செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன்..!

தமிழ்நாட்டின் அமைச்சராக பதவி வகிப்பவர் தான் உதயநிதி ஸ்டாலின். இவர் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் சனாதான தர்மத்துக்கு எதிராக பேசினார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனவே பெங்களூரு நீதிமன்றத்தில் அவரை ஆஜாராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பபட்டது. ஆனால் அவர் அஜராகாத நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று இந்த மாநாட்டிற்கு பெயர் வைத்திருக்க கூடாது என்றும் சனாதான ஒழிப்பு மாநாடு என்று பெயர் வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் அவர் சில விசயங்களை நாம் எதிர்க்க முடியாது என்றும் ஒழிக்க தான் வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறு அவர் பேசியது சனாதன தர்மத்திற்கு எதிராக அவர் பேசியுள்ளார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மீது சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சுக்கு பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் பரமேஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கானது (Udhayanidhi Stalin Sanatana Controversy) கடந்த முறை விசாரணைக்கு வந்தது அப்போது இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி மார்ச் 4-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் தான் நேற்று (04.03.2024) இந்த வழக்கானது நீதிபதி பிரீத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஆனால் அப்போது உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை மேலும் அவரது சார்பில் எந்த வக்கீலும் ஆஜராகவில்லை. எனவே மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்மனை அங்குள்ள உள்ளூர் போலீஸ் இணை கமிஷனர் மூலம் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: Swiggy நிறுவனத்தின் தோசை விற்பனை..! கடந்த 12 மாதத்தில் எத்தனை மில்லியன் தெரியுமா?
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago