கல்வி என்பது குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. எனவே தான் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டங்களை தொடங்கி நடத்தி வருகிறது. எனினும் இன்றைய காலகட்டத்தில் உள்ள பெற்றோர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக குழந்தைகளை மிகவும் சிறய வயதிலேயே பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர்.
இவ்வாறு செய்வதால் பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டும் இன்னும் சில மாதங்களில் பள்ளிகளில் சேர்க்கை தொடங்கவுள்ளதாலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இந்த வருடம் 2023 முதல் 2024-ஆம் கல்வியாண்டு சில மாதங்களில் முடிவடைய உள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக மழலையர் பள்ளிகள் மற்றும் குழந்தைகளை புதிதாக பள்ளிகளில் சேர்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக வயது கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் தான் தற்போது தேசிய கல்விக் கொள்கையின் படி மத்திய பிரதேச மாநிலத்தில் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் வயது (Age of enrollment of students in school) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, குழந்தைகளை நர்சரியில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயது (Minimum Age for Admission to Nursery School) மூன்று வயதும் அதிகபட்ச வயது நான்கரை வயது வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் KG வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு குறைந்தபட்சமாக 4 வயது வரை இருக்க வேண்டும் என்றும் அதிகபட்சமாக ஐந்தரை வயது வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 1-ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயது 6 வயது இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழர்..! என்ன செய்தார்? |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…