தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை சூலூரில் 2 பிரிவுகளிலும் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் Annamalai மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அண்ணாமலை அவரின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்களை தேர்தல் தமிழகத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஊடுப்பட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் பல முக்கிய பிரமுக்கள் வேட்பாளர்களாக உள்ளனர். பாஜக -வின் தமிழக மாநில தலைவராகன அண்ணாமலை (Annamalai) கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் நேற்று கோவையில் ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதியை மீறி இரவு 10 மணிக்கு பிறகு பிரச்சாரம் செய்ததாக புகாரளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்றனர்.
அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகளிடம் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். மேலும் பாஜகவினருடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டார். இவ்வாறு போலீசாருடன் வாக்குவாதம் செய்ததற்கும், சாலை மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்காகவும் தேர்தல் அதிகாரி ஒருவர் சூலூர் காவல் நிலையத்தில் அண்ணாமலை மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சூலூர் காவல் நிலையத்தில் அண்ணாமலை மீதும் அவருடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட 300 -க்கும் மேற்பட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நேரமான 10 மணிக்கு மேல் நகர்பகுதிகளில் ஊர்வலமாகச் அண்ணாமலை சென்றார் என கூறப்பட்ட நிலையில், அவர் மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அனுமதி இன்றி ஒன்றுகூடுதல், முறையற்ற தடுப்பு, வெடிப் பொருட்களை தவறாக கையாளுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 சட்டப்பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அண்ணாமலை அவரின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். திமுக வேண்டுமென்றே போலீசார்களை அனுப்பி எங்களின் வண்டியை சில சாதாரண காரணங்களை கூறி வழிமறித்து. அனுமதி வாங்கிய பகுதிகளில் நாங்கள் வாகனங்களில் செல்லும் போது தேர்தல் விதிகளை மீறி 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என கூறி வண்டிகளை நிறுத்தினார்கள். ஆனால் நாங்கள் பிரச்சாரம் செய்யவில்லை.
அந்த வழியாக பாஜக நிர்வாகிகளை சந்திப்பதற்காகவே நாங்கள் சென்றாம். ஆனால் போலீசார் எங்களை வேறு பாதையில் போகும்படி கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் செய்வது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என நாங்கள் கூற் முயற்சித்தோம் என அண்ணாமலை அவரின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப் விநியோகம் 100 சதவீதம் நிறைவு.. சத்ய பிரதா சாகு பேட்டி..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…