நாம் அனைவரும் காலை வேலைகளில் இட்லி, தோசை போன்ற உணவுகளை தான் அதிகம் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்றும் அந்த உணவு ஆரோக்கியமானதகாவும் இருக்க வேண்டும் என்பதுதான் நம்மில் பலருடைய எண்ணமாக உள்ளது. ஆனால் அது போன்ற உணவுகள் செய்தால் நேரம் அதிகம் ஆகும் சில நேரங்களில் அதன் சுவை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிடிக்காது என இதுபோன்ற பல காரணங்களால் நாம் பல உணவுகளை சமைக்காமலே இருந்து இருப்போம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு தான் பொங்கல். இதனை நாம் நம் வீடுகளில் பச்சரிசியில் செய்து இருப்போம். இது அம்மாக்களுக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த பொங்கல் சமைப்பதற்கும் மிக எளிதாக இருக்கும். நாம் இதுவரை சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், பாசிப்பருப்பு பொங்கல் என்று பலவகையான பொங்கல் வகைகளை சாப்பிட்டு இருப்போம். அந்த வரிசையில் தான் தற்போது ஒரு ஆரோக்கியமான குதிரைவாலி பொங்கல் எளிமையாக செய்வது எப்படி என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
நாம் இப்பதிவில் உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி பொங்கல் செய்வது எப்படி (Kuthiraivali Pongal Seivathu Eppadi) என்பது பற்றி பார்த்துள்ளோம்.
ஆரோக்கியமான குதிரைவாலி பொங்கல் எளிமையாக செய்வது எப்படி என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
Type: Appetizer
Cuisine: Tamil Nadu
Keywords: Kuthiraivali Pongal Recipe, Kuthiraivali Pongal
Recipe Yield: 4
Preparation Time: PT10M
Cooking Time: PT30M
Total Time: PT40M
Recipe Ingredients:
Recipe Instructions: முதலில் அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்துக் கொள்ளவும். அந்த கடாய் சூடான பிறகு அதில் நெய்யை சேர்க்க வேண்டும். இப்போது அதில் சீரகம், மிளகு, முந்திரி, நறுக்கிய இஞ்சி துண்டுகள் மற்றும் சிறிதளவு கருவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இப்போது நாம் எந்த கப்பில் குதிரைவாலி அரிசியை எடுத்துள்ளோமாே அதே கப்பில் கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்துக்கொண்டு எடுத்து கொண்டு அதனை கடாயில் ஊற்ற வேண்டும். பின்னர் இதனை நன்கு கொதிக்க விட வேண்டும். இப்போது இந்த கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு குதிரைவாலி அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் கழுவி கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவேண்டும். ஒரு கப் அரிசிக்கு மூன்று பங்கு தண்ணீர் ஊற்றினால் தான் பொங்கல் குளைவாக இருக்கும். அப்போது தான் சுவையும் அதிகமாக இருக்கும். குளைவாக உண்பதற்கு பிடிக்காரவர்கள் மூன்று கப் தண்ணீருக்கு பதிலாக இரண்டு கப் தண்ணீர் ஊற்றினால் போதுமானது. இப்போது இதை 15 அல்லது 20 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்கவும். இப்போது இந்த குதிரைவாலி அரிசி வெந்த பின் நன்கு கிளறி விட வேண்டும். அடிப்பிடிக்காத அளவுக்கு கிளரிக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும். இப்போது ருசியான குதிரைவாலி பொங்கல் தயார். இந்த குதிரைவாலி பொங்கல் சாப்பிடும்போது சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிடவது இதன் சுவையை இன்னும் அதிகப்படுத்தும்.
இதையும் படியுங்கள்: Ulunthankali Recipe: ஊட்டம் தரும் உளுந்தங்களி… ஈசியாக செய்வது எப்படி? |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…