இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் இன்று (19.02.2024) நடைபெற்றது. இதற்காக சட்டப்பேரவை கூட்டமானது காலை 10 மணிக்கு கூடியது. மேலும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கான (Tamil Nadu Budget 2024 Schemes) நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. பல திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் 1,100 கோடியில் முக்கிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
இன்று சட்டசபையில் 2024- 2025-ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மேலும் இந்த பட்ஜெட்டுக்கான லோகோவை தமிழக அரசானது நேற்று வெளியிட்டது. இந்த பட்ஜெட்டில் கோவைக்கு பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் (Tamil Nadu Budget 2024) முடிவில் கோவையில் ஐ.டி பூங்கா மற்றும் கலைஞர் பெயரில் பிரம்மாண்ட நூலகம் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப பூங்கா கோவையில் (Tech Park in Coimbatore) கட்டப்படவுள்ளது. மேலும் இது மொத்தம் 20 லட்சம் சதுர அடியில் கட்டப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசில் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது பட்ஜெட் ரூ.1,100 கோடி ஆகும். மேலும் கோவையில் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் உள்ளது. அதேபோல் தற்போது கோவையிலும் கட்டப்டவுள்ளது.
இந்த தொழில்நுட்ப பூங்காவின் (Tech Park) தேவை மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அவர் தொடர்ந்து பேசினார். இது குறித்து அவர் பேசுகையில் வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்கும் துறை என்றால் அது தகவல் தொழில்நுட்பத் துறைகள் தான்த என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், நாம் உற்பத்தித் துறையில் முதலீடு செய்தாலும், நிலம் ஒதுக்கவும், கட்டிடம் கட்டவும் குறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும் என்று கூறினார். அதுமட்டுமின்றி ஐடி துறையில் கட்டிடம் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் உடனே வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உருவாகும் என்றும் அவர் கூறினார். இந்த காரணங்களால் தான் இந்த துறைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம்.. பட்ஜெட்டில் அறிவித்த நிதியமைச்சர்… |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…