இந்த வருடத்திற்கான கோடை காலம் தொடங்கிவிட்டது. ஆரம்பத்திலேயே வெயில் மிகவும் அதிகமாக உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு யோசிக்கும் அளவுக்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த வாரம் முழுவதும் பலைவனம் போன்று தான் வெயில் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது இந்த வாரம் வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த தகவலின் படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலையில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி இன்று மற்றும் நாளை அதாவது மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் வெப்பமானது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மார்ச் 11-ம் தேதி முதல் மார்ச் 17-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரம் முழுவதும் வானிலையானது மிகவும் வறண்டு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் எனினும் அப்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் முழுவதும் வெயில் மிகவும் அதிகமாக தான் இருக்கும். எனவே மக்கள் முடிந்தவரை தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் பொருட்களை உட்கொள்ளவேண்டும் என்றும் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மற்றும் முதியவர்கள் அனைவரும் வெளியே செல்லும் போது கட்டாயம் குடை எடுத்து செல்லுமாறும் கூறபட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: இந்த வெயிலுக்கு 5 நிமிடத்தில் சுவையான ராகி கூழ் செய்யலாம் வாங்க..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…