இன்றைய காலகட்டத்தில் தகவல் தொடர்பிற்காக பல தொழில்நுட்ப முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் முதன் முதலில் தகவல் தொடர்பிற்கு கடைபிடிக்கப்பட்ட முறை என்றால் அது தபால் முறை தான். இப்போது பல வகையான புதிய தொழில்நுட்ப இந்த காலக்கட்டத்திலும் தபால் முறைக்கு என்று தனி அங்கீகாரம் இருந்துதான் வருகிறது.
மேலும் இந்த காலத்திலும் கடிதங்களை தபால் மூலம் அனுப்பும் வாடிக்கையாளர்கள் இருக்க தான் செய்கின்றனர். இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை அளிக்கும் வகையில் தான் பல நிகழ்வுகள் தொர்ந்து அரங்கேறிவருகிறது. அந்த வகையில் தான் ஒன்றுதான் கடலுக்கு அடியில் தபால் பெட்டி (Post Box in Underwater) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டியில் உங்களுடைய கடிதத்தை போடவேண்டும் என்றால் கடலுக்கு அடியில் நீந்தி சென்றுதான் போடவேண்டும். இது ஒரு சுவாரஸ்யமான பயணமாக இருக்கும். இந்த தபால் பெட்டி ஜாப்பானின் சுசாமி பே என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது கரையில் இருந்து சுமார் 10 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்டியில், உங்களுடைய கடிதத்தை போடவேண்டும் என்றால் நீந்தி சென்றுதான் போடவேண்டும். இந்த தபால் பெட்டியில் போடப்படும் கடிதங்களுக்காகவே தண்ணீரால் பாதிக்காத தபால் அட்டைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த தபால் அட்டையில் ஆயில் பெயிட் மூலம் நாம் எழுத விரும்புவதை எழுதவேண்டும்.
அதன் பிறகு இதற்காக பணிபுரிபவர்கள் இந்த கடிதங்களை எடுத்து அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைப்பர். இந்த தபால் பெட்டியை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 2002 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இந்த தபால் பெட்டி இடம்பெற்றது. இந்த தபால் பெட்டியில் (Underwater Post Box) நாள் ஒன்றுக்கு சுமார் 1000 முதல் 1,500 வரை தபால் அட்டைகள் போடப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: புதிதாக 2 வானிலை ரேடார்கள் அமைக்கப்படும்..! மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் தகவல்..! |
தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…
தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…
உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…
Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…