மக்களவை தேர்தலில் நடிகர் விஷால் சைக்கிளில் சென்று வாக்களித்தது தொடர்பாக ரத்னம் படத்தின் புரொமோஷன் நிகழ்வில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள படம் தான் (Rathnam movie) ரத்னம். இந்த படத்தின் புரோமோன் நிகழ்வு சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் விஷாலிடம், ஒரு மாணவர் நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு செலுத்த சைக்கிளில் சென்றதற்கான காரணம் நடிகர் விஜய்யா? அவர் தான் உங்களின் இன்ஸ்பிரேஷன் தான் காரணமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த நடிகர் விஷால், விஜய்யை பொறுத்தவரை அவரின் தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும். ஆனால் வாக்களிக்க சைக்கிளில் சென்றதற்கு நடிகர் விஜய் காரணம் இல்லை என தெரிவித்தார்.
என்னிடம் வண்டியில்லை, அப்பா, அம்மாவிடம் தான் வண்டி உள்ளது. நான் என்னுடைய வண்டியை விற்றுவிட்டேன் என கூறினார். அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு இருக்கும் ரோடு கன்டிஷனைக் பார்த்தால் சஸ்பென்ஷனை ஆண்டுக்கு 3 முறையெல்லாம் மாற்ற என்னிடம் காசில்லை. அதனால் தான் நான் சைக்கிளில் வந்தேன் என தெரிவித்தார். சைக்கிளில் சென்றால் டிராபிக் இல்லாமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என்று சென்றேன் என கூறினார்.
அரசியல் வருகை குறித்து கேட்ட செய்தியாளரின் (Vishal political speech in Ratnam movie promotion) கேள்விக்கு, ஒருமுறை தான் சொல்ல முடியும். ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. நான் அரசியலுக்கு வருவது உறுதி. கண்டியாக வருவேன். 2026-ல் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். ஆனால் அரசியலுக்கு என்னை வரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறினார்.
மக்களுக்கு நீங்கள் நல்லது செய்தால் நாங்கள் ஏன் நடிக்கும் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு (Rathnam movie Update) வரபோகிறோம். நீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டியது உங்கள் கடமை எனக் கூறினார். மக்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஆனால் அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏ என்றால் மட்டும் தனியார் மருத்துவமனைக்கு செல்வது நியாயமா என கூறினார்.
நிறைய பிரச்சனைகள் இங்கு உண்டு. மாற்றம் நிச்சயம் தேவைப்படுகிறது. நடிகர் சங்கத்தின் கட்டிடப்பணிகள் தொடங்கிவிட்டன. இந்த ஆண்டு இறுதியில் (Vishal political speech in Ratnam movie promotion) முடிவடைந்துவிடும் என்று கூறினார் விஷால்.
மேலும் படிக்க: பயில்வானை மறைமுகமாக சண்டைக்கு அழைத்த சண்டைக் கோழி நாயகன்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…