சினிமாவை பொறுத்தவரையில் நடிகைகள் திருமணத்திற்கு பின்னர் நடிப்பது இல்லை. அதேபோல தான் சில வருடங்களுக்கு முன்பு வரை பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் (Actress Sridevi Vijayakumar). இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். இவர் சிறுவயது முதலே பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் திருமணத்திற்கு பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து தற்போது அதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி கதாநாயகியாக நடிக்க தொடங்கிய காலத்தில் அவருக்கு அதிக அளவிலான பட வாய்ப்புகள் குவிந்தது என்று தான் கூறவேண்டும். அந்த சமயத்தில் தான் நடிகை ஸ்ரீதேவி பிரியமான தோழி, தித்திக்குதே, நின்னே இஷ்டப்பட்டனு, தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்த படங்கள் மூலம் பிரபல நடிகையாகவும் மாறினார். ஆனால் இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.
அதன் பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு முழுவதும் விலகியுள்ளார். இந்நிலையில் தான் தற்போது இவர் தான் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். இது குறித்து நிகழ்ச்சியில் (Actress Sridevi Vijayakumar Latest Interview) பேசிய அவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று என்னை யாரும் கூறவில்லை. ஆனால் என் கணவர் என்னை சினிமாவில் நடிக்க சொன்னார் என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் உனக்கு நல்ல திறமை இருக்கிறது நீ நடிக்கும் கதாபாத்திரம் நன்றாக இருக்கும் மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நீ திரும்பவும் நடிக்கலாம். திருமணத்திற்குப் பிறகு நான் ஒரு பதிய வாழ்க்கையைத் தொடங்குவது கட்டாயமான ஒன்று. எனவே, அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு பழக சிறிது நேரம் பிடித்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தான் ஐந்து வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கியதையும் மேலும் அதள் பிறகு தான் சினிமாவை விட்டு விலகி இருந்தது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு எதிர்பாராதவிதமாக இந்த இடைவெளி ஏற்பட்டுள்ளதுத என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இனி மீண்டும் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் தற்போது சில நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டு வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…