தமிழகத்தில் 18-வது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரங்கள் என்று தமிழகம் தேர்தல் களம் அனல் பறக்கிறது. தமிழ்நாட்டில் வருகின்ற 19-ஆம் தேதி மக்களவை தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழகத்தில் தொடர்ந்து காவல் துறையினர்கள் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மது கடைகள் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 17-தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு (3 days holiday for tasmac in tamilnadu 2024) தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தாெடர்ந்து பல கெடுபிடிகள் அதிகமாகி வருகிறது.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4-ஆம் தேதியும் தமிழகத்தில் டாஸ்மாக் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் (3 days holiday for Tasmac) உள்ள மது பிரியர்களை கவலையடைய செய்துள்ளது என்றே கூறலாம்.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். குடிமகன்கள் தங்களுக்கு தேவையான மதுப்பாட்டில்களை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தலுக்கு முதல் மூன்று நாட்கள் (Madhu Kadaikalukku 3 Natkal Vidumurai) எவ்வித அசாம்பாவிதங்களும் நடக்க கூடாது என்பதற்காகவும், அதே சமயம் உத்தரவை மீறி செயல்படும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், பார்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களின் கீழ் செயல்படும் பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள் போன்ற எந்தவித மது சம்பந்தமான கடைகளும் வருகின்ற ஏப்ரல் 21-ம் தேதி ஞாயிற்றுகிழமை (Mahavir Jayanti Tasmac Closed in TN) இயங்க அனுமதி இல்லை என்றும் மற்றும் தொழிலாளர்கள் தினமான மே1 தேதியும் மதுபான கடைகள் இயங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…