இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்த சீசனின் முதல் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு ஆண்டின் சாம்பியன் அணியான சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளன. ரசிகர் மத்தியில் இந்த போட்டி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் நேற்று சென்னை அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டார். இதன் படி சென்னை அணியின் புதிய கேப்டனாக (CSK Team Captain This Season) ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவு மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை அணியின் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்தது. இது தோனி ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியது.
ஆனால் சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் சுழற்பந்து விச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் ருதுராஜ் கெய்க்வாட்க்கு சிஎஸ்கே கேப்டன் பதவி (CSK Team Captain Ruturaj Gaikwad) கொடுக்கப்பட்டுள்ளது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ருத்ராஜை சிஎஸ்கே அணியின் கேப்டனாக அறிவித்துள்ளது, தவிர்க்க முடியாத ஒரு முடிவாகும். மேலும் அனைத்து அணிகளிலும் ஒரு கட்டத்தில் புதிய கேப்டனை கொண்டுவர வேண்டியிருந்தது. எம்எஸ் தோனியை எனக்கு நன்றாக தெரியும். இதனால் புதிய கேப்டன் பொறுப்பு குறித்து ருதுராஜிடம் ஓராண்டுக்கு முன்பே தோனி தெரிவித்திருப்பார் என்று நம்புகிறேன். அணியை முன்னணியில் வைத்திருப்பது தான் தோனியின் வழக்கம்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் அணியின் நலனைப் பற்றி அவர் தொடர்ந்து சிந்திப்பார். அதன் காரணமாக தான் 2 ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் (Chennai Super Kings Team Captain) பொறுப்பை ஜடேஜாவிடம் கொடுத்து இருந்தார். ஆனால் அந்த முடிவு சரியாக அமையவில்லை. இந்நிலையில் தான் தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு சென்னையின் அணியின் கேப்டன் பொறுப்பு கொடுப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்பே ருதுராஜிடம் தோனி பேசியிருப்பார் என்று நான் நினைக்கிறன். ஏனென்றால், ஒரு முடிவு எடுக்க உள்ளார் ஏன்றால் ஒரு வருடத்துக்கு முன்பாகவே தோனி திட்டமிட்டு அதனை செயல்படுத்துவார் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: IPL 2024: மேட்ச் பார்க்க செல்பவர்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…