இந்திய கிரிக்கெட் வீரர்களில் முக்கிய வீரராகவும், அணியின் கேப்டனாகவும் இருப்பவர் தான் ரோகித் சர்மா. இவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். மேலும் ஒரு கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இவர் பல வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் பல சாதனைகளை (Rohit Sharma Record) படைத்துள்ளார். அதேபோல ஒரு சாதனையை (Rohit Sharma New Record) தான் தற்போது நிகழ்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். இதன் மூலம் இதுவரை உலகில் ஐந்து கேப்டன்கள் மட்டுமே செய்த சாதனையை தற்போது ஆறாவது கேப்டனாக செய்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதல் நன்றாக விளையாடிய அணி அதன் பிறகு சரிவை கண்டது. இறுதியில் 218 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி ஆட்டம் இழந்தது. அதன் பிறகு பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தினர்.
இதன் மூலம் இப்போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக இவர்கள் இருவரும் சேர்ந்து 100 ரன்களுக்கும் மேல் அடித்தனர். பின்னர் ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்த பிறகு ஆட்டமிழந்தார். ஆனால் ரோஹித் சர்மா முதல் நாளின் முடிவு வரை ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்து இருந்தார்.
இதன் மூலம் இவர் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 1000 ரன்கள் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை கடந்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஒருநாள் போட்டி, டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக 1000 ரன்களை கடந்த ஆறாவது வீரர் என்ற பெருமையை (Rohit Sharma World Record) பெற்றார். மேலும், 1000 ரன்களை கடந்த இந்திய டெஸ்ட் கேப்டன்கள் என்ற வரிசையில் தற்போது ரோகித் சர்மா 10-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 1000 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியல்
இதையும் படியுங்கள்: மகா சிவராத்திரி: இரவு கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…