தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இன்று வரையில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான படம் தான் படையப்பா (Padayappa Movie). இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரஜினிகாந்த் நடித்தப்படங்களில் முக்கிய படமாகவும் இந்த படம் மாறியது.
இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தை விட பெரிய அளவில் பேசப்பட்ட கதாபாத்திரம் தான் நீலாம்பரி கதாபாத்திரம் (Neelambari Character). இந்த கதாபாத்திரத்தில் நடிகை நீலாம்பரி நடித்து இருந்தார். இவர் நடித்து இருந்தார் என்பதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருந்தார் என்று தான் கூறவேண்டும். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் இவருக்கு பொருந்திபோனது.
இந்நிலையில் தான் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் படி நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த இந்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் இல்லையாம். வேறொரு நடிகை தான் நடிக்கஇருந்தாராம் ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக அதன் பிறகு தான் ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டாராம்.
இந்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த கதாநாயகி நடிகை மீனா. அன்றைய காலகட்டத்தில் அதாவது 90களில் நடிகை மீனா ரஜினிகாந்துடன் இனைந்து பல படங்களில் நடித்தார். எனவே அவருடன் இணைந்து வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று அவருடைய தயார் கூறியதால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இவர் மறுத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த தகவல் நீலாம்பரி ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிலர் இந்த கதாபாத்திரத்திற்கு (Padayappa Movie Neelambari Character) ரம்யா கிருஷ்ணன் மட்டும் தான் பொருந்துவார் என்று கூறுகின்றனர் மற்றும் சிலர் மீனா இந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக இருந்திருப்பார் என்று கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: கில்லி படத்தில் விஜய்க்கு பதிலாக நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா? |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…