பிரபலமான நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்களில் ஜோடியை பிடிக்காத மக்களே இருக்க முடியாது என்று தான் கூறவேண்டும். மேலும் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர்களை சமூக வளைதளங்களில் இவர்களது ஒவ்வொரு அசைவும் வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற ஒரு நிகழ்வு (Nayanthara unfollowed Vignesh Shivan) தான் தற்போது நடந்துள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா (Nayanthara) கடந்த 2022-ம் ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை (Vignesh Shivan) திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் என்னும் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் திரைத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்கள் வாடகை தாய் மூலம் திருமணமான நான்கு மாதத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர். இதுவும் அப்போது மிகப்பெரிய சர்ச்சை ஆக்கியது.
சமீபத்தில் முடிந்த காதலர் தினத்தன்று கூட இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் 10 years of 9 என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தான் தற்போது நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளதாக செய்தி பரவி வருகிறது. அதில் நடிகை நயன்தாரா கண்களில் கண்ணீருடன் கூட எனக்கு இது கிடைத்தது என்று எப்போதும் அவள் சொல்வாள் (She’s gonna forever say ‘I got this’ even with tears in her eyes) என்ற பதிவை பகிர்ந்து உள்ளார்.
நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோவ் செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம்..! அறிவிப்பு வெளியானது..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…