli varamal iruka tips) ஓடிவிடுகிறது. வீட்டில் இது இருந்தால் இதன் தொல்லை தாங்க முடியாது. காரணம் எல்லா பொருட்களையும் கடித்து சேதப்படுத்தி விடும்.
குறிப்பாக வீட்டில் சமையல் அறையில் இருக்கும் பொருட்களில் இது வாய் வைத்துவிட்டால் அதனை தெரியாமல் நாம் உண்டுவிட்டால், மயக்கம், வாந்தி போன்றவை ஏற்படும். மனிதர்களுக்கு பெரும்பாலான நோய்கள் வரக் காரணமே இந்த எலிகள் தான் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். எலிகளுனால் மனிதர்களுக்கு பிளேக் போன்ற நோய்கள் ஏற்பட்டு இறப்பு கூட ஏற்படலாம் என தெரிவிக்கிறார்கள்.
புதினா இலைகளை நன்றாக அரைத்து அதனை வெந்நீரில் கலந்து எலி வரும் பாதையில் தெளித்து வந்தால் அந்த நறுமணத்திற்கு எலி வராது.
எலி வரும் இடத்தில் பூண்டு பற்களை நசுக்கி போட்டு வைத்தால், பூண்டு வாசனைக்கு எலிகள் எளிதில் வருவதில்லை. எலி பொந்தில் ஒரு துணியில் கிராம்பு எண்ணெய்யை நனைத்து வைத்துவிட்டால் அந்த நறுமணத்திற்கு எலிகள் வராது.
பொதுவாக ஜன்னல், எலிகள் நுழையும் அளவிற்கு உள்ள துளைகளை அடைத்துவிட்டால் எலிகள் மற்றும் கொசுகள் வருவது தடுக்கப்படும். வீட்டிற்கு வெளியே புதினா செடிகளை வளர்த்து வைத்தால் அதிக அளவு எலிகள் வருவது தடுக்கப்படும்.
பல்லிகள் பொதுவாக நம் மீது விழுகிறதோ இல்லையோ, நம் சமைத்து வைத்திருக்கும் பண்டங்களில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தும். இது அதிகமாக சுவரி தான் (Palli varamal iruka tips in tamil) இருக்கும். அதுபோக சமையலறையில் இருந்து சமைத்து வைத்து உள்ள பொருட்களை சுவைப்பார்பதற்கே பெரும்பாலும் வரும். அப்படி அது சமைத்து வைத்து உள்ள பொருட்களை எச்சில் செய்யும் போது நமக்கு பலவித நோய்கள் ஏற்படும்.
பல்லிகள் வரும் இடங்களில் முட்டை ஓட்டை வைத்தால் பல்லிகள் ஓடிவிடும். முட்டை வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது. இதனால் முட்டை ஓட்டை வைத்தால் பல்லிகள் ஓடிவிடும்.
பூண்டு வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது. அதனால் பல்லி வரும் இடங்களில் பூண்டை நசுக்கி வைத்தால் அந்த வாசனைக்கு பல்லிகள் வராது.
வீட்டில் மயிலிறகு வைத்தால் பல்லிகள் அதனை பார்த்து பயந்து ஓடிவிடும். அதனால் பல்லி வரும் இடங்களில் மயிலிறகு வைத்தால் பல்லிகள் வராது.
ஈ இல்லாத வீடுகளே இல்லை என்பதற்கு ஏற்றது போல ஈ தொல்லை (ee varamal iruka tips in tamil) தாங்க முடியாது. இது பெரும்பாலும் சமையலறையில் தான் இருக்கும். சமைக்கும் பொருட்கள் மீது உட்கார்ந்து பலவித நோய்களை உண்டாக்கும்.
ஈக்கள் இருக்க கூடிய இடத்தில் இந்த துளசியை வைத்தால் ஈக்கள் வராது. ஈக்கள் துளசியில் அமராது. துளசியை பொடி செய்து அதனை வெந்நீரில் போட்டு ஈக்கள் மீது தெளிக்க மீண்டும் வராது.
இஞ்சி துண்டை நசுக்கி அதன் சாறை ஈக்கள் அதிகம் காணப்படும் இடங்களில் தெளித்தால் ஈக்கள் தொல்லையை குறைக்கலாம்.
பொதுவாக நம் வீட்டில் வைத்திற்கும் அரிசி, கோதுமை, தானியங்களில் வண்டுகள் அதிகஅளவு இருக்கும். இவ்வாறு அதில் இருக்கும் வண்டுகளை நீக்கி விட்டு அந்த பொருட்களை பயன்படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். இதற்கு (Vandu varamal iruka tips in tamil) தானியங்களில் இரண்டு வரமிளகாய், இரண்டு கொத்து வேப்பிலை போட்டு வைத்தால் வண்டுகள் வராமல் தடுக்கலாம்.
உங்களிடம் முதலிலி இருக்க வேண்டியது தூய்மைதான். தூய்மையானது சமையலறை மற்றும் உணவுப் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது. மேலும் இனிமையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது. நீங்கள் சமையலை முடிக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் சமையலறை கருவிகளை சுத்தம் செய்து சுத்தப்படுத்துவதன் மூலம் இந்த திறன்களை நீங்கள் வெளிப்படுத்தலாம்.
அழுக்கு பாத்திரங்களை உடனடியாக சுத்தம் செய்யவும், சமையல் அறையை நேர்த்தியாக வைத்திருக்க வேண்டும். சமையல் பணியில் கவனம் செலுத்துங்கள். ஒரு அட்டவணையை பராமரிக்கவும்.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…