தமிழகத்தில் இந்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு வெப்பநிலை அதிகளவில் இருப்பதால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு (Govt School Teacher) முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பள்ளிக்கல்வித்துறை அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வி இயக்குநர்களுடன் இணைந்து (TN Govt Announcement) வெளியிட்டுள்ளது. இந்நத வழிகாட்டலில் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதைத் தடுக்கும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பள்ளிக்கல்வித்துறை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வி இயக்கமும், தொடக்கக் கல்வி இயக்கமும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. இதன்படி பள்ளிக் கல்வி இயக்குநர் க. அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (Elementary School Teachers) சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய குழுந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், பள்ளி குழந்தைகளின் நலனை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை உடல் ரீதயாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்றும், அவ்வாறு தவறு செய்யும் குழந்தைகளை அடிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் நல்ல முறையில் நடந்துக்கொள்வதற்கு மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் வாழ்வியல் திறன் கல்வி அளிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் குழுந்தைகள் தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்க புகார் பெட்டி பள்ளிகளில் அமைக்க வேண்டும் என்றும், கடினமான வார்த்தைகளால் அவர்களை திட்டக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளை எந்த வகையிலும் அடிக்க மாட்டோம் என்று ஆசிரியர்களிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் உறுதிமொழி (New rules for Govt School teacher in TN) பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்த குட் நியூஸ்… மகிழ்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…