Postal Vote: தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருபுறம் தேர்தல் பணிகள் மற்றொரு புறம் தேர்தல் பிரசாரம் என்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று (ஏப்ரல் 08) மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரமே வாக்குப்பதிவு (Chennai thabal vakku pathivu 2024) தொடங்கப்பட்ட நிலையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று தொடங்குகிறது தபால் வாக்குபதிவு.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தேர்தல் ஆணையத்தால் முடுக்கிவிடப்பட்ட நிலையில் வாக்குபதிவுக்கான இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களின் தலைநகரங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான படிவம் 12டி கடந்த மாதம் சென்னையில் வழங்கப்பட்டது. வாக்காளர்களின் பாகம் எண், வரிசை எண் போன்றவை சரிபார்க்கப்பட்டு தபால் வாக்கு சீட்டு தயார் செய்யப்பட்டது. இதன்படி சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 175 முதியவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 363 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக 4,538 பேர் வாக்கு (Lok Sabha Election 2024 postal vote in Tamil) செலுத்த உள்ளனர்.
இந்த வாக்கெடுப்பு வரும் 13-தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 65 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர், காவலர் ஒருவர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் உடன் இருப்பார்கள்.
இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் தபால் வாக்குப்பதிவு (postal vote in chennai) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தேர்தல் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் காவலர்கள் வாக்கு செலுத்த ஏதுவாக படிவம் 12 மற்றும் 12 A வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…